court

img

ரூ.1000 கோடி கடன் வாங்கியவர்கள் தப்புகின்றனர்; சிறுகடன் வாங்கியவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.... வங்கிகள் குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி

மதுரை:
ரூ.1000 கோடிகள் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளிடம் பணம் வசூல் செய்கிறோம் என்று கூறி துன்புறுத்தப்படுகின்றனர் என வங்கிகளின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ திருச்சிராப்பள்ளி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் (ஃபெடரல் வங்கி நீண்ட காலக் கடனாக ரூ.50 லட்சம் மற்றும் வீட்டுக் கடனாக ரூ.15 லட்சம் விவசாய நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்றேன். இதில் வீட்டுக் கடனுக்காக ரூ.18 லட்சம் நீண்ட கால கடன் தொகையில் ரூ.25 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்நிலைமை சரியில்லாததால் வங்கியில் வாங்கிய கடனை சரிவர  கட்ட முடியாததால்எனது விவசாய நிலத்தை ஏலம் விடு வதற்கான நடவடிக்கைகளை தனியார் வங்கிமேற்கொண்டது. இதனால் விவசாய நிலத்தைவிற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறிநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ. 75 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. அதனடிப்படையில் ரூ.75 லட்சத்திற்கான வரைவு காசோலையை சென்னையில் உள்ள தனியார் வங்கி மேலாளரிடம் கொடுப்ப தற்காக அக்டோபர் 7-ஆம் தேதி வங்கிக்கு சென்றபோது வங்கி மேலாளர் அதை வாங்க மறுத்து என் மீது வீசி எறிந்தார். நீதிமன்றத்தில்வழக்கும்  நடைபெற்று வரும் நிலையில் விவசாய நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  
எனவே நீதிமன்ற உத்தரவை கடை பிடிக்க வேண்டும். தனியாரிடம் பணம் வசூலிப்பதற்காக விவசாய நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு வெள்ளியன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வங்கிகள் பணம் வசூலிக்க மூன்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்பே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என கருத்துத் தெரிவித்தனர்.மேலும், “பணம் கட்ட முடியாதவர் களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாய மற்றது- எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றன. 

தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்து கடன் தொகையை வசூலிக்கின்றன. இவ்வாறு செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம். ரூ.1000கோடிகள் கடன் பெற்றவர்கள் வெளிநாடு களுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள்வாங்கிய ஏழைகளிடம் பணம் வசூல்செய்கிறோம் என்று கூறி துன்புறுத்தப்படு கின்றனர்.இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி வரைவு காசோலையை தூக்கி எறிந்தவங்கியின் மேலாளர் கூறும் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும். அந்த வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;