articles

‘கோவிலையே திருடி விடுவார்கள்’

“அறத்தை ஒழிக்கப் புறப்பட்டுள்ள கூட்டம் ஆலயங்களைக் கைப்பற்ற முயல்கிறது. தமது வீட்டை நிர்வகிக்க நண் பர்கள் மாதம் தோறும் ரூ. 7 லட்சம் கொடுப் பதாகக் கூறும் பாஜக அண்ணாமலை, அரசை ஆலயங்களை விட்டு வெளியேறச் சொல் கிறார். தர்மகர்த்தாக்கள் கோடி கோடியாய் கொள்ளையடித்ததாலேயே அறநிலையத் துறை உருவானது.  அறநிலையத்துறை மக்களின் சொத்து. இங்கு ஊழல் செய்ய பெருச்சாளிகள் கூட்டம் முயல்கிறது.  சிதம்பரம் கோவிலுக்கு செல்லும் அற நிலையத்துறை அதிகாரிகளை தீட்சிதர் கள் மிரட்டுகிறார்கள். அரசர்கள் கட்டிய கோவிலை தீட்சிதர்கள் பறித்துக் கொண் டார்கள். கோவில்களில் சங்பரிவார் நுழைந்தால் சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கும். விக்ரகங்கள், நகைகள் மட்டு மல்ல; கோவிலையே திருடி விடுவார்கள். 

சிதம்பரம் கோவில் வருமானத்தில் தீட்சி தர்களுக்கு ஒரு பங்குண்டு. அந்த பங்கு  அதிகரிக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் குழந்தைத் திருமணத்தை நடத்து கின்றனர். குடும்ப எண்ணிக்கை அதி கரிக்கும் போது அவர்களது வருமானமும் அதிகரிக்கும். தமிழக அரசு அனைத்து சாதிகளையும் சேர்ந்த இளம் அர்ச்சகர்களைக் காப்பாற்ற அறநிலையத்துறையின் கீழ் வராத கோவில் களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.”

மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் 
பேரா. அருணன் பேசியதிலிருந்து...