சென்னை,ஏப்.2- மருத்துவப் படிப்புக்கான இடங்களை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப அனு மதிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச் சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி யிருக்கிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தில்லி யில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் மருத்துவத் துறை தொடர்புடைய 7 கோரிக்கைகள் அடங்கியமனுவை கொடுத்தார். அதில், நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது. ஏழை மாணவர்கள் மருத்து வம் படிப்பதில் உள்ள இன்னல்களை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின்படி 2021 செப்.19 இல் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் இந்திய முறை மருத்து வப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து தொழிற்கல்வி இடங்களை நிரப்ப தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமான பணியை விரைவாக தொடங்க குழுவை அமைக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 2-வது எய்ம்ஸ் மருத்து வமனையை அமைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சி புரம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்க ளில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க அனுமதி வழங்க வேண்டும். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர நட வடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்டி (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) படிப்புக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.