articles

img

உ.பி., மக்களின் கோபம் பாஜகவை நிச்சயம் வீழ்த்தும்! - அ.அன்வர் உசேன்

உத்தரப்பிரதேசம்/உத்தரகண்ட்/பஞ்சாப்/கோவா/மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் அதிக கவனம் பெற்றிருப்பது உத்தரப்பிரதேச தேர்தல்! சுமார் 20 கோடி மக்களை கொண்ட உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை ஜெர்மனி/பிரிட்டன்/பிரான்சு ஆகிய மூன்று நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு ஈடானது! குஜராத்துக்கு அடுத்தபடியாக மிகக்கூர்மை யாக இந்துத்துவா கோட்பாடுகள் பரிசோதிக்கப்பட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த தேர்தலின் முடிவு கள் 2024 நாடாளுமன்ற தேர்தல்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என  ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.  உ.பி.மக்களுக்கு ஆதித்யநாத் ஆட்சி மீது அதிருப்தி உள்ளது என்பதை பா.ஜ.க. மேலிடம் அறிந் துள்ளது. எனவேதான் அவரை முதல் அமைச்சர் பதவி யிலிருந்து அகற்ற மோடி-அமித் ஷா தலைமை முயன்றது. ஆனால் ஆதித்யநாத்தின் மூர்க்கத்தன மான மறுப்பால் வேறு வழியின்றி அவரையும் உள்ள டக்கி பா.ஜ.க. தேர்தல்களை சந்திக்கிறது. 

மூன்று கருத்தாக்கங்கள் இந்த தேர்தலின் முடிவு கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளன. அவை:

  •     மதப்பிளவுவாதத்தை மையமாக கொண்ட கருத்தாக்கம்
  •     சமூக நீதி எனும் பெயரில் பிற்படுத்தப்பட்ட/இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களை திரட்டுவதை மையமாக கொண்ட கருத்தாக்கம். 
  •     பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த கருத்தாக்கம்.
     

இந்துத்துவா சக்திகளின் சூழ்ச்சி

2017ஆம் ஆண்டு ஆதித்யநாத் ஆட்சி அமைந்த பின்னர் மதப்பிளவுவாதம் மிகப்பெரிய அளவுக்கு முன்னெடுக்கப்பட்டது. 

ஆதித்யநாத்தின் ஆட்சி அமைந்தவுடன் இறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்துவது எனும் பெயரால் பல நூற்றுக்கணக்கான  கடைகள் மூடப்பட்டன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்கள்தான் என்பதை கூறத் தேவையில்லை. இவரது ஆட்சியில் 8742 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 146 பேர் கொல்லப்பட்டனர். 3200 பேர் வாழ்நாள் முழு தும் முடங்கும் அளவுக்கு காயம் அடைந்தனர்.  இவர்க ளில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் மற்றும் பட்டிய லினப் பிரிவினர். சில பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் அடங்குவர். மாட்டிறைச்சி பிரச்சனையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்ட னர். கொலைகாரர்கள் பகிரங்கமாகவே “ஆட்சி எங்களுக்கு ஆதரவாக உள்ளது” என கூறினர். பல சமயங்களில் காவல்துறையினர் பார்வையாளர்க ளாகவே இருந்தனர். ஆதித்யநாத் ஆட்சியில் சுமார் 1000 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் புனையப் பட்டுள்ளன. இதில் 60% இஸ்லாமியர்கள். ஆட்சியை விமர்சிக்கும் எவர் ஒருவரும் தேசதுரோக வழக்கில் சிக்கும் ஆபத்தை யோகி அரசாங்கம் உருவாக்கி யது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்க ளில் காவல்துறை துப்பாக்கிசூட்டில் 19 பேர் கொல்லப் பட்டனர். இதில் 14 பேர் இஸ்லாமியர்கள். 6600 பேர் கைது செய்யப்பட்டனர்; இவர்களில் 16 வயதுடைய சிறுவர்க ளும் அடங்குவர். இந்த அளவுக்கு அரசு இயந்திரத் தின் அடக்குமுறை வேறு எந்த மாநிலத்திலும் நடக்க வில்லை. மதப்பிளவை கூர்மையாக்கும் நோக்கத்து டன்தான் காசி விஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள மசூதி மற்றும் மதுராவில் கிருஷ்ணர் கோவில் அருகில் உள்ள மசூதிகளை குறிவைத்து இந்துத்துவா அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. ராமர் கோவில் கட்டுமானமும் இந்த கோணத்தில்தான் பயன்படுத்தப் படுகிறது. இஸ்லாமியர்கள் உ.பி.ல் கிட்டத்தட்ட இரண்டாம்தர குடிமக்களாக அரசு இயந்திரத்தால் பார்க்கப்படுகின்றனர் எனில் மிகை அல்ல.

