articles

img

எல்ஐசியும் வீழும் போது.... - டி.சந்திரமோகன்

தனிநபர் காப்பீடு பாதுகாப்பை உறுதிசெய்கிற, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பெரு மளவில் நிதி அளிக்கிற, பொருளாதார ரீதியில் அரசிற்கு உதவிபுரிகிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்குகளை விற்பதற்கான நட வடிக்கைகள் துவங்கியுள்ளன. நாட்டின் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முதல் பங்கு விற்பனையாக இது இருக்கும். முதன்மையான பங்கு விற்பனையானது நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான முதல் கட்டமாகும். 

பொன்முட்டையிடும் வாத்து

நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள பொதுத்துறை நிறுவனத்தை லாப வெறியர்கள் மற்றும் யூக வணிகர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது மோடி அரசு. எல்ஐசி-யின் ஐபிஓ மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதே அரசின் இலக்கு ஆகும்.  நீண்ட கால அடிப்படையில் ஏற்படுகின்ற தவறுகளை மனதில் கொள்ளாமல்  பணத்தின் அவசரத் தேவை மோடி அரசை கண்மூடித்தனமாகச் செயல்பட வைக்கிறது. பொன்முட்டையிடும் வாத்தைத்தான்  இவர்கள் கழுத்தறுத்துக் கசாப்பு செய்கிறார்கள். கோவிட் நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்குத்தான் எல்ஐசியின் பங்குகள் விற்கப்படுகின்றன என்ற வாதம் சரியல்ல.  2020ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை யில்தான் எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டிருந்தன. ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆண்டிற்கு 2500 கோடி ரூபாய் வருடாந்திர லாப விகித மும் 10,000 கோடிக்கும் அதிகமான ரூபாய் வரியும் ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது. 32 லட்சம் கோடி ரூபாய்க்கான சொத்துக்களை சேகரிப்பதற்கு உதவு கின்ற ஒரு மகத்தான நிறுவனமாகும் எல்ஐசி. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பது எதற்காக? இது அறிவார்ந்த செயல்தானா என்ற கேள்விதான் எழுகிறது. 29 கோடி பேர்களுக்கு மிகச் சிறந்த சேவையையும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குகிற இந்த நிறுவனத்திலிருந்து கிடைக்கும் சமூக நன்மைகள் மிகப்பெரிய அளவிலானதாகும். 

எல்ஐசி துவங்கப்பட்டபோது...

பங்குகளை விற்க முடிவு செய்வதற்கு முன்பாக எல்ஐசி துவங்கப்பட்டது குறித்தும் அன்றைய காப்பீட்டுத் துறையின் நிலைமைகள் குறித்தும் அரசு  மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பொது மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டு வந்தன.  1818 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆரம்பிக்கப் பட்ட ஓரியண்டல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம்தான் முதல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். அது தனது சேவையை ஐரோப்பிய சமூகத்திற்கு மட்டும் செய்துவந்தது. ஓரியண்டல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் உள்பட வேறு சில வெளிநாட்டு நிறுவனங்க ளும் இந்தியர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை வழங்க வில்லை. தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு காப்பீட்டு நிறுவனங்கள் மக்களிடமிருந்து சேகரிக்கும் பிரீமியங்களை வேறு வகைகளில் செலவு செய்து வந்தன. 

1955 ஆம் ஆண்டிற்கு முன்பு 25 நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. 80 நிறுவனங்கள் சட்டப்படி யான வருமானவரித் தாக்கலைக்கூட சமர்ப்பிக்க வில்லை. 245 ஆயுள், 108 பொதுக் காப்பீட்டு நிறுவ னங்கள் பாலிசிதாரர்களுக்கு சேவை செய்வதில் தோல்வியடைந்தது. அன்று காப்பீட்டுத் துறை பெரு மளவில் முறைகேடுகள் நடைபெற்ற ஒரு துறையாக இருந்தது.  நேரு தலைமையிலான முதல் அமைச்சரவையின் காலத்தில் காப்பீட்டுத் துறையின் செயல்பாடுகளை ஆய்வுசெய்வதற்கு விவியன் போஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது. கறுப்புப்பணம், கையாடல், பெரும் வியாபார நிறுவனங்களின் போலி காப்பீடு உரிமை கோரல், காப்பீட்டு தொழிலில் அவர்களின் சகோதர நிறுவனங்களை உட்படுத்தி கையாடல் செய்தல் போன்ற இத்துறையில் நடைபெற்ற பல்வேறு முறை கேடுகளை கமிஷன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 

