court

img

தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிக்கை... ராமர் பால வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.... புதிய தலைமை நீதிபதி முடிவு எடுப்பார் என அறிவிப்பு....

புதுதில்லி:
 ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13  மணல் தீடைகள் உள்ளன. இது ராமர் காலத்தில்கட்டப்பட்ட பாலம் என இதிகாசங்களில் கூறப்படுவதாக தெரிவித்து, தென்தமிழகத்திற்கு பலனளிக்கும் திட்டமான சேது சமுத்திர திட்டத்திற்கு  பாஜக அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் ராமர் பாலம் இந்துக்களின் அடையாளம், இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகஉள்ளதால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி  உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்குதொடர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு,இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு வராமல்  நிலுவையில் இருந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணிய சுவாமி கடந்தவருடம் ஜனவரி மாதம் முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ராமர் பாலத்தைதேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்  உச்சநீதிமன்றத்தை அணுகுமாறும் சுப்பிரமணிய சுவாமிக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

ராமர் பாலம் என்பது மணல்திட்டுதான்

இதனிடையே, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தரப்பில் ஒரு புதிய இடைக்கால மனு ஒன்றை கடந்த பிப்ரவரிமாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். அதில், ராமர் பாலத்தை  தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கூடாது. இது பொதுமக்களின் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே ஆகும். இதற்காக பல்வேறு தொல்லியல் ஆய்வு முடிவுகள் இருக்கிறது. இதைத்தவிர ராமர் பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளது. மீதம் உள்ள பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒருவேளை இது தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படிபாதுகாக்க இயலும். அதனால் இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் கூறியது போல இந்தாண்டு ராமர் பாலம் தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்து ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க கோரினார். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க காலம் தேவைப்படும். அறிவியல் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். நம்பிக்கை மற்றும் அடையாளம் எனபல்வேறு விவரங்கள் குறித்து ஆராயவேண்டியுள்ளது. அதற்கான நேரம் தற்போது இல்லை. ஏனென்றால் ஏப்ரல்  24-ம் தேதியுடன் பதவி முடியவுள்ள காரணத்தினால், மனுவை விசாரிக்கவில்லை. அடுத்து வரும்தலைமை நீதிபதி மனுவை விசாரிப்பது குறித்து முடிவு எடுப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

;