ஆஸ்கர் விருது தேர்வுக்கு சூர்யா நடித்த தமிழ்ப் படமான ஜெய்பீம், ஆவணப்படங்களான கூழாங்கல் (தமிழ்) மற்றும் ரைட்டிங் வித் ஃபயர் (இந்தி) ஆகிய படங்கள் முன்னேறிச் சென்றன. ஆனால், ஜெய்பீம் அடுத்தடுத்த சுற்றில் வாய்ப்பைப் பறிகொடுத்த நிலையில், ஆஸ்கரின் யூடியூப் தளத்தில் வெளிநாட்டுத் திரைத்துறையினர் பாராட்டுத் தெரிவித்தது சற்றே ஆறுதலாக உணரப்பட்டது. கூழாங்கல் தேர்வாகிற இடத்தில் 15 படங்களில் ஒன்றாக இருந்தபோது, பின்னர் வெளியேற்றப்பட்டது. ரித்து தாமஸ், சுஷ்மித் கோஷ் ஆகியோர் தயாரித்து இயக்கிய ரைட்டிங் வித் ஃபயர் ஆவணப்படம் தலித் பெண் வாழ்வியலைப் பேசுகிறது. ஆசிய அளவில் 25 க்கும் மேலான விருதுகளைப் பெற்றுள்ள இது தற்போது 92 நாடுகள் பங்கேற்கும் ஆஸ்கரின் நாமினேசனில் இடம்பெற்று இருப்பது இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்குப் பெருமை சேர்க்கிற ஒன்றுதான்.