மண்டல் சக்திகளின் எதிர் சவால்

பா.ஜ.க.வின் மதவாத கருத்தாக்கத்துக்கு எதிராக ‘மண்டல் சக்திகள்’ அதாவது சமூக நீதியை முன்னெடுக் கும் சக்திகள் வலுவான எதிர்சவாலாக உருவாகியுள்ளன. உ.பி. சமூக கட்டமைப்பு கீழ்கண்டவாறு உள்ளது:

  • முற்பட்ட பிரிவினர்- 20% (பிராமணர்கள்/பனியாக்கள்/தாகூர்)
  •     பிற்படுத்தப்பட்ட பிரிவினர்- 40% (யாதவர் 7% உட்பட)
  •     இஸ்லாமியர்கள்- 19 முதல் 20%
  •     பட்டியலினப் பிரிவினர்- 20 முதல் 21% (மாயாவதியின் ஜாதவ் பிரிவினர்  12% உட்பட)

இத்தேர்தலில் பா.ஜ.க.வின் அணுகுமுறை 20% இஸ்லாமியர்களுக்கு எதிராக 80% இந்துக்களை திரட்டுவது என்பதுதான்! அதற்காகவே இந்த தேர்தல் 80க்கும் 20க்கும் இடையே நடக்கும் போர் என ஆதித்ய நாத் மிகவும் வெறித்தனத்துடன் வர்ணித்தார். 2017 தேர்தல்களில் இதனையே ஆர்.எஸ்.எஸ். அமைப் பும் பா.ஜ.க.வும் அமலாக்க முயன்றன; முற்பட்ட பிரிவின ரின் வாக்குகளை மிகப்பெரும்பான்மையாக பெறுவதை இந்துத்துவ சக்திகள் உத்தரவாதப்படுத்தின. பின்னர் யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவினரான குர்மி/மவுரியா/குஷாவா/நிஷாத் போன்ற சமூகங்களின் வாக்குகளையும் தலித் பிரிவில் ஜாதவ் அல்லாத வாக்குகளையும் இலக்காக கொண்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். 39.67% வாக்குகள் பெற்று 402 தொகுதிகளில் 312ல் பா.ஜ.க. வென்றது. சமாஜ்வாதி கட்சி 22% பகுஜன் கட்சி 22% வாக்குகள் பெற்றாலும் குறைவான தொகுதிகளில்தான் வென்றன. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாக்குகளை கணிசமாக பா.ஜ.க. பெற்றதுதான்!  ஆட்சியிலும் நிர்வாகத்திலும் பிற்படுத்தப்பட்ட பிரி வினருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. ஆனால் நடைமுறையில் அதனை நிறைவேற்றவில்லை. ஆதித்யநாத் தனது சமூகத்தினரான தாகூர் பிரிவினருக்கு மட்டுமே கூடுதல் நன்மைகள் செய்வதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பா.ஜ.க.வுக்கு எதி ராக அதிருப்தி கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சுமார் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக ஆதித்ய நாத் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே சில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க.வை விட்டு வெளியேறியுள்ள னர்.  யாதவர் சமூகம் மட்டுமல்ல; கணிசமான மற்ற பிற் படுத்தப்பட்ட பிரிவினரும் பா.ஜ.க.வின் மேல் கோபமாக உள்ளனர் என்பதே இன்றைய நிலை. 

