court

img

பரங்கிமலை கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிப்பு!

சென்னை,டிசம்பர்.30- பரங்கிமலையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியைத் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குமார் தான் குற்றவாளி என அல்லிக்குளம் நீதிமன்றம் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பு  வழங்கியது. 
இதனையடுத்து குற்றவாளியின் தண்டனை விவரங்கள் 30ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் குற்றவாளி சதீஷ் குமாருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது