court

img

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... உயர்நீதிமன்றம் உத்தரவு....

சென்னை:
சட்ட விரோத கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற் போதைய அதிகாரிகளுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கனிமவள கொள்ளையை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் விவகாரத்தில், நாமக்கல் உள்பட 4 மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் பற்றாக்குறை உள்ளது என்ற அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பணிகளை விரைவுபடுத்துமாறும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்குமாறும் உத்தரவிட்டனர்.

;