articles

img

தடம் மாறும் ஐடிஐகளை முதல்வர் சீரமைப்பாரா? - மு.சீனிவாசன்

இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக உருவான தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தற்போது ஒன்றிய அரசின் கொள்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக தனது அடையா ளத்தை இழந்து வருகின்றன. ஐடிஐகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக Centre of Excellency (COE) பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட துறையில் நிபு ணத்துவம் வழங்குவதற்கு பதிலாக பல்துறை பயிற்சி வழங்கப்பட்டது. இதனால் பயிற்சியா ளர்கள் திறன் பாதிக்கப்படும் என தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் கடும் எதிர்ப்பு மற்றும் ஜனாதிபதிக்கு கையெழுத்து இயக்கம் என பல்வேறு இயக்கங்கள் நடத்தப் பட்ட நிலையில் சமீபமாக இத்திட்டம் கைவிடப் பட்டது. ஆனால் அத்திட்டத்தில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் கடந்த  5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளாக குறை வான ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் தெரி வித்தபடி மேற்கண்ட ஊழியர்களை நிரந்த ரப்படுத்தி அவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும்.

பாடத்திட்டம் குறைப்பு

தற்போது ஐடிஐகளில் பயிற்சி பெற்று செல்லும் பயிற்சியாளர்களுக்கு 12ஆம் வகுப்பு க்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதற்கான பாடத்திட்டங்களை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ஐடிஐ பயிற்சி பெறும் பயிற்சியாளர்களை கொத்தடிமை கூலி தொழி லாளர்களாக மாற்றும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு தற்போது பாடத்திட்டங்களை குறைத்து ஆணை பிறப்பித்துள்ளது முற்றிலும் துறையை, பயிற்சியின் தரத்தை சீர்குலைக் கும் நடவடிக்கையாகும். பாடத்திட்டங்களுக்கான கால அளவு குறைக்கப்பட்டதோடு பாடத்திட்டத்தில் Work shop calculation and science மற்றும் Enginee ring drawing போன்ற அத்தியாவசிய பாடத்திட்டங் கள் நீக்கப்பட்டு குறைவான அளவோடு (4 மதிப் பெண்கள் வாங்கினால் தேர்ச்சி)  Trade theory பாடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்புதிய முறை அமல்படுத்தப் பட்டால் ஐடிஐயில் பயிற்சி பெற்று நிறு வனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் கணிதம், தொழில்நுட்ப வரைபடம், இயந்திர அறிவியல் போன்ற எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச்செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரிவார்கள். இதனால் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நோக்கம் சிதைவுற்று வெறும் நோக்கமற்ற பாடத்திட்டமாக மாறும் நிலை ஏற்படும்.

தேவை பயிற்சியா? பதிவேடுகளா?

தொழிற்பயிற்சித் துறை ஆரம்பித்த காலத்தி லிருந்து இன்றுவரை 21 முறை அகில இந்திய அளவில் முதன்மை சான்றிதழ்கள் பெற்றுள்ளது  தமிழகம். ஆனால், இவை கடந்த பத்தாண்டுக ளுக்கு முன்புதான். காரணம், கடந்த காலங்க ளில் இத்துறையில் பயிற்சிக்கு முக்கியத்து வம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பயிற்சியின் தரத்தை விட அதற்கு பதிலாக 25 வகையான பதிவேடுகளுக்கே முக்கியத்து வம் கொடுக்கப்படுகின்றது. இதனால் பயிற்று னர்கள் தாங்கள் பயிற்சி வழங்கும் நேரத்தை பதிவேடுகளை பூர்த்தி செய்வதிலேயே செல விடும் நிலை ஏற்படுகிறது. தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பாக பலமுறை முறையீடு செய்தும் இன்றுவரை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையை ஏற்க துறை காலம் தாழ்த்தி வருகிறது.

CBT தேர்வு முறை  தேவைதானா?  

