உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி
புதுதில்லி, நவ.23- இந்தியாவில் தேர்தல் ஆணையரின் பத விக்காலம் 6 ஆண்டுகள் என்ற நிலையில், கடந்த 2004-க்குப் பின், ஒருவர் கூட முழு பத விக்காலமும் பதவியில் அமர்த்தப்படவில்லை; 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணை யர்கள் மாற்றப்பட்டு விட்டனர்; இது ஜன நாயக நடைமுறைகளுக்கு சரியானதல்ல என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரி வித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து, அரசி யலமைப்புச் சட்டத்தில் தெளிவான வரையறை கள் உருவாக்கப்படவில்லை என்பதற்காக, இவ் விஷயத்தில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்படுவது சரியல்ல என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிகளை நியமிப்பதற்கு இருப்பது போல, தேர்தல் ஆணையர்களை நிய மிப்பதற்கும் ‘கொலீஜியம்’ போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள், நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசி யல் சாசன அமர்வு முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணை யர்கள் நியமன விஷயத்தில் உச்ச நீதிமன்றம் குறைகளாக பார்க்கும் விஷயங்களை நீதிபதி கே.எம். ஜோசப் விரிவாக பதிவு செய்தார். முன்னதாக, வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான அட் டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கும் தற்போதைய நடைமுறையை இந்திய அரசி யல் சட்டத்துக்கு எதிரானது என கூற முடியாது. அந்த நடைமுறையை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது” என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி கே.எம். ஜோசப், “இந்தியாவின் ஆட்சி அமைப்பு முறை ஜனநாயக வடிவை கொண்டுள்ளது. ஜனநாய கத்துக்கு அவ்வப்போது தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. எனவே இதில் தூய்மையும் வெளிப்படைத்தன்மையும் மிக விரிவாக பிணைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக, அரசியலமைப்பின், 324-வது பிரிவில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் என்பவர், 6 ஆண்டு அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம். ஆனால், இந்த சட்டப் பிரிவை, ஒன்றிய அரசாட்சியில் உள்ளவர்கள் தொடர்ந்து தங்கள் இஷ்டத் துக்கு மீறி வருகின்றனர். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு குறுகிய காலமே பதவி அளிக்கப்படுகிறது.
கடந்த, 2004-இல் இருந்து 2014 வரை, காங்கி ரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி ஆட்சியின்போது, ஆறு தலைமை தேர்தல் ஆணையர்கள் இருந்துள்ளனர். தற்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின், 8 ஆண்டுகளில், 8 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாறிவிட்டனர். இந்தப் பதவியில், முன்னாள் ஐஏஎஸ் அதி காரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களு டைய வயது அரசுக்கு முன்பே தெரியும். அப்படி யிருந்தும் அதிக காலம் அவர்கள் பதவியில் இல்லாத வகையில் 65 வயதை நெருங்கும் நேரத்தில் பதவி அளிக்கிறார்கள். கடந்த 18 ஆண்டுகளில், எந்த ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரும் இரண்டாண்டு காலம் வரை கூட பதவியில் இருந்ததில்லை.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக நாடாளுமன்றம் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியலமைப்பு நிர்ணய அவை விரும்பியது. ஆனால் இந்திய அரசிய லமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72 ஆண்டு கள் ஆனபோதிலும், அதுதொடர்பாக எந்த வொரு தனிச்சட்டமும் இல்லை. நாட்டைப் பொறுத்தவரை இது கவலைக்குரிய போக்காக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய அர சியல் சட்டத்தில் வழியில்லை. அரசியல் சட் டத்தின் இந்த மவுனம் நேர்மையற்ற முறையில் சுயநலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஏது மின்றி எதுவும் செய்ய முடியாது. இந்த விவ காரம் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கு மாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றத் தால் கூற முடியாது. உச்சநீதிமன்றமும் அதைச் செய்யாது. ஆனால் தற்போது தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிகிறது.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பான தற்போதைய நடைமுறையை உச்ச நீதிமன்றம் தாண்டிச் செல்ல ஆளுங்கட்சியிடம் இருந்து எதிர்ப்பு இருக்கும். அதற்காக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிராதரவாக எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளது என்று கூற முடியாது” என்று தெரிவித்தார். “கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையர்கள் தேர்வு உள்பட பல்வேறு அர சியல் சாசன அமைப்புகளின் நியமனங்களுக்கு கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். அவர்களில் பாஜக முதுபெரும் தலைவர் எல்.கே. அத்வானியும் ஒருவர்” என் பதை நினைவுபடுத்திய நீதிபதி கே.எம். ஜோசப், “தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகிய மூன்று பேரின் வலு குறைந்த தோள்களில் பேரளவு அதிகாரங் களை அரசியல் சட்டம் சுமத்தியுள்ளது. டி.என். சேஷன் போன்ற தலைமை தேர்தல் ஆணை யர்கள் அரிதாகவே கிடைக்கின்றனர். எனவே தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு சிறந்த நபரை கண்டறிய வேண்டியுள்ளது. அந்த நபரை எப்படி அடையாளம் காண்பது, அவரை எவ் வாறு நியமிப்பது என்பதே தற்போதைய கேள்வி. இன்றைய இந்திய தேர்தல் ஆணை யம் சுதந்திரமாக செயல்படுவதாக ஒன்றிய அரசு வாய்மொழியாக மட்டுமே கூறி வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல் பாட்டை பார்த்தால் அப்படி தெரியவில்லை. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற கூறவில்லை. மாறாக, தேர்தல் ஆணை யத்தை சுதந்திரமான அமைப்பாக மாற்ற ஒரு சிஸ்டத்தை கொண்டு வரவே முயற்சிக் கிறோம். எனவே, தலைமை தேர்தல் ஆணை யர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நிய மனத்தில் ஒன்றிய அரசு ஏதேனும் வழிமுறை யை பின்பற்றுகிறதா என்பதை உச்சநீதி மன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்” என் றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் புதன்கிழமையன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.