articles

img

தொழிலாளி வர்க்கத்தின் போர்வாள்! எஸ்.ஏ.தங்கராஜன் - ஆர்.சச்சிதானந்தம், எம்.பி.,

தொழிலாளி வர்க்கத்தின் போர்வாள்!   எஸ்.ஏ.தங்கராஜன் - ஆர்.சச்சிதானந்தம், எம்.பி

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி அந்தோணி குருஸ் - சந்தனம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர் தங்கராஜன். மத கலாச்சாரத்தில் ஊறிப்போன கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பம். தோல் பதனிடும் தொழிலா ளர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட கத் தோலிக்க கிறிஸ்தவர்கள். தங்கராஜனின் அப்பா விற்கு தோல்சாப்பில் “மேஸ்திரி” வேலை. “மேஸ்திரி” என்பவர் ஜாதி இந்துவாகவோ முஸ்லிமாகவோ இருந்தால் “ஏஜெண்ட்” என்று அழைப்பார்கள், தாழ்த்தப்பட்டவராக இருந்தால் “மேஸ்திரி” என்பார்கள் என்பது அந்நாளைய நடைமுறை. பசியும் பஞ்சமும் வாட்டிய நிலையிலும் அவர்க ளின் மதப்பற்று குறையவில்லை. சாதி வேறுபாட்டை  உணர்ந்த பள்ளி வாழ்க்கை பள்ளியில் உயர்சாதி மாணவர்களுக்கும் தாழ்த் தப்பட்ட மாணவர்களுக்கும் தனி வரிசைகள் இருந் தன.

இளம் வயதிலேயே இந்த சாதிய வேறுபாடு அவருக்கு பெரும் வேதனை அளித்தது. பள்ளிப் பருவத்திலேயே ஆசிரியர் ஞானசாமியின் தொ டர்பால் திராவிடர் கழகத்தில் தொடர்பு ஏற்பட்டது. மதபோதகராக இருக்க வேண்டியவர் கம்யூனிஸ்ட் ஆனது 1945-ல் ஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்திய பின், திருச்சியில் கிறிஸ்தவ மத போதகர் பயிற்சி யில் சேர்க்கப்பட்டார். இது தமிழ்நாட்டிலேயே பிர சித்தி பெற்ற கிறிஸ்துவ மத போதக பயிற்சி பள்ளி. அங்கு படிக்கும்போது திருச்சி நகர வீதியில் பி.  ராமமூர்த்தி எழுதிய “மக்கள் வயிற்றில் அடிக்கா தே” என்ற புத்தகத்தை நாலணா கொடுத்து வாங்கி னார். இதைப் பார்த்த பாதிரிமார் குழு கேள்வி கேட்டபோது, பிரசுரங்களை வாங்கி படிப்பதும் சேக ரிப்பதும் தவறில்லை என மன உறுதியோடு பதிலளித் தார்.

மறுநாளே வெளியேற் றப்பட்ட அவர், 1946 இறுதி யில் பெற்றோர் வீட்டுக்கு செல்லாமல் திண்டுக்கல் வந்து நிரந்தரமாக தங்கினார். ஜனசக்தி  விற்பனையில் புதுமை தங்கராஜனின் ஜனசக்தி விற்பனை முறை வித்தியாசமானது. கருப்பையா தமுக்கு அடிப்பார், பக்தவத்சலம், மணிவேல், கோவிந்தன் கொடி பிடிப்பார்கள், தங்கராஜன் தகர ஒலிபெருக்கியில் செய்திகளை உரக்கச் சொல்வார். இந்த யுக்தியால் விற்பனை பன்மடங்காக உயர்ந்தது. ஒருமுறை நிதி இல்லாததால், அண்ணன் வீட்டில் இருந்து கோழி யைப் பிடித்து ஜனசக்தி நிதிக்காக கொடுத்தார். 1947 நவம்பர் புரட்சித் தினத்தன்று வி.பி.சிந்தனி டம் கட்சி உறுப்பினர் அட்டை பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக சாதனைகள் சட்டமன்றத்தில் துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துரைத்தார். தாடிக்கொம்பு அழகர் கோவில் பழுதடைந்திருந்ததை சுட்டிக் காட்டி காத்தவர். திண்டுக்கல்லில் மதக்கலவ ரத்தின் போது, சட்டமன்றத்திற்கு உடனடியாக கொண்டுசென்று சிறுபான்மை மக்களின் காவல் அரணாக நின்றார். அரை நூற்றாண்டு போராட்டப் பணி மதபோதகராக இருக்க வேண்டியவர் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் அரை நூற்றாண்டு காலமாக தொழிற் சங்க அரங்கிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பணி யாற்றினார். தொழிலாளர் வர்க்கத்தில் பிறந்து, அவர்களின் துன்ப துயரங்களை அனுபவித்தவர். “எஸ்.ஏ.டி” என்று அன்பாக அழைக்கப்பட்டார்.

ஏழரை ஆண்டு சிறை வாழ்க்கை ஏழரை ஆண்டுகால சிறை, ஓராண்டு கால தலைமறைவு, 18 ஆண்டு நகரமன்றப் பணி, இரண்டு ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் சேவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் தொழிற்சங்க தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணைத்தலைவர், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தார். மக்கள் மனங்களில் நிலைத்த தலைவர் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்தவர்.

அடித்தட்டு மக்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டுவதில் உள்ள சிரமங்களையும் சிக்கல்களை யும் சந்தித்து, அவர்களை ஒன்றுதிரட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டியவர். கட்சி அணிகளில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் “எஸ்.ஏ.டி” என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரது வரலாறு தனிநபரின் வாழ்க்கை வரலாறு அல்ல; புரட்சிகரமான இயக்கத்தில் சந்தித்த போலீஸ் அடக்குமுறை, துன்ப துயரங்க ளையும் தாங்கிய தியாகத்தின் வரலாறு. மார்க்சிச லெனினிச இயக்கம் ஒரு சாமானிய தொழி லாளியை பொதுமக்கள் தலைவனாக உருவாக்க முடியும் என்பதற்கான வாழும் சான்றாக, அடித் தட்டு மக்களுக்கான குரலாக, தன் வாழ்நாள் முழு வதையும் சமூக மாற்றத்திற்காக அர்ப்பணித்தவர் தோழர் எஸ்.ஏ.தங்கராஜன்.