articles

img

வேகம் கொள்ளும் வெறுப்பரசியல் - எஸ்.நூர்முகம்மது

மோடி தலைமையிலான பாஜக அரசு 2019 ல் வெற்றி பெற்று மீண்டும்  ஒன்றிய ஆட்சிக்கு வந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படை கொள்கையான ஒரு நாடு, ஒரு மதம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற பாசிச கொள்கைகளை நோக்கி நாடு செலுத்தப்படுகிறது.சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் வாழ்வையும், கல்வியையும், வாழ்வாதாரத்தையும் சீர்குலைப்ப தற்கான திட்டமிட்ட முயற்சிகள் அரசின் அனைத்து வித ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது. அதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசின் பின் துணை யுடன் சங்பரிவார அமைப்புகள் முடுக்கி விடுகின்றன. முதல் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன்  அவர்கள் உணவு பழக்கத்தின் மீது கை வைத்தனர். பசு வதை யைத் தடுப்பது என்ற பெயரால் சிறுபான்மை மக்களும், தலித்துகளும் தாக்குதலுக்கு உள்ளாயினர். முகம்மது அக்லக் எனும் முதியவர் உத்தரப்பிரதேச மாநி லத்தில் பசு மாமிசம் வைத்திருந்ததாகக் கூறி அடித்துக்  கொல்லப்பட்ட போது  அனைவரும் அதிர்ச்சி அடைந்த னர். ஆனால் காவல்துறை குற்றவாளிகளைப் பாது காப்பதிலேயே குறியாக இருந்தது. அதன் பின்னர் இது போன்ற படுகொலைகள் சங்பரிவாரங்களால் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தன. 

ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர எனும் இடத்தில் இரண்டு முஸ்லீம் மாட்டு வியாபாரிகள் பொதுமக்கள் முன்னிலையிலேயே தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட னர். குஜராத் மாநிலம் உனா எனும் கிராமத்தில் 4 தலித் இளைஞர்கள் செத்த மாட்டின் தோலை உரித்த தற்காக கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நடை பெற்றது. அரியானா மாநிலம் மேவாட் எனும் இடத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இரண்டு முஸ்லீம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.இப்படி ஏராளமான சம்பவங்கள். இவை அனைத்திலும் ஈடு பட்டவர்கள் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள். ஆனால் காவல்துறையோ கை கட்டி, வாய் பொத்தி நின்ற கொடுமையைப் பார்த்தோம்.

காஷ்மீர் மீது பாய்ந்த ஒன்றிய அரசு

காஷ்மீர் மாநிலம் இந்து மன்னரின் விருப்பத்தை மீறி பெரும்பான்மை இஸ்லாமிய காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் பேரில் இந்தியாவில் இணைந்தது. காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமை, தனியான பண் பாட்டுக் கூறுகளை பாதுகாக்கும் வகையில் தான் அவர்க ளுக்கு அரசியல் சட்டம் சரத்து 370 மூலம் சில தனி  உரிமைகளை வழங்கியது. ஆனால் துவக்க காலம் முதல் சங் பரிவார் அமைப்புகள் காஷ்மீர் மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த னர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த தனி உரிமை கள் அனைத்தும் பறிக்கப்பட்டதோடு, அம்மாநிலமே மாநில அந்தஸ்தை இழந்து, இரண்டு யூனியன் பிரதே சங்களாக மாற்றப்பட்டன. அம்மாநில மக்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அனைத்து உரிமை களையும் இழந்தவர்களாக இந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். 

30 ஆண்டுகளுக்கு முன்னால் காஷ்மீரில் பண்டிட் பிராமணர்களுக்கு எதிராக தீவிரவாதிகளால் நடத் தப்பட்ட தாக்குதல்களும் அதனால் அம்மாநிலத்தி லிருந்து வெளியேறிய விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெற்றன. அதை அம்மாநில மக்களோ அல்லது நமது நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளோ ஏற்க வில்லை. கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான நிகழ்வு அது. தற்போது எத்தகைய அசம்பாவிதங்க ளும் நடைபெறாத நிலையில் அந்நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தியும், அதன் மூலம் காஷ்மீர் முஸ்லீம் கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரித்து வெறுப்பேற்றும் ‘காஷ்மீர் பைல்ஸ்’ எனும் திரைப்படம் வெளிவர, அப்படத்தைக் குறித்து பிரதமர் மோடி முதல் சங்பரிவார அமைப்பினர் வரையிலும் புகழ்ந்து பேசி, அப்படத்தின் மூலம் இந்திய மக்கள் மத்தியில் முஸ்லீம்கள் அனைவருமே தீவிரவாதிகள் என சித்த ரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்கள் அப்படத்திற்கு வரி விலக்கு அறிவித்துள் ளன. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது முஸ்லீம்களுக்கு எதிராக அரசின் பின்புலத்துடன் நடைபெற்ற கொடிய தாக்குதல்களும், 2000 பேர் உயிரி ழந்ததும் வரலாறு. அந்நிகழ்ச்சிகளைக் குறித்த திரைப்படம் எடுக்கப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும். வெறுப்பரசியலின் விளைவு இது.

