articles

img

மூலதனத்தின் கொடிய சுரண்டலும் மார்கழி எழுச்சியும்! - இ.முத்துக்குமார்

மார்கழிப் பனியில் சாரைசாரையாக இளம்பெண் தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆலை  வாயில் மற்றும் ஒரகடம் -செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மையங்களில் சாலையில் அமர்ந்து போராடியதை சமீபத்தில் தமிழகம் பார்த்தது. வதந்திகளின் பரவல்தான் இப் போராட்டம் என்றன சில ஏடுகளின் செய்திகள். ‘சீனாவின் தூண்டுதல்’ என எழுதிக் குவிக்கின்றன சில ஆங்கில பத்திரிகைகள்.  இப்போராட்டத்தின் உண்மை பக்கங்கள்தான் என்ன? 

கொத்தடிமைகளாக...

 உயர் தொழில்நுட்பம் மிக்க கைபேசிகளை தயார் செய்கிற மூன்று ஃபாக்ஸ்கானின் தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டு களாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் தமிழகம் முழுவதுமிருந்து 14க்கும் மேற்பட்ட ஒப்பந்த தாரர்கள் மூலம் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களை ஃபாக்ஸ்கான் தனது நேரடிப் பார்வையில் தங்கும் விடுதிகளில் பராமரித்திருக்கிறது. வேலை செய்வ தற்காக அங்கிருந்து வாகனத்தில் ஆலைக்கு கொண்டு வருவது வேலை; முடிந்தவுடன் நேராக வாகனம் மூலம் கொண்டு சென்று தங்கும் விடுதியில்  அடைக்கப் பட்டு  கதவுகள் பூட்டப்படுகின்றன.  சம்பளம் மிக மிகக் குறைவு. அவர்கள் கைக்கு, பிடித்தம் போக 11 ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. 10 பேர் தங்கக்கூடிய அளவிற் கான அறையில் 40பேர் தங்க வைக்கப்பட்டிருக்கி றார்கள். அவர்களின் தனி மனித உரிமைகள் முழு வதும் கட்டுப்படுத்தப்பட்டன.  மொத்தத்தில் கொத்தடிமைகளாக தொழிலா ளர்கள் நடத்தப்பட்டார்கள்.  சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டால் தொழிற் சாலைக்குள்  உரிமைகளை நிலைநாட்ட சங்கத்தை அமைத்துக் கொள்வார்கள். ஃபாக்ஸ்கான்  நிர்வா கத்தின் கட்டுப்பாடற்ற  உழைப்புச் சுரண்டல் பாதிக்கப் படும் என்பதால் இதை நிர்வாகம் விரும்பவில்லை. இந்த கோபங்கள் ஏற்படுத்திய மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே இப்போராட்டம் வெடித்தது. ஹாஸ்டல் உணவு கெட்டுப் போனதால் சக தொழிலா ளர்கள் மயக்கமடைந்ததைப் பார்த்து ஆவேசம் கொண்டார்கள்.  தங்கும் விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களை விடாமல் ஹாஸ்டல் நிர்வாகம் கதவுக ளைப் பூட்டியது. பூட்டிய கதவுகளை உடைத்து அந்த தொழிலாளர்கள் நள்ளிரவு என்றும் பாராமல் தொழிற்சாலை நோக்கி வந்தார்கள். ஆலைக்கு வெளியே அமர்ந்தார்கள். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் 15 க்கும் மேற்பட்ட விடுதிகளைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிலாளிகள் இந்த போராட்டத்தில் பங்கெடுத் தார்கள். 

