articles

img

மோடி அரசின் சேவையும் நிர்வாகமும் யாருக்கு? - அ.அன்வர் உசேன்

நரேந்திர மோடி பிரதமர் பதவியில் 8 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ளார். அவர் தலைமையில் பா.ஜ.க. அரசாங்கம் இந்த 8 ஆண்டுகளில் செயற் கரிய சாதனைகளை படைத்ததாக கருத்தாக்கம் முன் வைக்கப்படுகிறது. இந்த “சாதனை பிம்பத்தை” உரு வாக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு மிக அவசி யம்! ஏனெனில் குஜராத்,கர்நாடகம் உட்பட சட்ட மன்ற தேர்தல்களும் பின்னர் 2024 நாடாளுமன்ற தேர்தல்களும் நெருங்கி வருகின்றன. பொருளாதாரப் பிரச்சனைகளில் பொய்யான பிம்பங்களும் சமூக ரீதியாக மதப்பிளவு வாதங்களும் கூர்மையாக்கி மக்களை திசை திருப்புவது பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழிகோலும் என மோடி பக்தர்கள் எண்ணுகின்றனர்.

சமீபத்தில் ஜெய்பூரில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. மே 30 முதல் ஜூன் 15 வரை பாஜக-வின் வெற்றி சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சேவா (மக்கள் சேவை), சுஷாசன் (சிறந்த நிர்வாகம்), கல்யாண் (மக்கள் நலம்) எனும் குறிக்கோள் அடங்கிய புது முழக்கமும் இந்த கூட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சி யில் முழக்கங்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த 8 ஆண்டுகள் வேதனை கள் நிறைந்தவை என்பதையே பல புள்ளிவிவரங்க ளும் மக்களின் அனுபவங்களும் பறைசாற்றுகின்றன.

5 டிரில்லியன் பொருளாதாரம்- கானல் நீரா?

ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு தேசத்தின் வளர்ச்சியாக அளவிடப்படுகிறது. எனினும் இந்த வளர்ச்சி மக்களின் வாழ்வில் முன் னேற்றத்தை பிரதிபலிக்குமா என்பது கூறமுடியாது. ஜிடிபி வளர்ச்சி வலுவானதாக இருக்கலாம்; ஆனால் வேலைவாய்ப்பு, விலைவாசி,பசி-பட்டினி ஒழித்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் இல்லாமலும் இருக்க லாம். மோடி ஆட்சியில் இந்த ஜி.டி.பி. வளர்ச்சி கூட மெச்சும் அளவுக்கு இல்லை என்பதுதான் கொடுமை. ஆனால் இந்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 8.7சதவீதம் என மோடி பக்தர்கள் பெருமை கொள்கின்றனர். 

ஆனால் உண்மை என்ன?

நிதியாண்டு    பொருளாதாரம் (ரூபாய் லட்சம் கோடிகளில்)
2019    147.36
2020    135.58
2021    145.16

சென்ற ஆண்டு ஜிடிபி வளர்ச்சி மைனஸ் 6.6 சதவீதம். இந்த வீழ்ச்சி அடைந்த அடித்தளத்தோடு ஒப்பிட்டால் 8.7 சதவீதம் என்பதை மோடி பக்தர்களும் ஊடகங்க ளும் மறைத்துவிடுகின்றனர். கடந்த மூன்று ஆண்டு களில் வளர்ச்சி கீழ்க்கண்டவாறு இருந்தது. மோடி அரசாங்கம் 2020-2021 நிதியாண்டுகளை ஒப்பிட்டு 8.7சதவீதம் என பெருமை பீற்றிக் கொள் கிறது. ஆனால் 2019-2021 நிதியாண்டுகளை ஒப்பிட்டால் வளர்ச்சி என்பது வெறும் 2.2 லட்சம் கோடி அதாவது 1.52 சதவீதம் மட்டுமே! மோடி ஆட்சியின் 8 ஆண்டுக ளையும் அதற்கு முந்தைய 8 ஆண்டுகளையும் ஒப் பிட்டால் ஜி.டி.பி.சராசரி வளர்ச்சி என்பது 7.5 சத வீதத்திலிருந்து 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாதிப்போம் என்று வாய்ப்பந்தல் போட்ட மோடியின் ஆட்சியில் பொருளா தாரம் 3 டிரில்லியனை கூட எட்டவில்லை என்பதுதான் கொடுமை! சீனாவின் பொருளாதாரம் 14 டிரில்லியன் டாலர் என்பதும் அமெரிக்காவின் பொருளாதாரம் 19 டிரில்லியன் டாலர் என்பதும் இந்திய பொருளாதாரம் எங்கே நிற்கிறது என்பதை உணர்த்தும்.

