cinema

img

‘இந்தியன்-2’ விவகாரம்.... ஷங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி...

சென்னை:
லைகா நிறுவனம் இயக்குநர் சங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இயக்குநர் சங்கர் தெலுங்கு படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், இயக்குநர் சங்கர் வேறு படங்களை இயக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.அதில், படத்துக்கு ரூ.150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதையும் தாண்டி ரூ.236 கோடி வரைசெலவு செய்யப் பட்டுள்ளது, ஆனால் 80 சதவீத பணிகள்மட்டுமே முடிந்துள்ளன. இந்த படத்தை இயக்க இயக்குநர் சங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசி, ரூ.14 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில், லைகா நிறுவனம் நிதி ஒதுக்குவது, படப்பிடிப்புக்கு அரங்கு அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலதாமதம் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்க கோரிய லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

;