ஆப்பிள் நிறுவனத்தின்  மூலதனக் குவிப்பு 

போராட்டத்தின் பின்னணி இப்படி இருக்க, உண்மையை ஆய்வு செய்யாமல் சீனாவின் தூண்டு தல் என்று இப்போது சில பத்திரிகைகள் பிரச்சனையை திசை திருப்புகின்றன. உளவுத்துறை சொல்வதாக  ஒரு ஆங்கிலப் பத்திரிகை எழுதுகிறது.  இது அப்பட்டமான பொய் ஆகும். இங்கு நடந்ததும் நடப்பதும் மூலதனச் சுரண்டலுக்கு எதிரான தொழி லாளர் வர்க்கத்தின் ஆவேசமே தவிர, சீனாவின் தூண்டு தல் என முத்திரை குத்துவதே ஒரு சூழ்ச்சிதான்.  ஃபாக்ஸ்கான் என்பது தைவானைச் சேர்ந்த  மிகப் பெரும் நிறுவனம். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத் திற்கு கைபேசிகளை உற்பத்தி செய்து தரும் ஒன்பது பெரும் நிறுவனங்களில் முதன்மையானது ஃபாக்ஸ் கான். இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் ஃபாக்ஸ் கானுக்கு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கும், இத்தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன என்பது தனிக்கதை.  ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி யில் ‘ஆப்பிள் ஐபோன்’ முன்னிலை வகிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உலகசந்தை மதிப்பு தற்போது மூன்று டிரில்லியன் டாலர் (3லட்சம் கோடி டாலர்) அளவுக்கு உயர்ந்து உலகின் முதன்மை ராட்சத நிறு வனமாக மாறியுள்ள செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. 1977ல் துவங்கிய அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் 42 ஆண்டுகளில் அடைய முடியாத வளர்ச்சியை கடந்த 16 மாதம் 15 நாளில் எட்டியது  ஐபோன் வர்த்தகத்தின் மூலமே என்கின்றன ஆப்பிள் நிறுவன வளர்ச்சி குறித்த ஆய்வுகள். ஆப்பிள் நிறுவனத்தின் இத்தனை பிரம்மாண்ட மான மூலதனக் குவிப்பு எப்படி சாத்தியமானது? இந்தியாவில் மட்டுமல்ல; சீனாவிலும் இன்னபிற நாடுகளிலும் உள்ள ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட 9 சப்ளையர்களின் ஆலைகளில் பணியாற்றும் இளம் தொழிலாளர்களின் மனித உழைப்பை மனித நேயமற்ற வகையில் சுரண்டி, குறைந்த கூலியில் உற்பத்தி செய்து குவித்ததே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சியின் அடிப்படை. உலகம் முழுவதுமான இந்த மூலதனச் சுரண்டலை பட்டாடை போட்டு மூலதன சக்திகள் திரையிடலாம். ஆனால் உழைப்பு சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒருபோதும் சகிக்கமாட்டார்கள். இது போன்ற கண்ணியமற்ற சுரண்டலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடிப்பதை ஊடகங்கள் வேறு வழியில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும் கொடூர மூலதன சுரண்டலின் எதிர்வினையே. இதில் சீனாவின் சூழ்ச்சி எங்கே இருக்கிறது? ஆப்பிள் நிறுவனத்தின் சுரண்டலை மறைக்கும் மலிவான தந்திரமாகவே இந்த செய்திகளை பார்க்கவேண்டி உள்ளது. 

14 ஆண்டுகளாக

இந்த போராட்டம் எழுப்பிய நியாயங்களை, கேள்வி களை, போராட்டத்தின் நோக்கத்தை அரசு எப்படி பார்க்கிறது? இது வெறும் வதந்தியால் உருவான போராட்டம் என்று ஒரு கருத்து பரப்பப்படுகிறது. அது உண்மைக்கு மாறானது. இது வதந்தியால் உரு வான போராட்டம் அல்ல! தொழிலாளர்களை மனிதர்க ளாக மதிக்காதது; அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டது; ஆலையில் அவமரியாதையாக நடத் தப்படுவது; பணியிடத்தில் வேலைப் பாதுகாப்பற்ற சூழல்; மருத்துவ பாதுகாப்பு இல்லாதது; விடுமுறை கள் வழங்கப்படாதது; சட்டவிரோத வெளியேற்றம் மற்றும் பணி நீக்கம் இவை உள்ளிட்டு 2007ஆம் ஆண்டு  விஸ்தியான் ஆலையில் துவங்கி ஹூண்டாய், ஃபாக்ஸ்கான், நோக்கியா, சால்காம், பில்டு யுவர் டிரிம்ஸ், சான்மினா, நோக்கியா சீமன்ஸ், ராயல் என்ஃபீல்ட், யமஹா, எம்எஸ்ஐ, மதர்சன், கப்பாரோ என கடந்த 14 ஆண்டுகளாக பன்னாட்டு ஆலைகளில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் எழுப்பப் பட்ட  அதே கோரிக்கைகளைத்தான் - இன்னும் கூடுத லான நியாயங்களைத்தான் இந்த போராட்டம் எழுப்பியது. 

இந்த போராட்டம் நடந்து முடிந்த பிறகு, தொழிலா ளர்கள் தங்கியிருந்த விடுதியை தகுதியற்ற விடுதி; என அரசு மூடியிருக்கிறது. (இதற்கு அனுமதி அளித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை) அங்கு விநியோகிக்கப்பட்ட உணவு உண்ணு வதற்கு தகுதியற்றவை என்கிற முறையில் அந்த உணவைப் பரிமாறிய ஒப்பந்ததாரர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும்  ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை முற்றிலும் ஆலைச் சட்டத்திற்கு விரோத மான முறையில் - 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சாலை அதி காரிகளின் கூட்டாய்வில்  உறுதி செய்துள்ளனர். தொழி லாளர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அனுமதி பெறாத ரசாயனப் பொருட்களை  பயன்படுத்தி இருக்கி றார்கள். பணிதன்மைக்கேற்ற பாதுகாப்பு அதிகாரிகள் இல்லை; எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக உற் பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கி றார்கள்; தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கண் கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.- இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை முழுவதும் தொழிற்சாலை துறை உயர் தலைமை அதிகாரிக ளால், இந்த போராட்டம் நடைபெற்ற பிறகு ஆலையில் ஆய்வு செய்யப்பட்டதிலிருந்து வெளிவந்திருக்கும் உண்மைகள். தொழிலாளர்கள் எழுப்பிய குற்றச் சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  