தொடர்ந்து பொதுநலன்களைப் பாதுகாப்பதற்காக 5 கோடி ரூபாய் மூலதனத்துடன் 1956ஆம் ஆண்டு எல்ஐசி உருவாக்கப்பட்டது(செப்டம்பர் 1 ஸ்தாபக தினம்). தனியார் நிறுவனங்களை இணைத்து எல்ஐசி உருவாக்கப்பட்டது. 154 உள்நாட்டு நிறுவனங்கள், 16 வெளிநாட்டு நிறுவனங்கள், 75 வருங்கால வைப்பு நிதி சங்கங்கள் ஆகியவை இதில் இணைந்தன. ஐஆர்டிஏ சட்டம் வந்தபோது மூலதனம் 100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பங்கு விற்பனைக்கு முன்னோடியாக எல்ஐசியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 25,000 கோடி ரூபாயாக அதிகரித்துள் ளது. குறைந்த அளவிலான அரசு ஆதரவும் தனியார் துறைகளின் கடும் போட்டியும் இருந்தபோதிலும் 1999 முதல் எல்ஐசியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருந்தது.  2021 மார்ச் மாதத்தில் பாலிசிகளின் எண் ணிக்கையில் அதன் மார்க்கெட் விகிதம் 81.04 சத வீதமும் பிரீமியம் தொகையில் 64.74 சதவீதமுமாக இருந்தது. எல்ஐசியின் உபயோகிப்பாளர்கள் சேவை மிகவும் சிறந்தது என்று 1993 ஆம் ஆண்டு மார்க் சர்வேயைப் பயன்படுத்தி ஆர்.என்.மல்ஹோத்ரா கமிட்டி கண்டறிந்தது. 97 சதவீதம் பேர்களும் எல்ஐசி யின் சேவையை மிகச் சிறந்தது மற்றும் உன்னத மானது என்று மதிப்பீடு செய்துள்ளார்கள்.

13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வாழ்வாதாரம்

2021 மார்ச் மாதக் கணக்கின்படி எல்ஐசிக்கு 8 மண்டல அலுவலகங்கள், 113 பிராந்திய அலுவலகங் கள், 2048 கிளை அலுவலகங்கள், 1546 சாட்டிலைட் அலு வலகங்கள், 1173 சிறு அலுவலகங்கள் ஆகியவை உள்ளன. பிஜி (ஸுவ, லவட்டோக்), மொரீஷியஸ் (போர்ட் லூயிஸ்), யு.கே.(வெம்ப்ளி) ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. பஹ்ரைன், நேப்பாள், இலங்கை, கென்யா, சவூதி அரேபியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த நிறுவனங்களும் சிங்கப்பூரில் வெளிநாடு உரிமையாளரின் தலைமையி லான இணைப்பு நிறுவனமும் உள்ளன.எல்ஐசி வேறு பல செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிட், எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிட், எல்ஐசி பென்சன் ஃபண்ட் லிட், எல்ஐசி  கார்ட்ஸ் சர்வீசஸ் லிட், ஐடிபிஐ வங்கி ஆகியவை எல்ஐசியின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களாகும். 

31 லட்சம் கோடி ரூபாய் வரவு-செலவு உள்ள எல்ஐசி நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிதி சேவை நிறுவனமாகும். 39.51 லட்சம் கோடி சொத்துகள் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. எல்ஐசியில் காப்பீடு செய்யப்பட்டுள்ள மூலதனத்தின் மதிப்பு 56.86 லட்சம் கோடி ரூபாயாகும். 1,14,498 ஊழியர்கள் உள்ள னர். மொத்தம் 12,08,826 பேரில் 10,92,809 ஆக்டிவ்  முகவர்கள் உள்ளனர். (2021 மார்ச் 31 வரை) அதாவது 13 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வழங்கும் நிறுவனம். லாபத்தின் 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5 சதவீதம் அரசுக்கு வழங்கப்படுகிறது. 2019-2020ல் 2697.74 கோடி ரூபாய் அரசுக்கு லாபமாகக் கிடைத்தது. அந்த ஆண்டு எல்ஐசி செலுத்திய வரி 10,225,24 கோடி ரூபாயாகும்.

