தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்தில் நடித்துவரும் சூர்யா அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கப்போவ தாகக் கூறப்படுகிறது. அவர் நடிப்பில் வெளிவந்தது சூரரைப் போற்று படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கைக் கதை என்று சொல்லப்பட்டது. அதுபோலவே சூர்யா இன்னொரு வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. பிரபல பிரிட்டானியா கம்பெனியின் தொழிலதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கைக் கதைதான் அது என்றும் சொல்லப்படுகிறது. இதனை இயக்குநர் பிரித்விராஜ் இயக்குவாராம். இதற்கிடையில் தமிழ்த் திரைபடவுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கையைச் சொல்லும் பயோபிக் திரைக்கதையை எழுதி வைத்துள்ளதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். சரியான தயாரிப்பாளருக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.