articles

img

பாஜக அரசின் அரவணைப்புடன் செயல்படும் பசுப் பாதுகாப்புக் குழுவினர் நடத்திய கொலைகள்

“அவர்கள் இங்கே துணிந்து வந்தார்களானால் திரும்பிச் செல்வதற்கு அவர்களுக்குக் கால்கள் இருக்காது”, என்று பேசி, ராஜஸ்தான் காவல்துறையினரை அச்சுறுத்தி இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்திற்கும் ஹரியானா மாநிலத் திற்கும் இடையேயான எல்லையில் பெருகா என்னும் ஊரில் பிப்ரவரி 16 அன்று தொடங்கிய சம்பவங் கள், ஹரியானா மாநிலத்தில் பிவானி மாவட்டத்தில் நுவா பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் காட்டுமிராண்டித்தனமாக ஜூனைத் மற்றும் நசீர் என்னும் இரு முஸ்லீம் கள் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்திருப்பது மட்டுமல்ல, எந்த அள விற்கு ஹரியானா மாநிலத்தில் ஆட்சி யிலிருக்கும் பாஜக மாநில அர சாங்கத்திற்கும், பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் குண்டர்க ளாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வருகிறது என்ப தும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் எதைச்செய்தாலும் தங்களுக்கு எவ்விதமான தண்டனையும் கிடை யாது என்பதை இந்தக் குண்டர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

விவரங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நசீரும், ஜூனைத்தும் பொலிரோவில் உள்ள தங்கள் வீடு களிலிருந்து சில உறவினர்களைப் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார் கள். அவர்கள் திரும்பி வரும்போது, பெருகாவில், அவர்கள் ‘பசுப்பாது காப்புக் குழு’ வினரால் பின்தொட ரப்பட்டு, நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மிகக் கொடூரமாக அடித்து நொறுக்கி, அரைப் பிண மாக்கி, பக்கத்திலிருந்த நுவா காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். காவல்துறையி னர் அவர்களை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். பின்னர் ‘பசுப்பாது காப்புக் குழுவினர்’ அவர்களை வாக னம் ஒன்றில் ஏற்றி, லோகாரு என்னு மிடத்திற்குக் கொண்டு சென்று, வாகனத்தில் தீ வைத்திருக்கின்றனர். வாகனத்திலிருந்த நசீரும், ஜூனைத்தும் இவ்வாறு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

கொடூரங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்கள்

இதுதொடர்பாக அவர்களின் குடும்பத்தாரால் பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை யில், அந்தப் பகுதிகளில் உள்ள முக்கியமான ‘பசுப்பாதுகாப்புக் குழுவினர்’களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்களில் மிகவும் கொடூரமானவன் என்று பெயர்பெற்றுள்ளவன், மோனு யாதவ் என்கிற மனேசர் என்பவனாவான். இவன் நுவாவில் வசிக்கிறான். இவன் எப்போதுமே வெளிப்படையாகவே வெடிமருந்து ஆயுதங்களுடன் சுற்றித்திரிவான். இவன் ‘பசுக் கடத்து பவர்களை’ அடிப்பது, அவர்களை வலுக்கட்டாயமாக பசு சாணத்தை உண்ண நிர்ப்பந்திப்பது, அவர்களை விரட்டுவது, அவர்களின் வாகனங்க ளுக்குத் தீ வைப்பது போன்ற காட்சி கள்  அமைந்துள்ள வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறான். ஹரியானா காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ள மூன்று பெயர்களும் தங்களுக்குத் தகவல் அளிப்பவர்கள் (‘informers’) என்று இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பசுப் பாதுகாப்புக் குழுவினருக்கும், காவல் துறைக்கும் இடையே உள்ள கள்ளப் பிணைப்பு வெளிச்சத்திற்கு வர வில்லை என்றபோதிலும், இது மிகவும் ஆபத்தானதாகும்.

அரசின் அனுமதியுடன் சட்டத்தை கையில் எடுத்து...'

ஹரியானாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கம், 2015இல் ஓர் அராஜ கமான பசுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்பின்னர் 2021இல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பசுப் பாதுகாப்பு அதிரடிப் படை  ஒன்றை நிறுவிடவும் அறிவிக்கை வெளியிட்டது. ஒவ்வொரு மாவட்டத்தி லும் 11 பேர் கொண்ட அதிரடிப்படை  அமைக்கப்பட்டு, அது, அரசு ஊழியர் அல்லாத ஐந்து பேர்களை நியமனம் செய்யவும், அவர்களில் உள்ளூர் பசுப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த வர்களிலிருந்து இரண்டு பேரை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.  இதன் அர்த்தம் என்ன? பசுப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பவர்கள் பஜ்ரங்  தளம் மற்றும் காவிப் படையினரின் இதர பிரிவில் செயல்படு பவர்களேயாவர். இவர்கள் அனை வருக்கும் பசுக் கடத்தல் அல்லது  இறைச்சிக்காக பசுவை வெட்டுபவர்க ளுடன் சம்மந்தமுள்ள சம்பவங்கள் தொடர்பாக தலையிடுவதற்கு அர சாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்றே அர்த்தமாகும். உண்மையில் இவர்கள் அரசின் அனு மதியுடன் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, “நீதி” வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜஸ்தான் காவல்துறைக்கு மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர் 

நசீர், ஜூனைத் சம்பந்தப்பட்ட இந்தக் குறிப்பிட்ட வழக்கில், ராஜஸ்தான் காவல்துறையும் சம் பந்தப்பட்டிருப்பதால், இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்ட வர்களில், பிரதானமான நபராக விளங்கும், ரிங்கு சைனி, என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான் மற்றும் மோனு யாதவ் என்பவன் ‘தலைமறைவாக’ச் சென்றிட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறான்.   இப்போது இவ்வாறு ஒருவனைக் கைது செய்வதற்கு, ராஜஸ்தான் காவல்துறை அதீதமாக தன் படை யைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, அதன்மீது விசுவ இந்து பரிசத், பாஜக மற்றும் இதரர்கள் ராஜஸ்தான் காவல்துறை மீது பாய்ந்திருக்கின்றனர். ஜூனைத், நசீர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பவர்கள் அப்பாவி கள் என்றும் உரக்க எதிர்ப்பு தெரி வித்துக் கொண்டிருக்கின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ஒரு மகா பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கி றது. இதில் வெறும் 80 பேர் மட்டுமே பங்கேற்றனர். பிவானியில் கூட்டப் பட்ட இந்தப் பஞ்சாயத்தில் பேசிய ஒரு பஞ்சாயத்துத் தலைவர், ராஜஸ்தான் காவல்துறையையே மிரட்டி இருக்கி றார். “அவர்கள் இங்கே துணிந்து வந்தார்களானால் திரும்பிச் செல்வ தற்கு அவர்களுக்குக் கால்கள் இருக் காது”, என்று பேசி, ராஜஸ்தான் காவல்துறையினரை அச்சுறுத்தி இருக்கிறார். இவ்வாறு மகாபஞ்சா யத்தில் நடைபெற்ற ஆட்சேபகர மான விவரங்கள் அனைத்தும் நிர்வா கத்திற்கும், அங்கே ஆஜராகியிருந்த காவல்துறையினருக்கும் நன்கு தெரியும்தான்.   இவ்வாறு இந்த சம்பவம் மிகவும் மோசமான ஒன்றாக இருந்தபோதி லும், இந்த சம்பவம்  தொடர்பாக இரு மாநிலக் காவல்துறையும் ஒன்றுக் கெதிராக மற்றொன்று புகார் அளித்துக்கொண்டிருந்தபோதிலும், ஹரியானா முதலமைச்சரோ அல்லது  இந்த நாட்டின் உள்துறை அமைச்ச ரோ தாங்கள் கருத்துச் சொல்வதற் குப் பொருத்தமான ஒன்று இது என்று கருதிடவில்லை. இப்போதுள்ள நிலையில் ஒன்றே ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகிறது. அதாவது, ஒட்டு மொத்த நாட்டிலும் ஒன்றிய பாஜக அரசாங் கத்தால் அரசமைப்புச்சட்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கு ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ள அதே சூழ்நிலையில், குறைந்த பட்சம் ஹரியானாவில் முஸ்லீம்க ளைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் எதுவும் அமலாக வில்லை என்பதேயாகும்.

பிப்ரவரி 22, 2023 
தமிழில் : ச.வீரமணி