மேற்கு கரையில் இஸ்ரேல் செய்த குற்றங்கள்
1948 இல், புதிதாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் அரசு பாலஸ்தீன நிலத்தில் 78 சதவிகித நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாலஸ்தீன மக்கள்தொகை யில் பாதிக்கும் மேலானோரை (7,50,000 பேர்) அவர் களது சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வெளியேற்றியது. இந்தச் செயலை ஐ.நா பொதுச் சபையின் தீர்மானம் 181 (1947)ஐ மீறித்தான் இஸ்ரேல் செய்தது. பாலஸ்தீன நிலத்தை ஒரு பகுதியில் பாலஸ்தீன மாகவும் மறுபகுதியை யூத அரசாகவும் பிரிப்பதற்கு அழைப்பு விடுத்தது. இதற்காக இஸ்ரேல் நடத்திய பயங்கர இனப் படுகொலைதான் நக்பா (பேரழிவு) என அழைக்கப்பட்டது. விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் பாலஸ்தீனர்கள் காசா, மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் அண்டை அரபு நாடுகளில் ஒன்றுகூடினர். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. பாலஸ்தீனர்கள் இன்னும் அந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
1967 ஆக்கிரமிப்பு
1967 இல் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம், காசாவை இஸ்ரேல் கைப்பற்றியது. குறைந்தது 7,50,000 பாலஸ்தீனர்கள் இந்த இரண்டாவது வெளியேற்றத் தில் தங்கள் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டனர். இது நக்சா (பின்னடைவு) என அழைக்கப்பட்டது. அதே ஆண்டு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் 242ஐ நிறைவேற்றியது. இதன் மூலம் இஸ்ரேல் இந்த மூன்று பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிர மிப்பை முடிவுக்குக் கொண்டுவர அழைப்புவிடுத்தது. அது முதல் ஐ.நா. இந்தப் பகுதிகளை முறையாக ‘1967 முதல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்’ என குறிப்பிடத் தொடங்கியது. 1999 அக்டோபர் முதல் ஐ.நா. “ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள்” (OPT) என்ற வார்த்தையை அதன் அதிகாரப்பூர்வப் பெயராக ஏற்றுக்கொண்டது.
ஓஸ்லோ II மற்றும் நிலப் பிரிவினை
1995 செப்டம்பரில், பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) மற்றும் இஸ்ரேல் அரசு மேற்கு கரை மற்றும் காசா பகுதி பற்றிய இஸ்ரேல்-பாலஸ்தீன இடைக்கால ஒப்பந்தத்தில் (ஓஸ்லோ II) கையெழுத் திட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 22 சதவிகிதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பாலஸ்தீனர்களுக்கு அவர்களின் சொந்த நிலத்தில் கால் பங்குக்கும் குறைவான அளவுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மேற்கு கரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது: பகுதி ஒன்று - இது பாலஸ்தீனத்தின் முழுமையான நிர்வாக மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது; மேற்கு கரையின் சுமார் 18 சதவிகிதப் பகுதி அல்லது வரலாற்று ரீதியான பாலஸ்தீன நிலப்பரப்பில் 3.96 சதவிகித நிலத்தில் உள்ளது. பகுதி இரண்டு - இது பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என சொன்னாலும் உண்மையில் இஸ்ரேலின் பாதுகாப்புக் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது; மேற்கு கரையின் சுமார் 22 சதவிகிதப் பகுதியை உள்ளடக்கியது. பகுதி மூன்று - இது முழுவதுமாக இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படுகிறது; மேற்கு கரையின் 60 சத விகிதத்துக்கும் அதிகமான பகுதியைஉள்ளடக்கியது. உண்மையில், ஓஸ்லோ II ஒப்பந்தம், கிழக்கு ஜெருசலேமின் இணைப்பு மற்றும் காசாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு இஸ்ரேல் வரலாற்று ரீதியிலான பாலஸ்தீனத்தின் 97 சதவிகிதத்தை ஆக்கிரமித்துக் கட்டுப்படுத்துகிறது.
மேற்கு கரையில் பாலஸ்தீனர்களை மூச்சுத் திணற வைப்பது
மேற்கு கரையில் இஸ்ரேலின் செயல்பாடுகள் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையை மிக மோசமாக அழித்துள்ளது. 2023 அக்டோபருக்கு முன் இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் 590 சாலைத் தடுப்புகள் மற்றும் சோதனைச் சாவடிகளை வைத்திருந்தது. அக்டோபர் ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் சோதனைச் சாவடிகளை 900 ஆக அதி கரித்து பாலஸ்தீனர்கள் வெளியில் நடமாடுவதையே முற்றிலும் நிறுத்தியது. விவசாய உற்பத்திக்குத் தேவையான ஆழ்துளைக் கிணறுகள், நிலம், குடிநீர் ஆகிய எதையுமே பயன்படுத்த முடியாத - வாங்க முடியாத நிலைக்கு பாலஸ்தீனர்கள் தள்ளப்பட்டனர். பாலஸ்தீனர்களின் அடிப்படைக் கல்வி, சுகாதாரம், மற்றும் வேலைவாய்ப்பு சேவைகள் அனைத்தையும் இஸ்ரேல் தடுத்துவிட்டது.
