court

img

தேர்தல் ஆணையம் குறித்து உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கள் பொருத்தமற்றவை.....

புதுதில்லி:
கொரோனாவை பரப்பியதற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது மிகவும் கடுமையானது; பொருத்தமற்றதுதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூகஇடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ய அனுமதித்ததே தொற்று பரவலுக்கான காரணம். இதற்காக தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை’ என்று கடுமையாக கண்டித்தனர்.தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள். உள்நோக்கத்துடன் உயர்நீதிமன்றம்  கருத்து கூறவில்லை, கருத்துக்களை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த மனு மீதான விசாரணை மே 6 வியாழனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம்  கூறியது மிகவும் கடுமையானது பொருத்தமற்றவைதான். கொரோனா பரவதேர்தல் ஆணையம் தான் காரணம் என தீர்க்கமாக முடிவு செய்து விட முடியாது.  தேர்தல் ஆணைய உத்தரவுகளை பின்பற்றுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.  தீர்ப்பில் உள்ள மொழி அரசியலமைப்பு விழுமியங்களை உணரக்கூடியதாக இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். நீதிமன்ற விசாரணை நடைமுறையை செய்தியாக்கக் கூடாது என ஊடகங்களை கூற முடியாது. நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை பற்றி செய்தி சேகரிப்பதும் ஊடக சுதந்திரம் தான்.  ஜனநாயகத்திற்கு உயிர்ச்சக்தியைச் சேர்ப்பதில் ஊடகங்கள் ஒரு முக்கியமான செயல்பாட்டை வெளியிடுகின்றன. நீதிமன்ற நடவடிக்கைகளை எந்த வகையிலும் மறைப்பதைத் தடுக்க முடியாது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை உத்தரவுகளில் தீர்ப்பின் ஒரு பகுதியாக அந்தக் கருத்துக்கள் இல்லை. உயர்நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். இதுகுறித்து மேலும் ஆராய வேண்டிய அவசியமில்லை.அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் மக்களின் உயிர்களையும் சுதந்திரத்தை யும் பாதுகாக்கும் பணியை உயர்நீதிமன்றம் எதிர்கொண்டது.பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் நீதித்துறை விஷயங்களுக்கு நீண்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

                        ************

தொடர்புடைய செய்தி 

கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா  மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும்  இது குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.  

 

;