court

img

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை!

புதுதில்லி,மார்ச்.26- குழந்தையைக் கத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
11 வயது குழந்தையைப் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய இருவர் முயன்ற வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயணன், பாதிக்கப்பட்டவரின் மார்பகங்களைத் தொடுவதோ, ஆடைகளை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகாது எனத் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதில் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கிறது என்றும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.