articles

img

மார்க்ஸ் எழுதிய பதினெட்டாம் புரூமேரும் ஆதீனத்தின் செங்கோலும்-எஸ்.விஜயன்

       லூயி போனபர்ட்டின் பதினெட் டாம் புரூமேர் என்ற தலைப்பில் கட்டுரைத் தொடராக 1851-52ம் ஆண்டு மார்க்ஸ் எழுதியது அந்த இதழ் வெளிவராததால் நூலாகவே வெளிவந்தது. இதன் மூன்றாவது ஜெர்மன் பதிப்பின் முன்னுரையில் ஏங்கெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “பதினெட்டாம் புரூமேரின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுஅதன் புதிய பதிப்பு அவசியமாயிருப்பது இச்சிறிய புத்தகம் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அதன் சிறப்பை இழந்துவிடவில்லை என்று நிரூபிக்கின்றது”.  

    இந்தியாவில் இன்று நடக்கும் செங்கோல் கூத்தை பார்க்கும் எவரும் 170 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்நூல் அதன் சிறப்பு இயல்பை இழக்க வில்லை என்றே கூறுவர். புரூமேர் என்பது பிரஞ்சு காலண்டர் மாதங்களில் ஒன்று. அந்த மாதத்தின் 18ஆம் தேதியில் திடீர்ப் புரட்சி மூலம் முதலாம்  நெப்போலியன் 1799ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தான். அதே போல் லூயி போனபர்ட் திடீர் புரட்சியின் மூலம் 1851ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த சம்பவத்தையே லூயி போனபர்ட்டின் 18ஆம் புருமேர் என்று குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.

முதலில் சோகம் இரண்டாவது கேலிக்கூத்து

    மார்க்ஸினுடை எந்தக் கட்டுரையை எடுத்தாலும் அதன் முதல் வாக்கியமே வாசகனை வாசிப்பை நோக்கி இழுத்து உட் கார்த்திவிடும். அதன் முதல் வாக்கியம் இப்படித் துவங்குகிறது,“உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன. மாபெரும் தலைவர்களும் இரண்டுதடவை தோன்று கிறார்கள் என்று ஹெகல் எழுதியுள்ளார். அவர்க ளுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும் இரண்டா வது சம்பவத்தில் கேலிக் கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார்”

    நமது நாட்டில் நடப்பதைப் பாருங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தது நீண்ட நெடிய மக்கள் போராட்டத்தின் வெற்றி. அது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. ஆனால் அதே நாளில் மதக்கலவரத்தால் நாடு இரத்தக் களரியாக இருந்தது. அந்த நேரத்தில் பிரதமராக பொறுப் பேற்ற நேருவுக்கு நமது ஆதீனம் செங்கோல் பரிசளித்தார். ஆக மார்க்ஸ் கூறியபடி அது ஒரு சோகக்கதை. எழுபது ஆண்டுகள் கழித்து அதே சம்பவம் மீண்டும் நிகழ்கிறது. இம்முறை மார்க்ஸ் கூறியபடி கேலிக்கூத்து.