விலைவாசி உயர்வு

பொருள்    5 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு
உருளை  கிழங்கு    65 சதவீதம்
வெங்காயம்    69 சதவீதம்
தக்காளி    155 சதவீதம்
பால்    25 சதவீதம்
உப்பு    28 சதவீதம்
பெட்ரோலியப் பொருட்கள்    70 சதவீதம்

சமையல் எண்ணெய்    23 சதவீதம் உணவு 
தானியங்கள்    8சதவீதம்

மோடி ஆட்சியில் விலைவாசி இறக்கை கட்டி பறக்கின்றது. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் பிரதிபலிப்பு நடைமுறையில் கீழ்க்கண்டவாறு சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது: பெட்ரோலிய வரிகள் உயர்வு மூலம் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அரசாங்கம் ரூ.18.23 கோடி லட்சம் ஈட்டியுள்ளது. அதாவது மக்கள் பணம் அரசின் கஜானாவிற்கு சென்றது. உணவு தானியங்களின் உற்பத்தி 22 சதவீதம், பருப்பு வகைகள் உற்பத்தி 49 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால் இந்த அதிகரித்த உற்பத்தி விவசாயிகளுக்கும் பயன்தரவில்லை;  நுகர் வாளர்களாக உள்ள மக்களுக்கும் பலன் தரவில்லை. விலைவாசி உயர்வின் காரணமாக உழைப்பாளிகளின் உண்மையான ஊதியம் தேக்க நிலையில் உள்ளது அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த உழைப்பாளியின் ஊதியம் கடந்த இரு ஆண்டுகளில் முறையே 0.3 சதவீதம் மற்றும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. விவசாயம் சாராத கிராமப்புற உழைப்பாளிகளின் ஊதியம் இரு ஆண்டுகளில் வெறும் 1 சதவீதம் உயர்ந்து பின்னர் 0.3 சதவீதம் சரிந்துள்ளது. இதே நிலைதான் நகர்ப்புற முறைசாரா உழைப்பாளிகளின் நிலையும். பஞ்சப்படி உரிமை கொண்ட உழைப்பாளிகள் மட்டும்தான் இந்த சுமை யிலிருந்து ஓரளவு தப்பிக்கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிக குறைவு!

வேலையின்மை-  அரசு உருவாக்கிய வேதனை

தான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என மோடி முழங்கினார். ஆனால் இன்று புதிய வேலை வாய்ப்புகள் இல்லை என்பது மட்டுமல்ல; ஏற்கெனவே இருக்கும் வேலை வாய்ப்புகளும் காணாமல் போகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 40.9 கோடியாக இருந்த உழைப்பாளி களின் எண்ணிக்கை 40.3 கோடியாகச் சரிந்துள்ளது. இதே 5 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 130.5 கோடியிலிருந்து 137.4 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார், உ.பி.யில் 8 ஆயிரம் ரயில்வே பணிகளுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பம்.
    சமீபத்தில் நடந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வில் எழுத்தர் பணிக்கு ஒரு பதவிக்கு 352 பேர் எனும் விகிதாச்சாரத்தில் தேர்வர்கள் பங்கேற்றனர்.
    நகர்ப்புறங்களில் 9 கோடி (23சதவீதம்) பேருக்கு வேலையில்லை.
    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2019-ஆம் ஆண்டு 7.8 கோடி பேர் பணி பெற்றனர். 2021-இல் இது 10.62 கோடியாக உயர்ந்தது.
    இந்த திட்டத்தில் முனைவர் பட்டம் (பி.எச்.டி.)படித்தவர்கள் கூட பதிவு செய்யும் வேதனையான நிலை! 
    ஒரு நாள் ஊதியம் ரூ.209; அதுவும் ஆண்டுக்கு50 நாட்கள் மட்டுமே வேலை !
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்துறை யும் விவசாயத்துறையும் தேக்கத்தை அல்லது சரிவைச் சந்தித்து வருகின்றன. சேவைத்துறை மட்டுமே ஓரளவு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அதுவும் நீடித்த நிலையில் இல்லை. சுய தொழிலும் பெரிய தாக்கத்தை உருவாக்காத சூழலில் வேலையின்மை மோடி அரசின் மிகப்பெரிய தோல்வியை பறைசாற்றுகிறது எனில் மிகை அல்ல.

இந்த அரசு யாருக்கானது?

தனது ஆட்சியின் குறிக்கோள் சேவை,நலன்,நிர்வா கம் என பா.ஜ.க. முன்வைத்துள்ளது. ஆனால் இந்த மூன்று இலக்குகளும் மக்களில் எந்த பிரிவினருக்கு என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. மோடியின் ஆட்சி யில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அதீத பலன் அடைந்துள்ளனர்.

