cinema

img

நடிகை கங்கனாவுக்கு மும்பை நீதிமன்றம் சம்மன்...   

மும்பை 
பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் கடந்தாண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த தருணத்தில் பாலிவுட் நடிகையையும், வெளிப்படையான பாஜக ஆதரவாளருமான கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

"கங்கனாவின் கருத்து எனது தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், எனவே கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஜவேத் அக்தர் புகார் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு மும்பை ஜுகு போலீசாருக்கு அந்தேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. துரித முறையில் விசாரணை நடத்திய ஜுகு போலீசார் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் திங்களன்று அறிக்கை சமர்ப்பித்தனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  மும்பை அந்தேரி நீதிமன்றம் நடிகை கங்கனாவுக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பியுள்ளது.இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஜுகு போலீசார்,"ஜாவேத் அக்தர் கொடுத்த புகார் நீதிமன்ற விசாரணைக்கு உரியது” என தாங்கள் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளனர். இதனால் விசாரணை முழுவதும் மும்பை அந்தேரி நீதிமன்றம் தான் நடந்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;