court

img

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - உச்ச நீதிமன்றம்

மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; அமைச்சரவை முடிவுப்படி சட்டப்பேரவையை கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பதாக அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு ஆளுநரின் செயல்பாட்டுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்தது. மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; அமைச்சரவை முடிவுப்படி சட்டப்பேரவையை கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.