35.18 லட்சம்கோடி முதலீடு

நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம் என்ப தற்கும் மேலாக எல்ஐசி அரசுக்கு பெருமளவில் நிதி உதவி அளிக்கிறது. 2021 மார்ச் வரையிலான கணக்கின்படி 35.18 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மட்டும் 1,178,717.61 கோடி ரூபாய்  மாநில அரசுகளுக்கு கடனாக வழங்கியுள்ளது. மேலும் அதே ஆண்டில் 52,297.79 கோடி ரூபாய் மின்சாரம், வீட்டுவசதி, நீர்வழங்கல், கழிவுநீர், சாலைகள், பாலங்கள், ரயில்வே ஆகிய சமூகநலத் துறைகளில் முதலீடு செய்யப்பட்டது.  2021 மார்ச் 31 கணக்கின்படி ஒன்றிய,மாநில சமூக நலத்துறைகள் மற்றும் அரசால்  உத்தரவாதம் செய்யப்பட்ட பங்குகளில் ஆகிய வற்றில் 35,22,547 கோடி ரூபாய் முதலீடு செய்யப் ட்டுள்ளது.  பிற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றபோது அதை எல்ஐசி வாங்கி அரசுக்கு உதவி யது. 2012 ஆம் ஆண்டு விற்கப்பட்ட ஓஎன்ஜிசி-யின் ஐந்து சதவீத பங்கில் 4.4 சதவீதத்தை எல்ஐசிதான் வாங்கியது. 2009-10 ஆண்டுகளில் நேஷனல் மினரல் டெவலெப்மெண்ட் கார்ப்பரேசனின் (NMDC) 9928 கோடியில் 6000 கோடி, என்டிபிசி-யின் 8480 கோடியில் 4263 கோடி பங்குகளை எல்ஐசி வாங்கியது. எல்ஐசி வாங்கிய மேலும் சில முக்கிய பங்குகள் விபரம்: கெயில் (2013- 71 சதவீதம்), பெல் (2014- 2685 கோடி), கோல் இந்திய லிமிடெட் (7000 கோடி), ஜிஐஸி (8000 கோடி), நியூ இந்தியா அஷுரன்ஸ் கம்பெனி (6500 கோடி), ஹெச்ஏஎல் (2018- 2900 கோடி). பெரும் நஷ்டத்தில் இயங்கிய ஐடிபிஐ வங்கி யின் 51 சதவீத பங்குகளை 2019ல் வாங்கி வங்கியை எல்ஐசி தனதாக்கியது.

பொருளாதார தாராளமயக் காலத்திற்குப் பிறகு பல்வேறு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கள மிறங்கின என்றபோதிலும் எல்ஐசியுடன் போட்டிபோட இயலவில்லை. பலர் நிலைத்துநிற்க முடியாமல் இழுத்துப்பூட்டிவிட்டுச் சென்றார்கள். தற்போதுகூட எல்ஐசியின் மார்க்கெட் விகிதம் 75 சதவீதத்திற்கும் கூடுதலாகும். 23 தனியார் நிறுவனங்களின் மொத்த மார்க்கெட் விகிதம் 25 சதவீதத்திற்கும் குறைவாகும். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. தனியார் நிதி நிறு வனங்களை மக்கள் நம்பிக்கையானதாகப் பார்ப்ப தில்லை. எல்ஐசி-யை பலவீனப்படுத்தினால் மட்டுமே தனியார் நிறுவனங்கள் செழித்து வளர முடியும். தொலைத் தொடர்புத் துறையைப் போல் காப்பீட்டுத் துறையை பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கவே எல்ஐசியின் பங்கு விற்பனையின் மூலம் ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

தேசாபிமானியிலிருந்து தமிழாக்கம் : மு.சங்கரநயினார்,