    கடந்த 7 ஆண்டுகளில் வளராக் கடன்கள் ரூ.13 லட்சம் கோடி தள்ளுபடி.
    ரூ.6.5 லட்சம் கோடி வரிச் சலுகைகள்.
    டாலர் பில்லியனர்கள் அதாவது ரூ.7,500 கோடிக்கும் அதற்கு மேலும் சொத்து உள்ளவர்கள் எண்ணிக்கை 102-லிருந்து 142-ஆக உயர்வு.
    விமான நிலையங்கள்,துறைமுகங்கள்,மின் நிலையங்கள்,சுரங்கங்கள் என அனைத்தும் அம்பானி, அதானி,டாட்டா போன்ற பெரிய கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மடைமாற்றம்.
l    பணமயமாக்கல் எனும் பெயரால் மேலும் பல வளங்கள் கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க அனுமதி.
என கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற சலுகைகள் மலைக்க வைப்பவை! இதே காலத்தில் மக்கள், ஏராள மான துன்பதுயரங்களுக்கு ஆளாயினர். வேலை யின்மை, விலைவாசி உயர்வு மட்டுமல்ல; ஒரு நாளைக்கு வெறும் ரூ.150க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 6 கோடியிலிருந்து 13 கோடி யாக உயர்வு. இந்தியா 45 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அவல நிலை! மேலும் 15 முதல் 20 கோடி பேர் வறுமையில் வீழ்வார்கள் எனவும் மதிப்பிடப் பட்டுள்ளது. எனவே மோடி அரசாங்கத்தின்  சேவை, நலன், நிர்வாகம் அனைத்தும் மக்களுக்காக அல்ல; மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதுவும் அரசுக்கு நெருங்கிய பெரு முதலாளிகளுக்கு மட்டுமே பயன் பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் பெரும் பொருளா தார அசமத்துவத்தை உருவாக்கியுள்ளன என்பது மட்டு மல்ல; அரசு கொள்கைகள் மூலம் கொள்ளையின் பெரும் பகுதியை தனது பைகளுக்குள் திணித்துக் கொள்ளும்  கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளித்து வம் எனும் புதிய பிரிவும் தோன்றியுள்ளது.  மூலதனங்களுக்கு இடையே சுதந்திரப் போட்டி என்பது முற்றிலும் மறைந்து அரசின் நட்பு வளை யத்துக்கு உள்ளே இருக்கும் சில முதலாளிகள் மட்டும் லாபக் கொள்ளை அடிக்க வழி வகை செய்யப்பட்டுள் ளது. இது மோடி அரசாங்கத்தின் சாதனை எனில் மிகை அல்ல!  இந்த முதலாளிகள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை களை தேர்தல்பத்திரங்கள் மூலம் வாரி வழங்குவதில் என்ன ஆச்சரியம் உள்ளது.

திசை திருப்பும் மதப்பிளவுவாதம்

பொருளாதாரத் துன்பங்கள் அதிகமாகும் அதே வேகத்தில் மக்களை திசை திருப்பும் தேவையும் அவர்களுக்கு கூடுதலாகிறது. அதற்கு சங் பரிவாரம் உருவாக்கும் சூழ்ச்சிதான் மதப்பிளவுவாதம். நவீன தாராளமய பொருளாதாரத்தில் பா.ஜ.க.  வேகமாக தறிகெட்டு செல்கிறது எனில் மதப்பிளவுவாதத்துக்கு சங்பரிவாரம் அனைத்து சூட்சுமங்களையும் பயன் படுத்துகிறது. மதப்பிளவுவாதம் வெறுமனே திசை திருப்ப மட்டும் அல்ல; திசை திருப்பல் என்பது உடனடி நோக்கம் மட்டுமே! சங் பரிவாரத்தின் இந்துத்துவா திட்டம் என்பதே முதன்மையான நோக்கம்.

ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் இஸ்லாமியர்க ளும் கிறித்துவர்களும் எதிரிகள் என கட்டமைக்கின்ற னர். அதற்காக வழிபாட்டுத்தலங்கள் பற்றிய திசை  திருப்பல்  பிரச்சாரங்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் கள், ஹிஜாப், ஹலால், கர்வாபஸி, பசு புனிதத்தின் பெயரால் கும்பல் படுகொலை, லவ் ஜிகாத் போன்ற பல பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றன. புல்டோசர் அரசியல் புதிய பரிணாமமாக அமலாக்கப்படுகிறது. கிறித்துவர்களுக்கு எதிராக மதமாற்ற தடைச்சட்டமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பொது சிவில் சட்டமும் பா.ஜ.க. மாநில அரசுகள் மூலம் அமலாக்கப்பட்டு மக்களின் எதிர்வினையையும் நீதிமன்றங்கள் வழிக்கு வருகின்றனவா எனவும் சோதனை செய்யப் படுகின்றன. வாரணாசி,மதுரா,தாஜ்மகால்,சார்மினார், குதுப்மினார் தொடங்கி உள்ளூர் மசூதிகள் மற்றும் தர்காக்கள் வரை பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றன. 1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட  வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. நீதித்துறையின் ஒரு பகுதியும் இதற்கு துணை போகும் அவலத்தை என்னவென்பது?

மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் 8 ஆண்டுகள் ஆட்சி என்பது மிகச்சிலருக்கு மலையளவு லாபக் கொள்ளையும் மக்களுக்கு மலையளவு பொருளாதாரத் துன்பங்களையும் அளித்துள்ளது. இதனை பின்னு க்குத் தள்ள மதப்பிளவுவாதங்கள் கூர்தீட்டி ஆபத்தான முறையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த இரண்டு பேரழிவுகளையும் எதிர்த்து இடதுசாரிகளும் முற்போக் காளர்களும் களம் காண வேண்டிய தேவை உள்ளது. அது மட்டுமே இந்த பேரழிவுகள் குறித்து மக்களை உணர வைக்க இயலும்.