court

img

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படுமா? நாளைக்குள் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தஉத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதிக்குள் கூடுதல் பிரமாணப்பத்திரத்தை  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சித்ரவதைகளை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து காவல்நிலை யங்களிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை சித்ரவதை தொடர்பான வழக்கில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.இதுதொடர்பான விசாரணை செவ்வாயன்று மீண்டும் நடைபெற்றது.அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  யோகேஷ் கன்னா கூறுகையில், தமிழகத்தில் முக்கிய பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம்உள்ள 1,567 காவல் நிலையங்களில் 770-ல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 720 காவல் நிலையங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள காவல்நிலை யங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதலே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும்நடவடிக்கையை தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

அப்போது, முக்கியம் அல்லாதபகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அடிப்பதற்கு வசதியாக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வில்லையா என்று நீதிபதிகள்  கேள்வி எழுப்பினர். அதற்கு, காவல்நிலையங் களில் உள்ள லாக்-அப் அறைகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சித்தார்த் தவே கூறுகையில், சிக்கிமில் 2 கண்காணிப்பு கேமிராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள் ளன. அதுவும் சிறையில்தான் பொருத்தப்பட்டுள்ளன. மிசோரமில் 40 சிறைகளில் 147 கேமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. மத்தியப்பிரதேசத்தில் 1,117 காவல் நிலையங்களில் 859 கேமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளன ன மாநிலவாரியான விவரங்களை எடுத்துரைத் தார்.

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல்கே.கே.வேணுகோபால், கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இயங்க இணைய வசதி அவசியமாகிறது. அங்குள்ள காவல்நிலையங் களில் மின்சாரம், இணையவசதி வழங்குவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.அப்போது, மாவட்டம் வாரியாக காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள், அவை செயல்படுகின்றனவா என்ற விவரம் வேண்டும். அதேபோல, கண்காணிப்பு கேமிராக்களை யார் கண்காணித்து, போலீஸ் அத்துமீறல், அராஜகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது என்பதுதொடர்பான விவரங்கள் வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமிரா பதிவுகள் 45 நாட்களுக்குமேல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதுதொடர்பான தொழில்நுட்பங் கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும் ஒலிப்பதிவுடனான கேமிராபொருத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் என்ன என்று கேள்வி எழுப்பி, இந்த அனைத்து கேள்விகளுக்கான பதிலை உள்ளடக்கி மேலதிக பரிந்துரைகளோடு கூடுதல் பிரமாணபத்திரத்தை வரும் 27 ஆம் தேதிக்குள் தாக்கல்செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சித்தார்த் தவேவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின்  மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

;