cinema

img

ஓப்பன்ஹைமர் திரைப்படம் - ஜி.ராமகிருஷ்ணன் ,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.

ஹிரோஷிமா நாகசாகி நகரங்களின்  மீது அமெரிக்கா வீசிய அணு குண்டு, அதனால் ஏற்பட்ட பேரழிவு குறித்து இன்னமும் உலகளவில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘யுத்தம் வேண்டாம், வேண்டும் சமாதானம்’ என்ற முழக்கத்தோடு, சமாதானத்திற்காக குரல் எழுப்பிடும் இயக்கங்கள் ஓய்வில்லாமல்  நடந்துகொண்டிருக்கின்றன.  அணுகுண்டு தயாரிப்பில் அடங்கி யுள்ள அரசியல்-அறிவியல் இரண்டிற்கும் இடையிலான குறுக்குவெட்டுப் பார்வை யை கருவாக வைத்து ஓப்பபன்ஹைமர் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி யுள்ளது. இந்தியாவில் வெளியான முதல்நாள் அன்று 90 ஆயிரம் டிக்கெட்டு கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள் ளது. உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ்-அமெரிக்க இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் திரைக்கதை, இயக்கத்தில் இப்படம் வெளிவந்துள்ளது. இப்படம் விஞ் ஞானி ஓப்பபன்ஹைமரின் வாழ்க்கை வர லாறான, ‘American Prometheus: The  Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ என்ற நூலை அடிப்படை யாகக் கொண்டது. ஓப்பன்ஹைமராக ஐரிஷ் நடிகர் சிலியன் மர்ஃபி அபாரமாக நடித்திருக்கிறார். 

விஞ்ஞானி ஓப்பன்ஹைமர் இங்கி லாந்து மற்றும் ஜெர்மனியில் குவாண்டம் இயற்பியல் கற்று முனைவர் பட்டம் பெற்றவர். அணுகுண்டு உருவாக்கத்தில் முக்கிய அங்கமான குவாண்டம் இயற்பி யலை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தி யவர் இவரே. இவரது அறிவியல் பின்புலத்தை அறிந்த அமெரிக்க அரசு, அணுகுண்டு தயாரிக்கும் மன்ஹாட்டன் திட்டத்தில் அவரை ஈடுபடுத்தியது. நியு மெக்ஸிகோவில் அணுஆயுத தயாரிப்பிற் கான ரகசிய ஆய்வகத்தின் இயக்குன ராக அவர் பணியாற்றினார். விஞ்ஞானி யாக அணுகுண்டு உருவாக்கத்தில் பணி யாற்றியபோது, அணுகுண்டால் ஏற்படக் கூடிய பேரழிவு அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. இது குறித்து நோபல் விருது பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனு டன் ஓப்பன்ஹைமர் விவாதிக்கும் கற்பனையான சுவாரஸ்யமான காட்சியும் படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மன்ஹாட்டன் திட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பணியாற்றி இருக்கிறார்கள். உலகத்தையே தன்னுடைய ஆதிக்கத் தின் கீழ் கொண்டுவர முயற்சித்த ஹிட்ல ரின் நாஜிக்களை எதிர்த்தவர் ஓப்பன் ஹைமர். இவர் பேராசிரியராகப் பணி யாற்றுகிறபோது, நாஜிக்களை உறுதி யாக எதிர்த்த அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி யுடன் நெருக்கமாக இருந்தார்; அவரு டைய மனைவி, சகோதரர் மற்றும் நெரு ங்கிய நண்பர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள். சோவி யத் யூனியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் ஹைமர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டு மக்க ளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களில் இவரும் ஒருவர். இந்தப் படத்தில் ஓப்பன்ஹைமரின் கம்யூனிஸ ஆதரவு மனோநிலையை சரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நோலன்.

இவருடைய அரசியல் கண்ணோட் டத்தை அமெரிக்க அரசு புரிந்திருந்தாலும், அணுகுண்டு தயாரிப்பதற்கான அறி வியல், தொழில்நுட்ப புலமை இவருக்கு உண்டு என்பதை அறிந்து, இவர்தான் இந்தத் திட்டத்திற்கு சரியானவர் என்ற நோக்கில், அமெரிக்க அரசு இந்தப் பொறுப்பை ஓப்பன்ஹைமரிடம் ஒப்படைக்கிறது. நாஜிகளுக்கு எதிராக அணுகுண்டு ஆயுதம் பயன்படும் என்ற நோக்கம் ஓப்பன்ஹைமர் அணுகுண்டு திட்டத்தில் ஈடுபடக் காரணமாக இருந்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரை  வீழ்த்தியதில் பெரும்பங்கு ஜோசப் ஸ்டா லின் தலைமையிலான சோவியத் யூனி யனையே சாரும். அதிகமான உயிர்ச்சே தத்தையும், பொருட்சேதத்தையும் சோவியத் யூனியன் சந்தித்தது. மாஸ்கோ வரை சென்ற நாஜிப் படைகளை விரட்டியடித்து, ஹிட்லரின் நாடாளுமன்ற கட்டிடமான ரீச்ஸ்டாகில் செம்படை செங்கொடி ஏற்றியது. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் 1945 ஏப்ரல் 30 அன்று ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான். மே 7-ஆம் தேதி நாஜி படைகள் முற்றாக சரண் அடைந்தன. நாஜிப்படைகளை வீழ்த்தியாகிவிட்டது, இனி அணு குண்டுகளைப் பயன்படுத்தத் தேவை யில்லை என ஓப்பன்ஹைமர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் விவாதிக்கிறார்கள். யாரும் ஒருவரை ஒருவர் அழிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அணுகுண்டு தொழில்நுட்பத்தை சர்வதேச கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பின் கீழ்  வைத்திருக்க வேண்டும் என்று இவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இனி வரும் காலங்களில் தன்னுடைய வல்லாதிக்கத்தை பறைசாற்றும் விதமாக அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீச முடிவெடுக்கிறது.

