சுற்றுச்சூழலை நாசப்படுத்தி வந்த ஸ்டெர் லைட் தாமிர ஆலையை தூத்துக்குடியிலி ருந்து அப்புறப்படுத்திட வேண்டும் என்பதற் காக நடந்த மக்களின் அறவழிப் போராட்டத்தில் 22-02-2018 மற்றும் 23.02.2018 அன்று நடத்தப்பட்ட துப் பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்திட தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையின் காரணமாகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதாக முதலில் தமிழக அரசின் அரசாணை இருந்தது. இதனை ரத்து செய்திடவேண்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தூத்துக் குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட்மனு எண்.13313-2018 தாக்கல் செய்த பின்னரே துப்பாக்கிச் சூட்டின் விளைவாக நடந்த விவகாரங்கள் குறித்து விசாரணை செய்திட வேண்டும் என்று திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழு சார்பில் 12-07-2018 அன்று சென்னை யில் நடத்தப்பட்ட கண்டன கருத்தரங்கில் கலந்து கொண்ட மனித உரிமைப் போராளி டீஸ்டா செதல் வாத் அவர்கள், தூத்துக்குடியில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச் சூடு மற்றுமொரு ஜாலியன் வாலாபாக் எனக் குறிப்பிட்டார். இது உண்மை தான் என்று நீதி யரசர் அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கையானது தமிழக சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு இந்த விசாரணை அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்திட துவங்கியுள்ளது. ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது 29-05-2018 அன்று சி.பி.ஐ. விசாரணை வேண்டி புகார் மனு அனுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளராக இருந்த கே.எஸ். அர்ச்சு னனின் புகாரில் வருவாய்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை ஆமோ திக்கும் வகையிலும், இந்த புகார் மனுவின் விரி வாக்கம் செய்யப்பட்ட அறிக்கையாகவும் அமையப் பெற்றுள்ளது. ஆனால் சி.பி.ஐ.யோ ஒரு காவல் ஆய்வா ளர் மீது மட்டும் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து விட்டு, 71 பொதுமக்கள் மீது குற்றம் சாட்டி இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்ற வழக்கானது மதுரை சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றது.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணை யத்தின் அறிக்கையில் வருவாய் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்றவியல் நட வடிக்கையும் எடுத்திட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (பார்ட் - 3, பக்கம் - 32) தமிழக அரசும் ஆணைய விசாரணை அறிக்கை தொடர்பாக சட்டக் கருத்துரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் தவறிழைக்கவில்லையா?
வழக்கம் போல் குழம்பிய குட்டையில் மீன்பிடித்தி டும் ஸ்டெர்லைட், தனக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பில்லை என விசாரணை ஆணையமே கூறி விட்டதாக அதன் முகவர்கள் மூலம் அறிவித்துக் கொண்டுள்ளது. உள்ளபடியே விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர், துப்பாக்கிச் சூட்டின் விளைவாக ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்சனை நிகழ்வுகளை விசாரிப்பதற்குத் தானே தவிர ஸ்டெர்லைட் நிறு வனம் துப்பாக்கிச் சூட்டில் பங்கேற்றதா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக அல்ல.
விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் (பார்ட் - 1 - பக்கம் - 38) குறிப்பிட்டுள்ளபடியே 22-05-2022 தேதிய துப்பாக்கிச் சூட்டிற்கு முன்பு, 18-05-2018 அன்று ஸ்டெர்லைட்டால் மதுரை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட்மனுவில் பிறப்பிக் கப்பட்டுள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றா கும். ஆணையம் ஸ்டெர்லைட்டின் ரிட்மனு தொடர் பாக பின்வருமாறு பதிவு செய்துள்ளது: (பார்ட்; - 1 பக்கம் - 38, 39) “ஸ்டெர்லைட் ஆலைக்கும், குடியி ருப்புகளில் வசிப்பவர்களின் உயிருக்கும், உடை மைக்கும் ஆபத்து என்று பல நிகழ்வுகளை குறிப் பிட்டு ரிட் மனு தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எனினும் அந்த உரிமையை தவறாக பயன்படுத்திக் கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரமிடுவது போல் கு.வி.மு.ச. பிரிவு 144 வகையத்தின் கீழ் உத்த ரவு போட வேண்டும் என்று சொல்வது முறையற்றது ஆகும். பல வருடங்கள் அந்த பகுதியில் இயங்கி வரும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பது மட்டுமே அவர்களுக்கு முன்னுரிமையை தருமே தவிர அவர்க ளின் விருப்பத்தை மாவட்ட நிர்வாகத்தின் மேல் திணிக்க முடியாது. அது கிட்டத்தட்ட மாவட்ட நிர்வா கத்தின் முடிவு எடுக்கும் செயலில் தலையிடுவதாகும்.” உயர்நீதிமன்ற உத்தரவிலிருந்து உத்தரவு பிறப்பிப்ப தற்கு முன்பு தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் கள நில வரங்களை அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நிர்வாகம் ஆகியவற்றின் கருத்துக்களை எதிர்பிரமாண பத்திரங்கள் மூலமாக உயர்நீதிமன்றம் கேட்டறிந்ததாக எதுவும் தெரிய வரவில்லை.
விசாரணை ஆணையத்தின் தலைவரும் உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளவர் என்பதையும் உயர்நீதிமன்ற உத்தரவின் மீது உடனடியாக தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்ப தையும் எளிதாக கடந்து சென்று விட முடியாது.
ஆணையத்தில் சாட்சிய ஆதாரங்கள்
ஆணையத்தின் முடிவுகளுக்கு ஆதார சாட்சி யங்களாக உண்மை என்று சத்திய பிரமாணம் செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்டுகளோடு வீடியோ ஆதாரங்களும், புகைப்பட ஆதாரங்களும் மற்றும் பலதரப்பட்ட பொது அலுவலக பணிகளோடு தொடர்பு டைய ஆவணங்களும் அமையப் பெற்றுள்ளன. இவ்வா றான அபிடவிட்டுகளை தாக்கல் செய்து வருவாய் துறையினரும் காவல்துறையினரும் ஆணைய விசார ணையில் முழுமையாக பங்கு பெற்றுக் கொண்டுள்ள தோடு அவர்களுக்காக வழக்கறிஞர்களும் ஆஜரா கியுள்ளனர். சாட்சிய ஆதாரங்கள் தொடர்பாக ஆணையம் பின்வருமாறு கூறியுள்ளது:
“ஒருபுறம் படக்காட்சிகளுக்கும், மறுபுறம் சாட்சிக ளின் வாய்மொழி சாட்சிகளுக்கும் இடையேயான பொருத்தமின்மையை நோக்கும் போது படக்காட்சிகள் மேலோங்கி நிற்கும். படக்காட்சிகளில் யாதொரு தலையீடும் இல்லாத நேர்வில் நிகழ்வுகளை பதிவு செய்யும் போது இருந்தவற்றையே காட்டும். வாய்மொழி சாட்சியத்தை பொறுத்தவரையில், வாக்கு மூலம் அளிப்பவரின் சாட்சியம் வழக்கிற்கு தகுந்த வாறு மாற்றப்பட்டிருக்கலாம். கள நிலவர உண்மை களை மட்டுமே வெளிப்படுத்தும் படக்காட்சிகளை போல அல்லாமல் வாய்மொழி சாட்சியங்களில் சொல்லிக் கொடுத்தல், திரித்தல் மற்றும் தேவைக் கேற்ற வகையில் மாற்றிக் கூறுதல் ஆகியவற்றுக் கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. “மனிதர்கள் பொய் கூறலாம். ஆனால் சூழ்நிலைகள் கூறாது” என்பதே பழமொழி ஆகும். இதுவே சாட்சிய விதியாக மட்டுமின்றி, விவேகம் மற்றும் விடாமுயற்சியின் விதியாகவும் உள்ளது. அவ்வாறெனில், பதிவு செய்யப்பட்ட நேரத்தில் உண்மை நிலையை காட்டு கின்ற படக்காட்சிகள், வாய்மொழி சாட்சியத்தை விட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். மேலும் படக்காட்சி பதிவுகள் காவல்துறையினரால் அளிக்கப் பட்டவை ஆகும். (பார்ட்; - 2 - பக்கம் - 74)”
