court

img

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இரு நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. காலியாக உள்ள 2 நீதிபதிகள் பணியிடங்களுக்கு, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் பெயர்களை கொலீஜியம் பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று ஒப்புதல் வழக்கினார்.  
அதன்படி, நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.