இடப்பெயர்வு மற்றும் பறிமுதல்
இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் இன அழிப்பைச் செய்து வருகிறது. பாலஸ்தீனர்களைச் சுடுவது, இனவெறித் தாக்குதல்கள், பாலஸ்தீனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை, பாலஸ்தீனர் களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து அதில் இருந்த பாலஸ்தீன மக்களை வெளியே துரத்தி வருகிறது. 2025 ஜனவரி மாதம் பாதுகாப்பு ஒத்திகை என்ற பெயரில் தேடுதல் வேட்டை என்று கூறி இனப்படு கொலைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இந்தச் செயலின் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவம் ஜெனின் அகதிகள் முகாமில் இருந்து 3,840 குடும்பங்கள், நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் 1,910 குடும்பங்கள், துல்கரம் அகதிகள் முகாமில் 2,505 குடும்பங்கள் என சுமார் 8,255 பாலஸ்தீன குடும்பங் களைத் துரத்தியது. இந்தக் குடும்பங்கள் அனைத்தும் 1948 நக்பாவின்போது தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்களின் நேரடி வாரிசுகள் ஆவர். 2023 அக்டோபர் முதல் 2025 ஏப்ரல் வரை மேற்கு கரையில் 3,500க்கும் மேற்பட்ட கட்டப்பட்ட வீடுகள், கால்நடைப் பராமரிப்பு இடங்கள் மற்றும் குடிதண்ணீர் தொட்டிகள், நீர் தேக்கங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை இஸ்ரேலிய ராணுவத்தினர் அழித்தனர்.
மரணம், கைது மற்றும் சித்ரவதை
2023 அக்டோபர் முதல், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ராணுவம் மேற்கு கரையில் 190 குழந்தைகள் உட்பட சுமார் 900 பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்துள் ளது. அவர்களின் தாக்குதலால் 8,400 பேர் படுகாய மடைந்துள்ளனர். 2023 பிற்பகுதியிலிருந்து, இஸ்ரே லின் ஆக்கிரமிப்பு ராணுவம் 15,000 பாலஸ்தீனர்களைக் கைது செய்துள்ளது, பலர் ‘நிர்வாகத் தடுப்பு’ என்ற சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டே இன்றிக் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 2023 அக்டோபர் 7 முதல், இஸ்ரேலின் சிறைகள், தடுப்பு மையங்கள் மற்றும் முகாம்களில் 65க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆவ ணப்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண், குழந்தைகள் என அனைத்துப் பாலஸ்தீனர்கள் மீதான பாலியல் வன்முறைகள் இந்த முகாம்களில் வழக்கமாக நடைபெறுகிறது.
கவிதையின் குரல்
ஃபத்வா ஹாஃபெஸ் துகான் 1917இல் பாலஸ்தீன நகரமான நாப்லசில் பிறந்தார். அவர் 2003 இல் இறந்தபோது அவரது நகரம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஒரு பகுதியாக இஸ்ரேல் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. கவிஞர் மஹ்மூத் தார்விஷ் அவருக்காக எழுதிய இரங்கல் உரையில், ‘பேர ழிவு காலத்தில் கவிஞர் என்ன செய்கிறார்?’ என கேட்டார். ‘திடீரென, கவிஞர் தன்னை விட்டு வெளியே வர வேண்டும், கவிதையே சாட்சியாக இருக்கிறது’. அவரது மிகவும் கொண்டாடப்பட்ட கவிதைகளில் ஒன்று ‘கடற்பறவை மற்றும் மறுப்பிற்கு மறுப்பு’ ஆகும்:
“பறவையே, என் கடற்பறவையே, இப்போது அறிந்தேன்
கடுமையான நேரங்களில், மௌனச் சுரங்கத்தில் நின்று,
எல்லாம் மாறும்.
இறந்தவர் இதயத்திலும் விதைகள் முளைக்கும்,
காலை இருளிலிருந்து வெடிக்கும்.
ஏனென்றால் இப்போது அறிந்தேன்
ஏதோ நடந்தது… அடிவானம் பிளந்தது, வீடு பகல் ஒளியை வரவேற்றது.”