தஞ்சை செங்கொடியின் செம்மல் - கே.பி.நடராஜன் - ஜீ.வெங்கடேசன்
தஞ்சை தரணியின் விவசாயிகள் இயக்க தலைவர் கே.பி.நடராஜன், நாகை நக ரத்தில் பிறந்து வங்கக் கடலோரத்தின் சிவப்பு நட்சத்திரமாக ஜொ லித்தவர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலை வேட்கை, சுயமரியாதைக் கழகம், காங்கிரஸ் கட்சி என மாணவர் பருவத்திலி ருந்தே அரசியல் வாழ்க் கையைத் துவக்கியவர். சமதர்மக் கொள்கையின் ஈர்ப்பால் காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கடைசிவரை பணியாற்றினார். இரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் முன்னணி 1928-ல் நாகையில் நடைபெற்ற இரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத் தில் முக்கிய பங்காற்றினார். பத்தாயிரம் தொழி லாளர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் தமிழ கத்தை உலுக்கியது.
கே.பி.நடராஜன் கைது செய் யப்பட்டு சிறை சென்றார். இப்போராட்டத்தில் ம.சிங்காரவேலர், தோழர்.கே.முருகேசன், மாய வரம் ராஜரத்தினம், மா.சட்டையப்பன், அந்த ணப்பேட்டை வீ.சாமிநாதன் உள்ளிட்ட தலை வர்களும் பங்கேற்றனர். கம்யூனிஸ்ட் கொள்கைக்கான பயணம் 1939 காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிய அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டார். மணலி கந்தசாமி, குடந்தை யாகூப் கான், கே.முத்தையா, ஏ.கே.கோபாலன், சுப்ர மணியசர்மா, நெடுங்காடி ராமச்சந்திரன் போன்ற தலைவர்கள் இவ்வகுப்புகளை நடத்தினர். சுதந்திரப் போரில் சிறைவாசம் 1942 “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, மணலி கந்தசாமி, மாசிலாமணி, காத்தமுத்து போன்ற தலைவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயிகளுக்கான இணையற்ற போராட்டம் களப்பால் ஒப்பந்தம் - சாணிப்பாலுக்கு முற்றுப்புள்ளி 1944-ல் களப்பால் கிராமத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாணிப்பால், சவுக்கடி நிறுத்தம், கூலி உயர்வு, குத்தகை வாரகுறைப்பு போன்ற கோரிக்கைகளுக்கு ஒப்பந்தம் கையெ ழுத்தானது. இது விவசாய இயக்க வரலாற்றில் மகத்தான வெற்றியாக கருதப்பட்டது.
விவசாய சங்க ஸ்தாபக தலைவர் 1944 மே 3, 4 தேதிகளில் மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். தஞ்சை ஜில்லா விவ சாய சங்க முதல் மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜமீன் ஒழிப்புக்கான குரல் 1946-ல் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஜமீன் ஒழிப்பு மாநாட்டில் முக்கிய பங்காற்றி, ஜமீன் இனாம் ஒழிப்பு கோரிக்கையை எழுப்பினார். இது பின்னர் சட்டமாக கொண்டுவரப்பட்டது. மன்னார்குடி ஒப்பந்தம் - உழவர் வெற்றி 1946-ல் மிராசுதாரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கத்தின் சார்பில் கே.பி.நடராஜன் முன்னின்று பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றார்.
விவசாயிகள் மீதான பழிவாங்கல் நிறுத்தம், சங்க உரிமை, கூலி ஒப்பந்தம், தொழிலாளர்கள் குடியிருப்பு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் அடங்கிய இந்த ஒப்பந்தம் மகத்தான வெற்றியாககருதப்பட்டது. தலைமறைவு வாழ்க்கை - தலைக்கு விலை 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டபோது, மணலி கந்தசாமி, மன்னை அமிர்த லிங்கம், ஜாம்பவனோடை சிவராமன், வாட்டாக் குடி இரணியன், நாகை கே.பி.நடராஜன் ஆகிய தலைவர்களை பிடித்துக் கொடுத்தால் ஐந்தாயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 1948-ல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறை யில் பாதுகாப்புக் கைதியாக அடைக்கப் பட்டார். 1951-ல் விடுதலையாகி மீண்டும் கட்சிப் பணியாற்றினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் முதல் தலைவர் 1956-ல் திருவாரூரில் நடைபெற்ற விவசாய தொழிலாளர் சங்க முதல் மாவட்ட மாநாட்டில் மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்திலேயே முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் பெரிய வர்க்க அமைப்பாக உருவானது.
மறக்கமுடியாத மாயவரம் அகில இந்திய மாநாடு 1959 மாயவரம் நகரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் 16-வது மாநாட்டின் பொருளாளராக செயல்பட்டார். இந்த மாநாட்டின் கடனை தனது பூர்வீக நிலம் மற்றும் சொந்த ஓட்டுவீட்டை விற்று அடைத்தார். நிலச்சீர்திருத்தப் போராட்டங்களில் முன்னணி 1960-ல் நிலச் சீர்திருத்தம் கோரிய மாநில பேரணியிலும், 1961-ல் நில உச்சவரம்பு சட்ட மசோதாவை எதிர்த்த போராட்டத்திலும் கலந்துகொண்டு கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியில் தொடர்ந்த பயணம் 1964-ல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது நாகூர் முருகையா, எஸ்.வடிவேல், கோ.பாரதி மோகன், பி.எஸ்.தனுஷ்கோடி, என்.வெங்கடா சலம், ஜீ.வீரையன், என்.கணேசன், வீ.மீனாட்சி சுந்தரம், கே.ஆர்.ஞானசம்பந்தம் போன்ற தலை வர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியில் செயல் பட்டார். கட்சிக்காக அனைத்தையும் அர்ப்பணித்த தியாகி திருமணம் செய்துகொள்ளாமல், கட்சி தலைவர்கள் மற்றும் தோழர்களையே குடும்ப மாக கருதியவர்.
இறப்பதற்கு முன் அவர் பயன் படுத்திய கட்சி புத்தகங்கள், லெனின் சிலை, உயர் ரக தேக்கு மரச்சாமான்கள், லெனின் உருவம் பொறித்த அரைபவுன் தங்க மோதிரம் உள்ளிட்ட அனைத்தையும் கட்சிக்கு நன்கொ டையாக வழங்கினார். இறுதி நாட்கள் வயதான காலத்திலும் இளமையின் உற்சா கத்துடன் பணியாற்றினார். இறப்பதற்கு 8 நாட்க ளுக்கு முன்பு கூட நாகையில் நடைபெற்ற விவசாய சங்க மாவட்டக்குழு கூட்டத்தில் உற் சாகமாக பங்கேற்றார். 10.4.1980 அன்று நாகை அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.