புதுதில்லி, அக். 6 - சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பீகார் அரசு வெளியிடு வதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாநில அரசின் கொள்கை முடி வுகளில் தலையிட முடியாது என் றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அம்மாநில ‘மகா கூட்டணி அரசு’, இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. முன்னதாக கணக்கெடுப்பை நடத்துவதற்கும், கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும் தடைகோரி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், பீகார் அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அனு மதி அளித்து பாட்னா உயர் நீதி மன்றம் ஆகஸ்ட் 1 அன்று தீர்ப்ப ளித்தது. அடுத்தநாளே, சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பீகார் அரசு வெளியிட்டது. இதில், பீகார் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர், மாநில மக்கள் தொகையில் 63 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இதனிடையே, பீகார் அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அனு மதி அளித்த பாட்னா உயர் நீதி மன்றத்தின் ஆகஸ்ட் 1 உத்தரவை எதிர்த்து, யூத் பார் ஈக்வாலிட்டி மற்றும் ‘ஏக் சோச் ஏக் பிரயாஸ்’ என்ற அமைப்புகள் உச்ச நீதிமன்ற த்தில் மேல்முறையீடு செய்தன. “உச்சநீதிமன்றத்தின் உத்தர வின்படி சாதிவாரி கணக்கெடுப் பின் தகவல்கள் சேகரிக்கப்பட வில்லை என்றும், கணக்கெடுப்பு க்கான விவரங்களைச் சேகரிப்ப தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை” என்றும் அதில் கூறியிருந்தன.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, சாதிவாரிக் கணக் கெடுப்பு விவரங்களை பீகார் அரசு வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. “இந்த நேரத்தில் நாங்கள் எதை யும் நிறுத்த முடியாது. மாநில அர சாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த அரசாக இருந்தாலும் சரி, கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது. அது தவறாக முடியும்” என்று நீதிபதி கள் தெரிவித்துள்ளனர். மனுதாரர்களின் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் அப ராஜிதா சிங், “இந்த விவகாரத்தில் தனியுரிமை மீறப்பட்டிருப்பதாக வும், உயர் நீதிமன்றத்தின் உத்த ரவு தவறானது” என்றும் தெரி வித்தார். “சாதி விவரங்களைக் கோருவதற்கான அரசின் முடிவு, நீதிபதி கே.எஸ். புட்டசாமி தலை மையிலான உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்புக்கு முரணானது என்பதால் இடைக்கால உத்தர வை பிறப்பிக்க வேண்டும்”என்றார். பீகார் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தரவுகளை வெளியிடுவ தற்கு எதிராக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று வாதிட்டார். அப்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு தகவல்களில், “எந்த ஒரு தனிநபரின் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்பட வில்லை. அதனால், தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்பது தவறான வாதம்” என்று குறிப்பிட்ட நீதிபதி கள், இந்த வழக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு பட்டிய லிடப்படுவதாகவும், மனு மீது பீகார் அரசு 4 வாரங்களுக்குள் பதி லளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.