    செங்கோலை பிரதமர் நேருவுக்கு பரிசளித்த ஆதீனத்தின் நோக்கத்தை எள்ளி நகையாடு கிறார் அன்றைய திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை அவர்கள். ஆதீனம் அனுப்பிய செங்கோல் என்ன அவர்கள் நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி சம்பாதித்த பணத்தினால் செய்யப் பட்டதா? என்று கேள்வி எழுப்புகிறார். இதன் நோக்கம் என்ன என்று ஆதீனத்தின் “தேசபக்தியை”கேள்விக்குள்ளாக்குகிறார். செங்கோலைப் பெற்றுக் கொண்ட நேருவுக்கு 24.8.1947இல் அவர் கூறும்வார்த்தைகள், “பாரிலே உள்ள பல நாட்டு வரலாறுகளை நீர் அறிவீர். முடிஅரசன் அவனைச் சுற்றியுள்ள குடிமக்களை உழைக்க வைத்து அதன் பலனை உண்டு கொழுக்கும் சீமான்கள் பரிவாரம் இந்த தங்க கோட்டையினுள்ளே தாராளமாக உலவும் அனுமதியும் வசதியும் பெற்ற மதத்தை முதலாகக் கொண்டோர் உள்ளனர் என்பதை அறிவீர். மக்களாட்சி மலருவதற்கு இத்தகையவர்கள் நீக்கப்பட வேண்டும் என்னும் வரலாற்று உண்மையையும் அறிவீர் கள். அறிந்ததை ஆட்சி முறையிலே புகவைக்க முயலுவீரோ என்ற அச்சம் கொண்ட ஆதீன கர்த்தாக்கள் செம்பொன்னால் செய்யப்பட்டது மட்டுமல்ல நவரத்னங்கள் இழைத்த செங்கலை யும் தர முன்வருவர் - தற்காப்புக்காக பதிகம் பாடிப் பரமன் அருளைத் தேடி, அற்புத சக்தியால் செய்யப்பட்தல்ல. அரனடியார் ஒருவர் செய்ததாகக் கூறப்படும் நரிபரியான கதை போல இரும்புத்துண்டை ஒரு துளி வீபூதி தூவி, ஓம் செம்பொன் ஆக்கிச் செய்யப்பட்ட தல்ல. பிறர் உழைப்பு? இவருடையது தானாம். இதுதான் அந்த செங்கோல். பெயர் பொருந்துமா?”

     ஆதீனம் செங்கோல் அனுப்பியது வர லாற்றுச் செய்தி. குடிமகன் அனுப்பும் பரிசைப் பெற்றுக்கொள்ளும் பிரதமர் அவற்றை அருங் காட்சியகத்தில் வைப்பார். அதுபோல் ஆதீனம் அனுப்பிய செங்கோலானது குடிமகன் தனக்கு அனுப்பியது என்ற முறையில் நேரு பெற்றுக் கொண்டார். இந்த செங்கோலும் மற்ற பரிசுப் பொருட்களுடன் அருங்காட்சியகத்திற்குச் சென்றது. அண்ணாதுரையின் ஆலோ சனையை நேரு ஏற்றுக் கொண்டாரோ இல்லையோ ஆதீனத்தின் நோக்கம் என்ன என்பது நேருவுக்குத் தெரியும், இதற்கு மேல் அதற்கு ஒன்றும் முக்கியத்துவம் கிடையாது. விலையுயர்ந்த பொருள் என்பதால் அது அருங்காட்சியகத்திற்குச் சென்றது.  

    இந்தியாவின் சுதந்திரம் என்பது மகாபிரிட் டன் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்திய சுதந்திரச் சட்டம் 1947 மூலமாக அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி இந்தியா என்ற துணைக் கண்டம் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. சமஸ்தானங்கள் இந்த இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சேரலாம். ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த மக்கள்சபை இரண்டாகப் பிரிக்கப் பட்டு இரண்டு அரசியல் நிர்ணய சபைகளா கின. அதிகாரம் இந்த அரசியல் நிர்ணயசபை களுக்கு மாற்றப்பட்டது. மகாபிரிட்டனின் அரசர் இந்தியாவின் பேரரசராக தொடர்வார். இந்த இரு அரசியல் நிர்ணயசபைகளின் ஆலோசனைப் படி பேரரசர் செயல்படுவார் என்கிறது. இந்திய அரசியல்நிர்ணய சபை புதிய அரசியல் நிர்ணயச் சட்டத்தை இயற்றி அதன் படி குடியரசுத்தலை வர் என்ற பதவியை உருவாக்கியது. பேரரசை நீக்கிவிட்டு அந்த பொறுப்பில் குடியரசுத்தலை வரை அமர்த்தியது. ஆக, 1952வரை அரசின் தலைவர் என்பவர் மகாபிரிட்டனின் ஆறாம் ஜார்ஜ் மன்னன்தான்.  இந்திய சுதந்திரச் சட்டம் 1947 ஆனது மன்னர் பொறுப்பை வகிப்பர் மகாபிரிட்டன் மன்னர்.

