cinema

img

தமிழ் திரைப்பட நடிகர்  வெங்கட் சுபா கொரோனாவுக்கு பலி...

சென்னை:
மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் வெங்கட் சுபா காலமானார்.கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய்க்கு தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் இரையாகி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் விமர்சகருமான வெங்கட் சுபா உயிரிழந்தது தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கொரோனா உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் வெங்கட் சுபா. அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு சரியத் தொடங்கிய நிலையில், ஐசியூவில் வைத்து கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை.

இரங்கல்
மொழி, கண்ட நாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள வெங்கட் சுபா, யூடியூப் சேனலில் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது மறைவு செய்தியை அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

;