நிரந்தரமற்ற தொழிலாளிகள்

இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் யார் என்பது மிக முக்கியமானது. இதுவரையிலும்   நிரந்தரத் தொழிலாளிகள்-  ஆலைக்குள்ளே சங்கம் அமைத்த வர்கள் தான் போராடினார்கள்; முதல்முறையாக முழுக்க முழுக்க   நிரந்தரமற்ற- பெண் தொழிலாளி கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் இதுதான். அது மட்டுமல்ல; பன்னாட்டு ஆலைகளில் தொழிற்சங்க இயக்கம் நடத்திய எண்ணற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களில் தொழிலாளர் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தலையிட்டார்கள். முதன்முறை யாக தொழிலாளர் துறை மற்றும் சிறு குறுந்தொழில் அமைச்சர்கள் உள்ளிட்டு தமிழக அரசின் அனைத்துப் பிரிவுகளும் நெடுஞ்சாலைக்கு வந்ததுடன், நடுச்சாலை யில் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அரசை உடனடியாகச் செயல்பட வைத்தது இந்தப் போராட்டம்தான். இவர்கள் வைத்த எந்த கோரிக்கை யும் தவறு என்று தமிழக அமைச்சர்கள் சொல்ல வில்லை; மாறாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டார் கள். அதுமட்டுமல்ல, இந்த தொழிலாளிகள் முன் வைத்த பிரச்சனைகள் மீது நிரந்தரமான தீர்வு ஏற் படுத்த தங்களுக்கான தொழிற்சங்க அமைப்பு தேவை என்று அந்த தொழிலாளிகள் விரும்புகிறார்கள். இந்த போராட்டத்தை ஆணாதிக்க சிந்தனையோடு  அணுகிய காவல்துறையின் செயல் கண்டனத்துக்குரியது. கண்ணியமான வேலை -கண்ணியமான சம்பளம் - கூட்டுப் பேர  உரிமை - உலக தொழிலாளர் ஸ்தாப னம் ஏற்றுக் கொண்டிருக்கிற இந்தக் கோட்பாடு களுக்கு எதிரான முறையில் ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்சங்கத்தை மறுப்பதா?

இந்தப் போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையை எப்படி நடத்த வேண்டும் என்று  ஃபாக்ஸ்கான் நிர்வா கத்திடம்  தமிழக அரசு வேண்டுகோள் வைத்தி ருக்கிறது. உணவையும் தங்கும் இடத்தையும் விடுமுறையும் தருவதற்கு சம்மதிக்கிற நிர்வாகம் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கு மறுக்கிறார்கள்.  அரசும் இதுகுறித்துப் பேச மறுக்கிறது.

ஃபாக்ஸ்கான் நடத்துவது நிரந்தரத் தொழில். நிரந்தரத் தொழில் என்றால் 90 சதம் நிரந்தரத் தொழி லாளர்களும் தவிர்க்க முடியாத பகுதியில் 10 சதம் நிரந்த ரமற்ற தொழிலாளர்களும் என்கிற முறையில்தான் இருக்க வேண்டும் என்கிற தொழிற்சங்க கோரிக்கை கள் குறித்து அரசுத் தரப்பு பேசுவதில்லை. தொழிற்சாலையை அனுமதிக்கிற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிரந்தர தொழிலாளர்கள் குறித்த வரையறை மற்றும் அனைத்து தொழிலாளர் சட்டங்க ளை  அமல்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற முறையில் ஒப்பந்த விதிகள் ஏற்படுத்தினால் மட்டுமே தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து எதிர்காலத்தில் சுமூக சூழ்நிலை நிலவிட வாய்ப்புள் ளது. அரசு தொழில் கொள்கையை உருவாக்குகிற அதேநேரத்தில் தொழிலாளர் நலன் குறித்த ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்தப் போராட்டம் வலியுறுத்துகிறது.  நிரந்தரமற்றவர்கள் போராட முடியாது; நிரந்தரமற்ற வர்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது என்கிற ஒரு மதிப்பீட்டை இந்த போராட்டம் உடைத்தெறிந் திருக்கிறது. அந்த வகையில், ஃபாக்ஸ்கான் தொழிலா ளர்களின் மார்கழிப் போராட்டம் ஈவிரக்கமற்ற மூலதன சுரண்டலுக்கெதிரான ஆவேசமிக்க எதிர்வினை என்றால் அது மிகையல்ல.

கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்