ஐந்து மாநில தேர்தல் களம்

ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் களம் மக்கள் பிரச்சனைகளை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வகுப்புவாத பிரச்சாரத்தை முன்னிறுத்திய தேர்தலாகவே பாஜக வினரால் முன்னெடுக்கப்பட்டன. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தே இது 80 சதவிகிதத்திற்கும் 20 சதவிகி தத்திற்கும் இடையிலான மோதலாக சித்தரித்து, தேர்தலின் முக்கிய பிரச்சனையாக வகுப்புவாதத்தை முன்னிறுத்தினார். மக்களின் வாழ்வாதார பிரச்சனை கள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இதில் ஏற்பட்ட வெற்றி,  தற்போது ஒரு வெறியாக மாறி நாடெங் கம் வியாபிக்க துவங்கியுள்ளது. இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களும் மக்கள் பிரச்சனைகள் முன்னுக்கு வரும் தேர்தலாக இல்லாமல் மதவெறி அரசியல் முன்னுக்கு கொண்டு வரப்பட்டு, மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்படும் தேர்தலாகவே அமையப் போகின்றன என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கொழுந்து விட்டெரியும் வெறுப்பரசியல்

இந்நிலையில் தான் இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ள கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசின் திட்டமிட்ட வெறுப்பரசியலின் நிகழ்வுகள் கவலை கொள்ளச் செய்கின்றன.இந்தியர்களுக்கென்றோ, இந்துக்களுக்கென்றோ நாடு முழுவதும் தழுவிய ஒரே உடை கிடையாது. உடை என்பது மாநிலத்திற்கு மாநிலம், இடத்திற்கு இடம் மட்டுமன்றி ஒவ்வொரு சமூகத்தின் பண்பாடு அடிப்படையில் மாறுகிறது. மேலும் காலாகாலத்திற்கும் ஒரே உடை என்பதும் இல்லை. அதிலும் குறிப்பாக பெண்களின் உடை என்பது மாறிக் கொண்டே இருந்து வந்துள்ளது. மாறி வரும் நாகரிகத்திற்கு ஏற்ப உடைகளின் வடிவ மைப்பும் கூட மாறுகிறது. ஆண்கள் ஒரு காலத்தில் அணிந்திருந்த மேலாடையோ, கீழாடையோ இன்றைய வடிவமைப்பைக் கொண்டதல்ல. அது கூட காலத்திற்கு ஏற்பவும், இடத்திற்கு ஏற்பவும் மாறிக் கொண்டே தான் உள்ளது. முற்காலத்தில் பெரும் பான்மையான ஆண்கள் மேலாடை அணிவதில்லை. அப்படி மேலாடை அணியும் உரிமை கூட மேல் வகுப்பி னருக்கு மட்டுமே இருந்தது. கீழ் வகுப்பினர் மேலாடை அணிய உரிமையற்றவர்களாக இருந்தனர். பெண்கள் மேலாடை அணியவும், மார்பை மறைக்க வும்  கூட பல போராட்டங்களை நடத்தியே அந்த உரிமை யைப் பெற வேண்டி வந்தது. எனவே தான் சமூக சீர்திருத்தவாதிகள் சாமித் தோப்பு வைகுண்டரும், அய்யங்காளியும் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அப்போதெல்லாம் அன்றைய அரசு இயந்திரம் சாமானியர்களின் உரிமைக்கு எதிரா கவே இருந்து சாமானியர்கள் மீது அடக்குமுறை களை ஏவி விட்டதே வரலாறு.  கர்நாடக மாநிலத் தில் ஆளும் பாஜக அரசு இந்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மதவெறி அரசியல் நோக்கத் துக்காக ஹிஜாப் பிரச்சனையை எடுத்துள்ளது. முஸ்லீம் கல்லூரி மாணவிகள் காலம், காலமாக தங்களது கல்லூரி சீருடையை அணிவதோடு, தங்களது மத நம்பிக்கை அடிப்படையில் தங்களது தலையை மறைக்க ஹிஜாப் எனும் சிறிய ஆடையைப் பயன்படுத்து வது வழக்கம். நாடு முழுக்க இது நடைபெறுகிறது. நமது நாட்டில் சீக்கியர்கள் இராணுவத்திலும், காவல்துறை யிலும் பணி புரிந்தாலும் சீருடையை தொப்பிக்குப் பதி லாக சீக்கிய வழமைப் படி தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுகின்றனர். மத அடையாளம் என்ப தற்காக சீருடைப் பணிகளில் கூட இது மறுக்கப்படுவ தில்லை. ஆனால் முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தார்கள் என்பதற்காக கல்லூரியில் நுழைய மறுக்கப்பட்டதோடு, அவர்கள் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை. சமீபகாலமாக மத வெறி நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் துணை புரிவதை இப்பிரச்சனையிலும்  பார்க்கிறோம்.