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள 76 சட்டமன்ற தொகுதிகளில் ஜாட் சமூகத்தினரும் முஸ்லீம்களும் பெரும் அளவில் உள்ளனர். 2013ஆம் ஆண்டில் இந்துத் துவா சக்திகள் உருவாக்கிய முசாபர்பூர் கலவரங்கள் மூலம் சீர்குலைந்த முஸ்லீம்-ஜாட் இன மக்கள் ஒற்றுமை விவசாயிகள் போராட்டம் மூலம் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. 2017 தேர்தல்களில் இந்த பகுதியில் உள்ள 76 தொகுதிகளில் 66ஐ பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால் இந்த முறை பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் என பரவலாக மதிப்பிடப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களிடம் உருவாகியுள்ள கோபத்தையும் முஸ்லீம் - ஜாட் இன மக்களிடையே உருவாகியுள்ள ஒற்றுமை யையும் சமாஜ்வாதி கட்சி சிறப்பாக ஒன்றுபடுத்துமா? கமண்டல சக்திகளை மண்டல் சக்திகள் பின்னுக்கு தள்ளுமா? இந்த கேள்விகளின் பதிலில்தான் உ.பி. தேர்தல் முடிவுகள் அடங்கியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின்  சமூக-பொருளாதார துன்பங்கள்

மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாக உருவான பொருளாதார துன்பங்கள் ஆதித்யநாத் ஆட்சியின் தவறான முன்னுரிமைகள் விளைவாக மேலும் இன்னல்களை உத்தரபிரதேச மக்கள் மீது சுமத்தியுள்ளன.

  •     இளைஞர்களிடையே வேலையின்மை-  23.2%ஆக உயர்ந்துள்ளது.
     
  •     வேலையின்மை 10ம் வகுப்பு படித்தவர்களிடையே 300%; +2 படித்தவர்களிடையே 400%; பட்டதாரிகளிடையே 51%; தொழில்நுட்ப டிப்ளமா படித்தவர்களிடையே 66% என உயர்ந்துள்ளது.
  •     10% பெண்கள்தான் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ளனர். 90% பெண்கள் உழைப்பு சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர். 
  •     அனைத்து நான்காம் நிலை அரசுப் பணிகளும் அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
  •     ஆலை உற்பத்தி 15%லிருந்து மைனஸ் 3%ஆக வீழ்ச்சிஅடைந்துள்ளது.
  •     கடந்த 4 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 0.4%தான்உயர்ந்துள்ளது. 
  •     கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மின் திட்டம் கூட உருவாக்கப்படவில்லை. 
  •     கணிசமாக வேலை வாய்ப்புகளை வழங்கும் தோல்பதனிடும் நிறுவனங்களும் புகழ் பெற்ற அலிகார் பூட்டுதொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன.

பொருளாதார தளத்தில் இந்த நிலை எனில் சமூக குறியீடுகளிலும் உ.பி. மோசமான இடத்தில் உள்ளது. நிதி ஆயோக் உருவாக்கிய பன்னோக்கு வறுமை பட்டிய லில் மோசமான கடைசி இடத்தில் உ.பி. உள்ளது. சமூக குறியீடுகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உ.பி. எங்கே உள்ளது என்பது பற்றி சில விவரங்கள் கீழே:

  •     மனித வள மேம்பாடு- 35வது இடம்.
     
  •     குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு - 20வது இடம்.
  •     +2 கல்வி- 24வது இடம்.
  •     உள்கட்டமைப்புகள் கொண்ட பள்ளிகள்- 27வது இடம்.
  •     பிறக்கும் குழந்தைகள் மரண விகிதம்- 35வது இடம்.
  •     தனிநபர் சராசரி உற்பத்தி-31வது இடம்.
  •     பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்-30வது இடம்.
  •     அலைபேசி வசதி- 33வது இடம்.
  •     உள்ளாட்சிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம்- 29வது இடம்.
  •     புதுப்பிக்கத்தக்க மின்சாரம் - 26வது இடம்.
  •     பிரசவிக்கும் தாய்மார்கள் உயிரிழப்பு-18வது இடம்.

கடந்த 5 ஆண்டுகளில் ஆதித்யநாத் அரசாங்கம் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக் கும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக மதப்பிளவு நட வடிக்கைகளிலும் பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட பிரி வினரை பழிவாங்குவதிலும்தான் கவனம் செலுத்தி யுள்ளது. பா.ஜ.க. வுக்கு எதிராக கடுமையான அதிருப்தி உத்தரப்பிரதேச மக்களிடம் உள்ளது. உத்தரப்பிர தேச நலனுக்காக மட்டுமல்ல; இந்தியாவின் நலனுக்கா கவும் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டியது மிக அவசியம் ஆகும்.