court

‘ஆளுநர் எந்தச் சூழலில் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்?’

கொச்சி, டிச. 29 - மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக் களை, ஆளுநர் எந்தச் சூழ்நிலையில், குடி யரசுத் தலைவருக்கு அனுப்பலாம்? என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் கேரள அரசு வழிகாட்டுதல்களை கேட்டுள்ளது.  குறிப்பாக, அரசியலமைப்புப் பிரிவு 200-இன் விதி 1-இல் ஆளுநருக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தில் ‘கூடிய விரைவில்’ என்ற சொற்றொடருக்கான விளக்கத்தைக் கேட்டுள்ள கேரள அரசு, ஆளுநர் மசோதாக் களை நிறுத்தி வைப்பதற்கு காலக்கெடு நிர்ண யிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. கேரள சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஒப்புதல் அளிக்காமல், அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவின் முதல் விதியில் உள்ள ‘கூடிய விரைவில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்திருந்தார். ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மனு வை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளீர்கள். அதற்கான அதிகாரம் உங்களுக்கு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியதுடன், “நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. நீங்கள் நியமனம் செய்யப்பட்டவர் என்பதை மறந்துவிட வேண்டாம்” என ஆளுநரை இடித்துரைத்தது. அப்போதும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், நிறுத்திவைத்த 8 மசோதாக்களில் 7 மசோ தாக்களை-  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதை யொட்டி நவம்பர் 20 அன்று- திடீரென  குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார். இந்த 7 மசோதா க்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கான காரணம் என்ன? என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கேரள அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சசி, ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததன் மூலம் அரசி யல் சட்டத்தின் அடிப்படையில் அவர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாக அறி விக்க வேண்டும் என வலியுறுத்தினார். சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய தீர்மா னங்களை ஆளுநர் எந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்; அல்லது எப்போது நிறுத்தி வைக்கலாம், அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.  இந்த வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது.