articles

img

வெல்லட்டும் வேலைநிறுத்தம் - வி.குமார்

இந்திய நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழிலாளர்கள், அனைத்துதுறை களிலும் பணியாற்றும் உழைப்பாளி மக்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், இணைந்து மார்ச் 28-29 தேதிகளில் நடத்தவிருக்கும் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு நாடு தயாராகிவருகிறது.  ஆளும் வர்க்கத்தின் நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிராக 1991ஆம் ஆண்டு நவம்பர் 29இல் நடை பெற்ற முதல் பொது வேலைநிறுத்தம், தொடர்ந்து 30 ஆண்டுகளாக எண்ணற்ற போராட்டங்கள்-வேலை நிறுத்தங்கள், துறைவாரி போராட்டங்கள் என தொடர்ச்சியாக நடைபெற்றன. கடந்த 2020ஆம் ஆண்டு  நவம்பர் 26இல் நடைபெற்ற வேலை நிறுத்தம் 20ஆவது வேலை நிறுத்தமாகும். அன்றுதான் புதுதில்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை 378 நாட்களாக தொடர்ந்து நடத்தி, மோடியை மண்டியிடச் செய்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்ற நிகழ்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு துவக்கத்தில் மார்ச்  28-29 தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டம் 21ஆவது வேலை நிறுத்தபோராட்டமாகும்.

விலைவாசி உயர்வு, தனியார்மயம், வேலை யின்மை, பொதுத்துறை பங்கு விற்பனை போன்ற பிரச்சனைகளோடு தொழிற்சங்க உரிமையை மறுப்பது, கூட்டுப்பேர உரிமையை மறுப்பது, தொழி லாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்பாக மாற்று வது, அமலாக்க பிரிவுகள் அக்கறையின்றி இருப்பது,  சட்டத்தை மதிக்காத முதலாளிகளோடு கைகோர்த்து இருப்பது போன்ற தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளால் பாதிக்கப்படாத பிரிவினரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதித்துள்ளனர்.  இந்த காலங்களில் ஏற்பட்ட விலையேற்றங்கள் திட்ட மிட்டு உருவாக்கப்பட்டவை, வர்த்தகச் சூதாடிகளும், அந்நிய நிறுவனங்களும் உணவுப் பொருட்களை ஊக வாணிபம் செய்ய அனுமதித்தது மிகவும் கொடுமை யாகும். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை  ஏற்றங்கள் தொடர் விளைவுகளை நிகழ்த்தி விலையேற்றத்தை வேகப்படுத்தியுள்ளது. இந்த விலையேற்றங்கள் ஏற்கனவே இருந்த அரைகுறை வாழ்க்கைத் தரத்தையும் சிதைத்துவிட்டன. 

பொதுத்துறை பங்கு விற்பனை'

நவீன இந்தியாவின் கோவில்கள் என்றும், இந்தியா வின் முதுகெலும்பு என்றும் வர்ணிக்கப்படும் பொதுத் துறை நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக ஏற்படுத்தப் பட்டவை அல்ல, பொதுத்துறைகள் அரசின் வசம் இருந்தால்தான் அது மக்களின் சேவைக்காகவும்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளாக, மருத்துவமனைகளாக, கல்விக் கூடங்களாக பொது விநியோகத் துறை மானியங்களாக நமது  நாட்டின் சுயசார்புகள் பொருளாதாரத்தை உள்கட்ட மைப்பு மேம்படுத்த, கிராமப்புற மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்கு, கண்ணியமான வேலை வாய்ப்பை உருவாக்க, இட ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட, இதர சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரி வினர்க்கு வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதில், இப்படி ஏராளமான நலதிட்டங்கள் மக்களுக்கு அளித்துவரும் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மய மாக்குவது என்பது பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வதற்குச் சமம். 

தேசிய பணமாக்கல் திட்டம்

2021 ஆகஸ்ட் 22 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் மதிப்புமிக்க, உற்பத்தி வளம்மிக்க உயிர் நாடியான செயல்பாட்டு கட்டமைப்புகளாக திகழ்கின்ற பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் பெறுமானம் உள்ள பொதுத்துறை சொத்துக்களை எல்லாம் கார்ப்பரேட் கூட்டுக் களவாணி கம்பெனிகளுக்கு தாரைவாக்க வழி செய்துள்ளது. இதன் மூலம் 26,700 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், 400 ரயில் நிலையங்கள், 150 ரயில்கள், 42300 மின்திட்ட கிலோ மீட்டர் தூரம் மின்சார பகிர்மான லைன்கள், சூரியமின் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி சொத்துக்கள்.  இயற்கை எரிவாயு பைப்லைன்கள், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய பைப்லைன்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள்,  விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் 160 நிலக்கரிச் சுரங்கத்திட்டங்கள், 2 விளை யாட்டு ஸ்டேடியங்கள் போன்றவற்றை தேசத்தின் வளங்களை பகிரங்கமாக சூறையாடுவதற்கு மோடி அரசு வழிவகுத்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பு களாக மாற்றி முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தொழி லாளி வர்க்கத்தை காவுகொடுக்கத் துணிந்துவிட்டது. 

