மதுரை:
கொரோனா தொற்றுக் காலத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெளிவுபடுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், “கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது.இந்தச் சூழலில் அதிகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். ஆனால் பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை கோரியும்பயனில்லை. கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் போர்க்காலஅடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கட்சியினர் பேரணி,கூட்டம் உள்ளிட்டவை நடத்தத் தடைவிதித்துஉத்தரவிட வேண்டும்” எனக்கூறியிருந்தார்.இந்த வழக்கு செவ்வாயன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யில் அரசு போதியக் கவனம் செலுத்தி வருகிறது. எனவே இதில் நீதிமன்றம் புதிதாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.