ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறிவிப்பு
புதுதில்லி, ஜூன் 13- ஊனமுற்றோருக்கு அதிகாரமளித்திடும் துறை அளித்துள்ள சான்றிதழ் ஏற்றுக்கொள்ள முடியாது, மாறாக ரயில்வே அளித்துள்ள சான்றிதழ்தான் தேவை என்று ரயில்வே வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரயிலில் மாற்றுத்திறனாளிகள் சலுகைகள் பெறுவதற்கு ரயில்வே அளித்திடும் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை யைப் பெற்றிருக்க வேண்டும் என்று ரயில்வே யின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள் ளது. இதனை எதிர்த்து ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளி தரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணம் செய்யும்போது சலுகைகளைப் பெற்றுக் கொள்ள ரயில்வே அளித்திடும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று சுற்ற றிக்கை வெளியிட்டிருக்கிறது. ஒன்றிய அர சாங்கத்தின் கீழ் இயங்கும் ஊனமுற்றோருக்கு அதிகாரம் அளித்திடும் துறை (Department for Empowerment of Persons with Disabilities) வழங்கியுள்ள நிகரற்ற ஊனமுற் றோர் அடையாள அட்டை (UDIDF-Unique Disability Identity Card)யை ரயில்வே துறை கண்டுகொள்ளவில்லை. இதற்கு எதிராக ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள ஊனமுற்றோ ருக்கு அதிகாரம் அளித்திடும் துறை வழங்கி யுள்ள அடையாள அட்டையை மட்டுமே, அனைத்துத் துறைகளும் ஏற்றுக்கொள்வது போல் ரயில்வேயும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கோரியது.
ஆயினும் உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்திட்ட தீர்ப்புரையில் ஒன்றிய அரசாங்கத் தின் ஊனமுற்றோருக்கு அதிகாரம் அளித்தி டும் துறை வழங்கியுள்ள அடையாள அட்டை யை ஏற்றுக்கொண்டுள்ள அதே சமயத்தில், ரயில்வே அளித்திடும் அடையாள அட்டையை யும் ஊனமுற்றோர் வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது முரண்பாடான தாக இருக்கிறது. இதன் காரணமாக ஊனமுற்றோர் பல்வேறு துறைகளிலும் பயன்களை அடைவதற்காக ஒன்றிய அரசாங்கத்தின் துறை அளித்துள்ள அடையாள அட்டை போதுமானது என்கிற அம்சம், ரயில்வே துறையானது தான் அளித் துள்ள அடையாள அட்டையைத்தான் பயன் படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்ப தன் மூலம் தகர்ந்துவிடுகிறது. இவ்வாறு தனி அடையாள அட்டை கோரு வதன் மூலம் ரயில்வே, 2016ஆம் ஆண்டு ஊன முற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தை மீறு கிறது என்று மனுதாரர் கூறியுள்ள விவரங்களை உயர்நீதிமன்றம் முழுமையாக கண்டுகொள் ளாமல் விட்டுவிட்டது. உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மொத்தம் உள்ள ஒன்பது பக்கங்களில் ஐந்தரை பக்கங்கள் ரயில்வே அளித்திடும் பல்வேறு சலு கைகளைக் குறிப்பிட்டிருக்கிறது. சலுகைகள் என்பவை தாராளமாக அளித் துள்ள நன்கொடை எனக் கருதக்கூடாது. இவை விளிம்புநிலை மக்களுக்கு அரசால் அளிக்கப் பட வேண்டிய கடமையாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தன் வலு வான மகிழ்ச்சியின்மையைத் தெரிவித்திடும் அதே சமயத்தில், இதற்கெதிராக ஊனமுற் றோர் உரிமைகளுக்கான மேடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். (ந.நி.)