நான்கு வகையான சட்ட தொகுப்புகள்

1.    ஊதிய தொகுப்பு,ஊதியம் வழங்குதல் சட்டம் 1936, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, சமஊதியம் சட்டம் 1976, 
2.    தொழில் உறவு சட்ட தொகுப்பு தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்தகராறு சட்டம் 1946, நிலையாணை சட்டம் 1946,
3.    சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பு தொழிலாளர் இழப்பீடுச் சட்டம், மாநில தொழி லாளர் அரசு ஈட்டுறுதிச் சட்டம், தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், வேலை வாய்ப்பு (காலி இடங்களில் கட்டாய அறிவிப்பு ) சட்டம்,  மகப்பேறுச் சட்டம், பணிக்கொடைச் சட்டம், சினிமா  தொழிலாளர் நல நிதி சட்டம், கட்டிடம் மற்றும் கட்டு மான தொழிலாளர்களின் நல வரிச் சட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு சட்டம்,
4.    தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த சட்டத்தொகுப்பு தொழிற்சாலைகள் சட்டம், ஒப்பந்தத் தொழி லாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம், கட்டிடம் மற்றும் காட்டுமான தொழிலாளர் சட்டம் (வேலை வாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்கு படுத்துதல்) சட்டம், விற்பனை ஊக்குவிப்பு பணியாளர் கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், மாநிலங்களுக் கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு ஒழுங்குமுறை) சட்டம், மோட்டார் வாகனத் தொழிலாளர் சட்டம், சினிமா தொழிலாளர்கள், மற்றும் சினிமா தியேட்டர் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு  ஒழுங்குமுறை) சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம்,  சுரங்க சட்டம், பத்திரிகையாளர்கள் பிற செய்தித்தாள் ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) மற்றும் இதர விதிகள் சட்டம், பணிபுரியும் பத்திரிகையாளர்கள் (ஊதிய விகிதங்களை நிர்ணயித்தல்) சட்டம், பீடி  மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலைக்கான நிபந்தனைகள் )சட்டம், கப்பல் துறை தொழிலாளர் கள்(பாதுகாப்பு, சுகாதராம் மற்றும் நலன்) சட்டம், 

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு அடி பணிந்து இந்த புதிய தொகுப்பின் மூலமாக முதலாளி கள் தொழிலாளர்களை கட்டுப்பாடற்ற சுரண்டலை எளி தாக்கி பெரும் மூலதனத்தின் பலிபீடத்தில் தொழி லாளர்களின் தியாகம் செய்வதற்கு எடுக்கும் முயற்சி யின் மற்றொரு சான்றாக மோடி அரசாங்கத்தின் நட வடிக்கை அமைந்துள்ளது. இது முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்க உதவும் மற்றொரு நடவடிக்கை யாகும். 

குறைந்தபட்ச ஊதியம்

ஊரடங்கின் போது இந்திய கார்ப்பரேட் செல்வந்தர் களின் சொத்து மதிப்பு 35சதவிதமாக உயர்ந்து அது 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் அதிகரித்துள் ளது.  தொற்று நோய்களின் போது இந்தியாவில் உள்ள  பணக்காரர்களின் சொத்து அதிகரித்துக்கொண்டி ருக்கையில் நாட்டில் உள்ள 40 கோடி முறைசாராத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் தள்ளப் பட்டனர். நெருக்கடியின் மிகமுக்கிய முகம் பசி மற்றும் வறுமை 2021 உலகளாவிய பசி குறியீட்டில் 116நாடு களில் இந்தியா 101ஆவது இடத்தில் உள்ளது, குறைந்தபட்ச ஊதியத்திற்கான இந்திய தொழி லாளர் மாநாட்டின் (ILC) பரிந்துரைகள் மற்றும் உச்சநீதி மன்ற உத்தரவுகள் அனைத்தும் நாட்டின் தொழி லாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், விலைவாசி உயர்வும் அனை வருக்கும் ஒரேமாதிரியானவை; உண்மையில் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், குறிப்பாக உணவு, உடை, போக்குவரத்து, மற்றும் மருந்துகளின் விலை கள் 2015முதல் கணிசமாக அதிகரித்துள்ளன. எனவே, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது. 

நவீன தாராளமயக் கொள்கை மூர்க்கத் தனமாக அரசு அமலாக்க முயற்சித்தபோது கடந்த 30 ஆண்டுகளில் நடத்திய போராட்டத்தின் விளைவாக. தேசம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தாராளமயக் கொள்கைகளை அரசு அமலாக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கும். இதை தடுத்து நிறுத்த வேண்டிய  தேசபக்தி கடமை இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு.  நவீன தாராளமய ஆட்சியால் தீவிரபடுத்தப்பட்ட பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும், தலித்துக்கள், பெண்கள், மற்றும் பிறபிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பொருளாதார சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறையை நிகழ்த்தும் கார்ப்பரேட் வகுப்புவாத கூட்டணிக்கு எதி ராகவும், மக்கள் விரோத கொள்கைகளை இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற செய்தியோடு நாட்டையும், மக்களையும் காப்போம்; ஒன்றுபட்டு போராடுவோம், வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!

கட்டுரையாளர் : மாநில உதவி பொதுச்செயலாளர், சிஐடியு