உடல்நலக் குறைவாலும் வயது முதிர்வாலும் பிரபல நகைச்சுவைக் கலைஞர் வைகைப்புயல் வடிவேலுவின் தாய் சரோஜினி அம்மாள் மதுரையில் காலமானார். அவருக்கு வயது 87. கடந்த சில நாட்களாக மதுரையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 19ஆம் தேதி வியாழனன்று அவர் மரணமடைந்தார். வடிவேலுவின் குடும்பம் மதுரையில் வசித்துவருவது தெரிந்ததே.