மாமிச உணவுக்கு எதிராக

தற்போது கர்நாடக மாநிலத்திலும் நாட்டின் பல இடங்களிலும் மாமிச உணவுக்கு எதிரான மிரட்டல்க ளும், தாக்குதல்களும் துவங்கியுள்ளன. முன்னர் மட்டி றைச்சி காரணம் காட்டி நடத்தப்பட்டு வந்த சங் பரிவார வெறியர்களின் தாக்குதல்கள் தற்போது மாமிச உணவுக்கு எதிராகவே நடக்கின்றன. தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமநவ மியை ஒட்டி, மாமிச உணவுப் பரிமாறக் கூடாது என்று சங் பரிவாரத்தினரால் தாக்குதல்கள் நடைபெற்று 60 க்கு மேற்பட்ட விடுதி மாணவ, மாணவிகள் தாக்கப் பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்திலும், நாட்டின் சில பகுதிகளிலும் ஹலால் மாமிசம் என்பது பிரச்சனை யாக்கப்பட்டு, தாக்குதல்கள் நடைபெறுகின்றன. 

இஸ்லாமிய மக்களை தொழுகைக்கு அழைக்கும் ஒரு சில நிமிடங்களே ஒலிபரப்பாகும் தொழுகை அழைப்புகளைத் தடை செய்யவும் நிர்பந்தங்கள் வருகின்றன. இந்து கோயிலை ஒட்டி காலம், காலமாக சிறு வியாபாரங்கள் செய்து வரும் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். ராமநவமி ஊர்வலம் என்ற பெயரில் ஆயுதம் தரித்த சங் வன்முறையாளர்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய நிகழ்வுகள் குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக நடக்கின்றன. பீகாரில் ராம நவமி ஊர்வலத்தின் போது வழியில் இருந்த மசூதி யின் மேல் காவி கொடிகளைக் கட்டிய சங் வன்முறையா ளர்களின் செயல்களை காட்சி ஊடகங்களில் கண் டோம். வன்முறையாளர்களின் அக்கிரமங்களைத் தடுப்பதற்கோ, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து  கைது செய்வதற்கோ காவல்துறை முன் வருவதில்லை. முஸ்லீம்கள் தாக்கப்படும் நிகழ்ச்சிகளையெல்லாம் ஊடகங்கள் பெரும்பாலும் இரு பகுதியினருக்கு இடையே நடைபெறும் மோதலாகவே சித்தரிக்கின் றன. ஜார்க்கண்ட் அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. இவைகளெல்லாம் நடை பெற்று வரும் வகுப்புவாத நிகழ்வுகளில் ஒரு சிறு பகுதியே. சிறுபான்மை மக்கள் அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட ஒன்றிய, மாநில பாஜக அரசுகளும், அவர்களின் ஏவலர்களாக செயல்படும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளும் காரணம். நீதிமன்றங்கள் கூட நீதி வழங்காமல் சங் பரிவா ரத்திற்கே துணை போவது மேலும் கொடுமை.

மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல்

இந்நிலையில் தான் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று முடிந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு சிறுபான்மை மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்தும், பாஜக அரசின் வன்மம் நிறைந்த சிறு பான்மை மக்களுக்கு எதிரான செயல்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் நிற்க வும் உறுதியான முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் வகுப்புவாதிகளுடன் சமரசப் போக்கை கடைப்பிடித்து, பெரும்பான்மை மக்க ளின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்ற சந்தர்ப்பவாத நிலை எடுப்பது வகுப்புவாதிகளுக்கே உதவும் என்பதை வரலாறு காட்டுகிறது என்பதையும் மாநாடு  சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய மிகப் பெரும் ஆபத்தாக பாஜகவின் பெரும்பான்மை வகுப்புவாத மும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தூண்டி விடப்படும் தாக்குதல்களும், பாஜகவின் சிறுபான்மை யினரின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமை மீதான தாக்குதல்களும் நாடு சந்திக்கும் பேராபத்து என்பதை கருத்தில் கொண்டு வகுப்புவாத பாஜக மற்றும் சங் பரிவாரத்தினருக்கு எதிராகவும், மதச்சார்பின்மை எனும் அரசியல் சட்ட அடிப்படை தன்மையைப் பாது காக்கவும் ஒன்றுபட்டுப் போராட முன்வரவும் அறை கூவல் விடுத்துள்ளது. சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகள் என்ன நிலைபாடு எடுத்தாலும் நாட்டில் உள்ள கோடானுகோடி மதச்சார்பற்ற, ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் இந்த அறைகூவலை ஏற்க முன் வருவர் என்பது உறுதி.