பழம்பெரும் தெலுங்கு நடிகருர் கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் கிருஷ்ணா (வயது 80). பழம் பெரும் பெரும் நடிகரான கிருஷ்ணா 375 படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார்.
வயது மூப்பின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்விலிருந்த கிருஷ்ணா, நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிருஷ்ணாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.