cinema

img

நம்பி நாராயணனின் நிஜ வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் சூர்யா

கொச்சி, ஜுன் 19- ‘ராக்கெட்ரீ: தி நம்பி எஃபெக்ட்’ என்கிற திரைப்படம் நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த சோகத்தை மட்டுமல்ல, நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் பற்றியது என்று இயக்குநரும் நடிகருமான ஆர்.மாதவன் தெரிவித்துள்ளார்.    பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் சிறப்பம்சங்களை அவர் பகிர்ந்து கொண்டார். தனது முதல் படம் கேரளாவில் தொடங்கப்பட்டதாகவும், தற்போது தனது முதல் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளிவர இருப்பதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார். இப்படம் ஜூலை ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவிலும் காட்சிப்படுத்தப்பட்டது. மலையாளம் தவிர தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், அரபு, பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், சீனம், ரஷ்யன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. நம்பி நாராயணனின் 27 வயது முதல் 70 வயது வரையிலான வாழ்க்கையே படத்தின் கருப்பொருள். ட்ரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் முல்லன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளன. சிம்ரன் கதாநாயகி. இதன் தயாரிப்பு செலவு ரூ.100 கோடிக்கு மேல். இந்தியில் ஷாருக்கான் நடித்த வேடத்தில் தமிழில் சூர்யா நடிக்கிறார். கடந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவிட் காரணமாக தள்ளிப்போனது. பிரஜேஷ் சென் இணை இயக்குநராக உள்ளார். ஸ்ரீஷா ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பிஜித் பாலா, இசை சி.எஸ் சாம்.