மணிப்பூரில் ஆளும் பாஜக பைரேன் சிங் அரசாங்கம், ரிசர்வ் காடுகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, குக்கி குடும்பத்தினர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நிலைமைகள் மோசமாயின. காடுகளில் கசகசா செடி சாகுபடியைத் (poppy cultivation) தடை செய்திருப்பது, குக்கி பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதப்பட்டது.
மணிப்பூர், வட கிழக்கு மாநிலங்களில் பாஜக மேற்கொண்டுவந்த பிளவுவாத அர சியலின் அடையாளமாக மணிப்பூர் எரிந்துகொண்டிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில்தான், வட கிழக்கு மாநிலங்க ளில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்க ளில் வெற்றி பெற்றதைப்பற்றி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடி பீற்றிக்கொண்டார். வட கிழக்கில் வாழும் கிறித்தவர்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அப்போது அவர் கூறினார். அவ்வாறு அவர் கூறிய ஏழு வாரங்களில், மே 3 அன்று மணிப்பூரில் வன்முறை வெறியாட்டங்கள் வெடித்தி ருக்கின்றன. ஆயுத மோதல்கள், கொலைகள் மற்றும் தீக்கிரைச் சம்பவங்கள் மாநிலத்தையே சீரழித்தி ருக்கின்றன. சுமார் 200 தேவாலயங்களும், 17 கோவில்க ளும் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளும் தீக்கிரை யாக்கப்பட்டிருக்கின்றன. இம்பாலில் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் ஒருவரின் வீடும் கூட விட்டு வைக்கப்படாமல் இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டி ருக்கிறது. ராணுவத்துடன் 35 ஆயிரம் ஒன்றிய ஆயுதக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணிக்காக மாநி லத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளபோதிலும், ஆயுதந் தாங்கிய குக்கி மற்றும் மெய்டெய் குழுவினரின் தாக்கு தல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இறந்தோர் எண்ணிக்கை 100ஐத் தாண்டியி ருக்கிறது. குறைந்தது 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
26 நாட்கள் கழித்து சென்ற அமித்ஷா
மாநிலத்தில் கலவரம் தொடங்கி சரியாக 26 நாட்கள் கழிந்தபின்னர், உள்துறை அமைச்சர், அமித் ஷா, அம்மாநிலத்திற்கு விஜயம் செய்தார். அவருடைய பயணமோ மற்றும் அவர் அறிவித்த நடவடிக்கைகளோ வன்முறையைக் கட்டுப்படுத்திடவில்லை. இப்போது அங்கேயுள்ள சட்டமற்ற நிலைமையினைப் பயன் படுத்திக்கொண்டு, மெய்டெய், குக்கி ஆகிய இரு தரப்பிலும் உள்ள தீவிரவாத சக்திகள் இரு தரப்பின ருக்கும் இடையே எந்த அளவுக்கு பிளவினை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி முழுமையாக வேலை செய்துகொண்டிருக்கின்றன. மணிப்பூர் கூருணர்வுமிக்க ஓர் எல்லை மாநில மாகும். இந்த மாநிலத்தில் 36 விதமான இனக்குழுக்க ளும், மதக்குழுக்களும் இதுநாள்வரை ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களில் பிரதானமானவர்கள், மெய்டெய் இனத்தினர், குக்கி இனத்தினர், நாகா இனத்தினர் ஆகிய மூன்று இனத்தவர்கள். இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் மெய்டெய் இனத்தினர் இந்து யிசத்தை அல்லது அங்கேயுள்ள உள்நாட்டு சனமாஹி மதத்தைப் பின்பற்றுகிறவர்கள். குக்கி இனத்தவர்க ளும், நாகா இனத்தவர்களும் பெரும்பாலும் கிறித்த வர்கள். இவர்களைத் தவிர, சிறுசிறு பழங்குடி இனத்த வர்களும் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வந்த வர்களும் இருக்கிறார்கள்.
கிறிஸ்தவ குக்கிகளுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் செயல்பாடு
மணிப்பூர் மாநிலத்தில் பல பத்தாண்டுகளாகவே பல்வேறு இனக்குழுக்களின் ஆயுதப் போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. கடந்த காலங்களில், நாகாக்க ளுக்கும் குக்கிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தி ருக்கின்றன. 2017இல் பாஜக மாநில அரசாங்கம் வந்த பின்னர், ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் கிறித்தவர்களான குக்கிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக, மெய்டெய் இனத்தவரை ஓர் இந்து சக்தியாக ஒருங்கிணைத்திடும் நடவடிக்கை களில் சுறுசுறுப்பாக இறங்கின. மெய்டெய்-குக்கி மோதல் என்பது இவ்வாறு இந்து-கிறித்தவர்கள் மோதல் என்கிற வடிவத்தையும் ஏற்படுத்தி இருக் கிறது.
அகதிகளாக வந்த சின் இனக்குழுவினர்
மியான்மரில் 2021இல் ராணுவத்தின் ஒடுக்கு முறை கடுமையானதைத் தொடர்ந்து, அங்கிருந்து ஆயிரக்கணக்கான சின் (Chin) அகதிகள் வந்ததை அடுத்து நிலைமைகள் மேலும் மோசமாயின. ‘சின்’ பழங்குடியினர், குக்கி பழங்குடியினரைப்போன்று ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து வந்த பழங்குடியின மக்களை, மிசோரத்தி லும், மணிப்பூரிலும் வாழும் பழங்குடியின மக்கள், தங்கள் சொந்தச் சகோதரர்கள்போல் கருதி வரவேற்று, அடைக்கலம் கொடுத்தார்கள். ஆனால் ஆளும் ஒன்றிய அரசாங்கமோ அவர்களுக்கு அகதிகள் அந்தஸ்து கொடுக்க மறுத்திருப்பதுடன், அவர்களை சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று அறிவித்திருக்கிறது.