செய்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இத்துறையில் பயிற்சியாளர்களின் திறமையை சோதிக்க விரிவாக எழுதுதல் (Subjective) தேர்வு முறைகளையே கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தி வந்தது. தற்போதும்  பட்டயம் மற்றும்  பொறியியல் தேர்வுகள் விரிவாக எழுதும் முறையில் நடத் தப்பட்டு வரும் சூழலில் இத்துறையில், டிஎன்பி எஸ்சி, நீட் போன்ற போட்டி தேர்வு முறை களைப்போல  CBT கணினி முறையில் தேர்வு கள் நடத்தப்படுகின்றன. இதனால் பயிற்சியா ளர்களின் அறிவுத்திறனை உரிய முறையில் பரிசோதிக்க இயலுவதில்லை. ஆகவே, மீண்டும் விரிவாக எழுதும் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டியது அவசியம்.

ஐடிஐயிலும்  புதிய கல்விக்கொள்கை

ஐடிஐயில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சி யாளர்கள் தொழில் முனைவோர்களாக, வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்க ளாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்க ளாக பணிபுரிவதை கேள்விக்குறியாக்கும் வகையில் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் புதிய தொழிற்கல்வி முறை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சிக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எந்த வகையிலும் மாறு படாத - இளைஞர்களுக்கு, வருங்கால தொழி லாளர்களுக்கு எதிரான கொள்கையாகும்.

பணி அமர்த்தும் அலுவலர் பணி

ஐடிஐகளில் தேர்ச்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்களுக்கு உதவும் வகையிலும், தொழில் நிறுவனங்களின் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் முக்கி யத்துவம் வாய்ந்த இப்பணியை உரிய முக்கி யத்துவத்தோடு தனித்துவமாக செய்திட வாய்ப்பு வழங்கிட வேண்டும். மேலும், தொழில் நிறுவனங்களில் தொழில்பழகுனராக பணி புரிய அரசு விதிப்படி ரூ.7709 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் கடந்த காலங்க ளைப்போல தொழில் நிறுவனங்கள் தொழில் பழகுனர்களாக பணியில் சேரும் பயிற்சியா ளர்களை நிரந்தரம் செய்வதில்லை. எனவே, பயிற்சியாளர்களுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்திடவும், தொழில்நிறுவனங்கள் தொழில்பழகுனர் பயிற்சியில் பணிபுரியும் பயிற்சியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வாய்ப்பு வழங்கிடவும் ஆவண செய்திட வேண்டும். இப்பணியை செய்திட தொழில் நிறு வனங்களுக்கு செல்லவும் , இவ்வலுவலரை தொழில் நிறுவனங்கள் அங்கீகரித்திடவும் உரிய முக்கியத்துவம் வழங்கினால் இப்பணி முழுமையடையும்.

காலிப்பணியிடங்கள்

பயிற்சியாளர்களுக்கு இயந்திரங்களில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுவரும் இத்துறை யில் திறன் பெற்ற உதவியாளர் (Skilled Assis tant) முதல் முதல்வர் வரை உள்ள சுமார் 40 சத வீதம் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து உரிய முறையில் பயிற்சி வழங்கிட வாய்ப்பு வழங்க வேண்டும்.

மூன்றாம் பணிமுறை 

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பயிற்சி யற்ற தொழிலாளர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள ஐடிஐகளில் மூன்றம் பணிமுறை அமல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் பயன்பெற்ற பயிற்சியாளர்களைப்போல இனி வருங்காலங்களில் பயிற்சிபெற முயற்சிக்கும் தொழிலாளர்களின் வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மீண்டும் மூன்றாம் பணிமுறை அமல்படுத்த வேண்டும். தொழிற்பயிற்சித் துறையின் நோக்கத்தை முழுமையாக அமல்படுத்தி  தமிழகம் தொழிற் துறையில் மேலும் வளர்ந்திட வாய்ப்பு உரு வாக்கிட; இத்துறையின் பயிற்சி மேம்பட; தொடர்ந்து கோரிக்கை தீர்மானங்களை முன்வைக்கும் தமிழ் நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தை தமிழக அரசு அழைத்துப் பேசிட வேண்டும்.