court

img

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோவிலில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு

சென்னை, ஜன. 6- நாமக்கல் மாவட்டத்தில், கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்ன மலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என  அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் வழக்கில் சங்கர் உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த 2 நீதிபதிகளும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று(ஜன.6) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  அப்போது, கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல் ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள்  அழைத்து சென்று கொலை செய்ததற்கான  ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். கோகுல் ராஜூம், சுவாதியும் பேசிக்கொண்டிருந்த போது, தான் சென்று விசாரணை நடத்தி யதை தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ள தையும்  சுட்டிக்காட்டினார். மேலும் கோகுல்ராஜிடம் இருந்து சுவாதியை பிரித்து அழைத்து செல்வதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல் ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொளி குற்றம் சாட்டப் பட்டவர்களின் செல்போனில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். 

இதைத்தொடர்ந்து, இது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக கோகுல்ராஜின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோகுல்ராஜூடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளது. அதன் பிறகு  நடந்த நிகழ்வுகளுக்கு   ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர்.  இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங் கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உணர்வுகள் அடிப் படையில் அல்ல எனவும் தெளிவுபடுத்தினர்.  மேலும், கோகுல்ராஜ் இருந்ததாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு ஜன.22 அன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ள வும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள் வதற்காக ஜனவரி 22இல் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணை மீண்டும் சனிக்கிழமைக்கு (ஜன. 7) தள்ளி வைத்தனர்.

;