கசகசா சாகுபடித் தடை
மணிப்பூரில் ஆளும் பாஜக பைரேன் சிங் அர சாங்கம், ரிசர்வ் காடுகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, குக்கி குடும்பத்தினர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நிலைமைகள் மோசமாயின. காடுக ளில் கசகசா செடி சாகுபடியை (poppy cultivation)த் தடை செய்திருப்பது, குக்கி பழங்குடியினருக்கு எதி ரான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆர்எஸ்எஸ்/ பாஜக-வினர், குக்கி பழங்குடியினரை, ‘சட்டவிரோ தமாக வந்துள்ள வெளியாட்கள்’ (‘illegal outsiders’) என்று முத்திரை குத்தி, அவர்களுக்கு எதிராகச் செயல் பட்டுவரும் ஆரம்பாய் டெங்கோல் (Arambai Tengol), மெய்டெய் லீபன் (Meitei Leepun) போன்ற மெய்டெய் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
குக்கி ஆயுதக் குழுவுக்கு பாஜக பண உதவி
ஆயினும்கூட தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பாஜக-வினர் குக்கி பழங்குடியினத்தில் உள்ள சில ஆயுதக் குழுக்களுக்கு உதவியதை அடுத்து, இதன் இரண்டகமும் போலித்தனமும் வெளிச்சத்திற்கு வந்தது. ஐக்கிய குக்கி விடுதலை முன்னணியின் தலைவர், எஸ்.எஸ். ஹோகிப், என்பவர் 2017இல் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பொறுப்பு வகித்திடும் பாஜக-வின் தேசியப் பொதுச் செயலாளர், ராம் மாதவ் மற்றும் அசாம் முதல் அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா ஆகியோர் தன்னை அணுகி, 2017 சட்டமன்றத் தேர்தலிலும், பின்னர் 2019இல் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்களை ஆத ரிக்குமாறு கோரினார்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர்கள் பண உதவி செய்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தக் கடிதமானது இம்பாலில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் நீதிமன்றத்தில் ஓர் உறுதிவாக்குமூலமாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கி றது. 2008இல் கையெழுத்தான “செயல்பாடுகளின் இடைநிறுத்தம்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அமைப்புகளில் ஐக்கிய குக்கி விடுதலை முன்ன ணியும் ஒன்றாகும்.
பிரச்சனைக்கு காரணமான பைரேன்சிங் அரசு...
பாஜக-வின் இத்தகைய இரண்டகமான விளை யாட்டு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. குக்கி இனத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் இப்போது ஆட்சியில் உள்ள பைரேன் சிங் அர சாங்கத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள். மாநிலத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்திற் கும் பைரேன் சிங் அரசாங்கம்தான் காரணம் என்று இவர்கள் கருதுகிறார்கள். குக்கி மலை கிராமங்களைச் சேர்ந்த பத்து எம்எல்ஏ-க்களும் (இவர்களில் பெரும்பா லானவர்கள் பாஜக-வினர்), குக்கி பகுதிக்குத் தனியே நிர்வாக அமைப்பு தேவை என்று கோரிக் கொண்டிருக் கிறார்கள்.
வாயும் திறக்கவில்லை காதும் கொடுக்கவில்லை
மணிப்பூர் விவகாரம் குறித்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்காது இருப்பது மிகவும் கபடத்தனமான அம்சமாகும். அவர் மணிப்பூர் நிலைமை குறித்து ஒரு வார்த்தை கூட உதிர்த்திட வில்லை. அங்கே அமைதி நிலவ வேண்டுமென்றோ அல்லது இயல்பு நிலை திரும்ப வேண்டுமென்றோ வேண்டுகோள் எதையும் வெளியிடவில்லை. மணிப்பூரில் இருந்து வந்துள்ள மூன்று அரசியல் தூதுக் குழுவினர் (இவர்களில் இரண்டு பாஜக எம்எல்ஏ-க் களை உள்ளடக்கியவை, ஒன்று எதிர்க்கட்சியினரை உள்ளடக்கியவை), தில்லியில் பிரதமரைச் சந்திக்கக் காத்திருந்து காத்திருந்து விரக்தி நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். அவர்கள், மோடி அமெரிக்காவிற்குப் பறந்து சென்றுள்ளதைத்தான் பார்க்க முடிந்தது. இவ்வாறு மணிப்பூர் பிரச்சனையைக் கிஞ்சிற்றும் கண்டுகொள்ளாது, பிரதமர் இருந்துவருவது, மணிப்பூரில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் மத்தி யிலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு மாநில அரசு சீர்குலைந்துள்ள நிலை யில், தெளிவான அதிகார வரம்பு நிறுவப்படாத நிலை யில், உடனடியாக மேற்கொள்ளவேண்டிய முதல் அரசியல் நடவடிக்கை என்பது, அங்கே ஆளும் பாஜக பைரேன் சிங் அரசாங்கம் நீக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இந்நடவடிக்கையை எடுக்காமல், இப்போது, வட கிழக்கில் ஆளும் பாஜக-வினரின் குறுகிய பிளவுவாத அரசியலின் விளைவாக ஏற் பட்டுள்ள குழப்பமான நிலையிலிருந்து வெளி வர முடியாது.
ஜூன் 21, 2023,
தமிழில்: ச.வீரமணி