ஜப்பானின் எந்த இடத்தில் குண்டு போட்டு அழிப்பது என அமெரிக்க அதி காரிகள் சகஜமாகப் பேசுகிற ஒரு காட்சி யில், ‘கியோட்டோ நகரில் வீசுவோம். அழ கிய நகரம் அது. நானும் எனது மனைவி யும் அங்கு தேனிலவு சென்றோம்’ என்று குரூரமாக ஒருவர் சொல்லும் காட்சி, ஏகாதிபத்திய அரசியலை குரூரத்தை  உணர்த்துகிறது. இந்தக் கொடூரத்தைத் தான் வியட்நாமில் கண்டோம். ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று உல கெங்கிலும் கண்டு வருகிறோம். மே மாதம் 7-ஆம் தேதி நாஜிப்படைகள் முற்றாக சரணடைந்தபோதும், ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதிதான் ஹிரோஷிமா மீது  அமெரிக்கா குண்டு வீசியது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதற்கடுத்தும் 9 ஆம் தேதி நாகசாகி மீது அடுத்த அணு குண்டை வீசியது. இரண்டு நகரங்களிலும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலானோர் உருகி சாம்பலானார்கள். இரண்டு குண்டுகளும் இரண்டு வகையான தயாரிப்புகள் என்பதற்காக இரண்டு பகுதிகளில் அமெரிக்கா சோதித்தது.  அணுகுண்டின் தந்தை என்று  போற்றப்பட்ட விஞ்ஞானி ஓப்பன்ஹைம ரை அழைத்து அமெரிக்க குடியரசுத் தலை வர் ட்ருமன் புலகாங்கிதம் அடைந்து பாராட்டுகிறார். ஆனால், ஹைமர்  இறுகிய முகத்தோடு, ‘என் கைகளில் ரத்தக் கறை படிந்துள்ளது’ என்று அவரிடம் சொல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் தன்னுடைய கைக்குட்டையைக் கொடுத்து துடைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க அரசியலை, விஞ்ஞானியின் சமூகப் பார்வை ஊடாக அம்பலடுத்தும் இக்காட்சி படத்திலேயே உச்சபட்ச காட்சியாக அமைகிறது.

1950களில் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களையும், கம்யூனிஸ ஆதர வாளர்களையும் வேட்டையாடும் வேலை யை அமெரிக்க அரசாங்கம் செய்து வந்தது. செனட்டர் ஜோசப் மெக்கார்த்தி இதற்கு வித்திட்டவர் என்பதால் மெக்கார்த்தியிசம் என்று அக்காலத்தில் இந்த அணுகுமுறை அழைக்கப்பட்டது. ‘அணுகுண்டு தந்தை’ என்று அமெரிக்க ஜனாதிபதியால் பாராட்டப்பட்ட ஓப்பன்ஹைமரை கம்யூனிஸ ஆதரவாளர் என்ற அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தி, அமெரிக்க சமூகத்தில் அவரு டைய புகழுக்கு களங்கம் கற்பிக்கிறார் கள். ஒரு விஞ்ஞானி என்ற அடிப்படை யில், தான் ஆற்றிய பணிகள் பற்றியும், அதே நேரத்தில் நாஜி எதிர்ப்பாளர் என்ற அடிப்படையில் தான் கொண்ட நிலைப் பாட்டையும் உறுதியாக தெரிவிக்கிறார். ஏகாதிபத்தியம் தனது கோரமுகத்தை மாற்றிக்கொள்ளாது என்பதற்கிணங்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரை விசாரணை  வளையத்திற்குள்ளேயே வைத்திருந் தது. அணுகுண்டு, அணுஆயுதம் ஏற்படுத் திய பேரழிவு படத்தில் காட்சிப்படுத்தப் படவில்லை என்ற குறைபாடும் படத்தில் உள்ளது. சமாதானம் என்றைக்குமே ஏகாதிபத்தியத்தின் இலக்காக இருக்காது என்பதை கம்யூனிஸ ஆதரவு விஞ்ஞானியான ஓப்பன்ஹைமரின் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் நமக்கு உணர்த்துகிறது.