court

img

7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளுக்குத் தீர்வு

சென்னை, பிப்.25-  கொரோனா கால கட்டத்தை உள்ளடக்கிய கடந்த 7 ஆண்டுகளில் 9  கோடி வழக்குகளுக்கு இந்திய நீதித்துறை தீர்வு கண்டுள்ளதாக நீதித் துறை அகாடமியின் இயக்குநர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி தெரிவித்தார். சென்னை ராஜா அண் ணாமலை புரத்திலுள்ள தமிழ்நாடு மாநில நீதித்  துறை பயிற்சி மையத்தில் தேசிய நீதித் துறை அகாடமி மற்றும் தமிழ்நாடு  மாநில நீதித் துறை அகாடமி சார்பில் சமகால நீதித் துறையின் வளர்ச்சிகள், சட்டம் மற்றும் தொழில் நுட்பத்தின் மூலம் நீதியை  வலுப்படுத்துதல் தொடர் பான இரண்டு நாள்  கருத்தரங்கம் நடைபெற்றது.  இதனை உச்ச நீதிமன்ற நீதி பதி ஏ.எஸ் ஒகா, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யும், தேசிய நீதித் துறை  அகாடமியின் இயக்குநரு மான நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் ஷா சாஹி, “கொரோனா காலகட்டத்தை உள்ளடக்கிய 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில்  நாடு முழுவதும் தாக்கல்  செய்யப்பட்ட 10 கோடி  வழக்குகளில் 9 கோடி  வழக்குகள் விசாரிக்கப் பட்டு தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது” என்றார். சென்னை உயர் நீதி மன்ற பொறுப்புத் தலைமை  நீதிபதி டி .ராஜா பேசுகை யில், “தேசிய நீதித் துறை  பயிலகம், கொரோனா கால கட்டத்தில் காணொலி காட்சி மூலம் 64 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமே 40 லட்சம் வழக்கு களை விசாரித்து உள்ளது. மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதில் தமிழ் நாடு மாநில நீதித்துறை பயிலகம் உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்கிறது” என்றார்.