    இந்த இருநாடுகளின் அரசியல் நிர்ணயசபை தீர்மானித்த நபர்களிடம் அரசின் தலைவர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பதவி விலகு வார் என்று 1948ம் ஆண்டு திருத்தப்பட்டது. இங்கிலாந்தில் பேரரசர் உட்கார்ந்து கொண்டு சுதந்திர இந்தியாவின் அரசுத்தலைவராக இருப் பது நடைமுறையில் சாத்தியமில்லை என்ப தால் கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப் பட்டு அவருக்கு மன்னரின் அதிகாரம் வழங்கப் பட்டது. மௌண்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருந்தாலும் அவர் மன்னர் ஆறாம் ஜார்ஜை பிரதிநிதிப்படுத்துபவரே. எனவே முறைப்படி அரசு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது என்ப தும் செங்கோல் இந்தியர்களுக்கு வந்தது என்பதும் தவறு. ஆனால் அது அரசியல்நிர்ணய சபையை அதிகாரம் படைத்ததாக்கியது. மகா பிரிட்டனின் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட சபையல்ல. மகாபிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆலோசனைப்படி மகாபிரிட்டனில் அந்த நாட்டில் ஆறாம் ஜார்ஜ் எப்படி ஆட்சி நடத்து கிறாரோ அதேபோல் இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆலோசனைப்படி இந்தியாவில் ஆறாம் ஜார்ஜ் ஆட்சி நடத்துவார்.

 திரிக்கப்படும் வரலாறு

     இப்பொழுது வரலாறு திரிக்கப்படுகிறது. நமது பாரம்பரியத்தை நேரு மதிக்கவில்லை. செங்கோலை அருங்காட்சியகத்தில் போட்டு விட்டார் என்று அதை எடுத்துக் கொண்டுவந்து குளிப்பாட்டி நாடாளுமன்றத்தின் மையத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் பதித்துவிட்டார்கள். சட்டங்களையும் வரலாற்றையும் மக்கள் நுணுகிப் பார்க்கமாட்டார்கள் என்பதால் செங்கோல் கொடுத்தன்முலம் ஆட்சிமாற்றம் சம்பிரதாயப் பூர்வமாக நிகழ்ந்தது என்று கதை கட்டுகிறார்கள். பொதுவாக ஆட்சித்தலைவர் மாறுவதுதான் ஆட்சிமாற்றம் எனப்படும். 15 ஆகஸ்ட் 1947க்கு முன்பு ஆறாம் ஜார்ஜ் ஆட்சித்தலைவர் அதன்பிறகும் அவரே ஆட்சித் தலைவர். அவர் செய்ய வேண்டியதை கவர்னர் ஜெனரல் செய்வார். இதை ஆட்சிமாற்றம் என்றால் ஆறாம் ஜார்ஜ் தன்னுடைய இடது கையிலிருந்த செங்கோலை வலது கைக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். நமது அரசியல் நிர்ணயசபையானது புதிய அரசியல்நிர்ணயச் சட்டத்தை ஜனவரி 26, 1950 அன்று நிறை வேற்றியது. அதன்படி குடியரசுத்தலைவர் ஆட்சித்தலைவராக இருப்பார். செங்கோல் என்பது உண்மையிலேயே இருந்திருக்குமானால் அது கைமாறுவதுதான் ஆட்சிமாற்றத்தின் சம்பிரதாயம் என்றால் அது ஆறாம் ஜார்ஜிடமிருந்து ராஜேந்திரப் பிரசாத்துக்குதான் வந்திருக்க வேண்டும்.

    அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோலில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை படித்தால் அது உம்மிடி பங்காரு நகைக்கடையில் செய்யப்பட்டது என்று இந்து நாளிதழ் கூறுகிறது. தங்க முலாம் பூசிய பித்தளைத்தகட்டால்