articles

img

காலத்தை வென்றவர்கள் முதல் தேசிய பேராசிரியர்

சந்திரசேகர வெங்கடராமன் என்ற இயற்பெயர் கொண்ட சர் சி.வி.ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியர். எம்.ஏ. பட்டம் பெற்ற ராமன், 1907 இல் இந்திய நிதித் துறையில் பணியாற்றினாலும், இவரது கவனம் முழுவதும் அறிவியல் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. தனது அலுவலக நேரம் முடிந்த பிறகு, கல்கத்தாவில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனைகளையும், ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

1917 இல் கல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு இயற்பிய லில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. தொடர்ந்து 15 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். இந்நிலையில், இவரது ஒளியியல் மற்றும் ஒளிச் சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது. 1924 இல் லண்டன் ராயல் சொசைட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, 1929 இல் பிரிட்டிஷ் பேரரசால் ‘நைட் ஹீட்’ என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியால், ‘சர்’ பட்டமும் வழங்கப்பட்டது. இயற்பியல் ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்காக 1930 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு ‘ராமன் விளைவு’ என பெயரிடப்பட்டது.

1947 இல் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தால் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியன் இன்ஸ்டிடி யூட்டில் இருந்து 1948 இல் ஓய்வுபெற்ற ராமன், ஓர் ஆண்டு கழித்து பெங்களூருவில் ராமன் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி னார். 1954 இல் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. தனது இறுதிக்காலம் வரை பெங்களூரு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த சர் சி.வி.ராமன் 1970 நவம்பர் 21 அன்று மறைந்தார். வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்த நாளில்தான் அவர் சாதித்த துறை குறித்து விழா கொண்டாடப்படும். ஆனால், சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த ‘ராமன் விளைவு  கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாளான பிப்ரவரி 28 ஆம் தேதியை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.