சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளில் கூட ஜாமின் வழங்குவது என்பது விதி என்றும் சிறை என்பது விதிவிலக்குதான் என்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜார்காண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் சேர்ந்து பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் கைதான பிரேம் பிரகாஷ் என்பவரின் ஜாமின் மனு மீதான வழக்கு விசாரணையில் ஜானின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.