court

img

கனிம வளங்கள் கடத்தலைத் தடுக்க தொடர் சோதனைகள்: அரசு தகவல்

சென்னை, பிப். 24- கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தொடர் சோதனை உள் ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர்,  மேட்டுப்பாளையம், அன்னனூர்,  காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 விழுக்காடு குவாரிகள் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர்

என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா,  நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வு, மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  தமிழ்நாட்டில் அரசுக்கு உத்தரவிட்டி ருந்தது. அதன்படி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குவாரிகள் இயங்கி வருகிறதா? என வட்டாட் சியர்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் மனு வில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் சாட்டின்படி, கோவை மாவட்டத் தில் அனுமதியின்றி சட்ட விரோத மாக குவாரிகள் எதுவும் இயங்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.  மேலும், கனிம வளங்கள் கேரளா வுக்கு கடத்தப்படுவதாக கூறப்பட்ட புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது என்றும், அந்த குழுக் கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் சோதனை உள்ளிட்ட  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவ தாகவும் தெரிவித்துள்ளது.