மேலும் ஆணையத்தின் அறிக்கை (பார்ட்; - 1 பக்கம் 125 -ல்) சிறப்பு நிர்வாக நடுவராக செயல் பட்டதாக கூறுகின்ற ஒருவரின் அலைபேசி அழைப்பு கள், சம்மந்தப்பட்ட அலைபேசி நிறுவனத்திடமிருந்து ஆணையத்தால் பெறப்பட்டு அலைபேசி கோபுர இடங்கள் மற்றும் பயன்படுத்திய அழைப்புகளின் மூலம் சாட்சியானவர் உண்மைக்கு புறம்பாக நடந்து கொண்டுள்ளார் என்று முடிவுக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் அத்துமீறல்கள்
காவல்துறையினரின் சட்ட விரோத செயல்பாடு களை ஆணையம் பின்வருமாறு சுட்டிக் காண் பித்துள்ளது: ஆணையத்தால் விவரித்து சொல்லப்பட்டுள்ள காரணங்களினால் காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டு இருக்கின்றனர் என்பது ஆணையத்தின் தீர்க்கமான முடிவாகும். அது தவிர தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இச்சம்பவத்தின் நிகழ்வு கள் மற்றும் சூழ்நிலைகள் தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினரின் வாதமும் இல்லை. (பார்ட்; - 3 - பக்கம்-30) இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் சீருடை அணியாமல் குற்றமிழைத்துள் ளார்கள். (பார்ட்; - 4 - பக்கம்-27 மற்றும் பார்ட்; - 2 - பக்கம்-165)
ஆயுதமின்றி அமைதியாக கூடிய அப்பாவி பொது மக்கள் மீது கோர முகத்துடனும் சிந்தனையுடனும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் போது ஒரே ஒரு காவலர் மட்டுமே பலத்த காயங்கள் அடைந்துள்ளார். (பார்ட்; - 3 - பக்கம்-45)
துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்கள் உட லினை கூராய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காவல்துறை மேற்படி துப்பாக்கிச் சூடானது என் கவுண்ட்டர் - எதிர்பாராத விதமாக சுடுவது என்ற நிலை எடுத்துள்ளது. எவ்வாறெனினும் இத்தனை சாட்சிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தும் பியுசிஎல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி துப்பாக்கிச் சூடு நிகழ்வில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்திட அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்யாதது ஏமாற்றம் அளிக்கின்றது. இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வு மற்றும் அதன் பிறகான காவல்துறை வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மக்கள். ஆணையத்தில் சாட்சியம் அளித்த பின்னரும் இரண்டாம் நிலை தாக்குதலுக்கு உட்படுத்தப்பட போகின்றவர்கள் இதே தூத்துக்குடி மக்கள் தான். ஆனால் இவர்கள் வழக்கறிஞர்களின் உதவியோடு ஆணையத்தில் சாட்சியம் அளிப்பதற்கு எந்த ஒரு வழி வகையும் செய்யப்பட்டிருக்கவில்லை.
வன்முறையில் ஈடுபட்ட குண்டர்கள் யார்?
ஆணையத்தின் அறிக்கை பகுதி - 2 - பக்கம் - 99 -ல் வன்முறையில் ஈடுபட்டுள்ள குண்டர்களை பற்றி பின்வருமாறு சுட்டிக் காண்பித்துள்ளது: “25 முதல் 30 எண்ணிக்கை கொண்ட குண்டர்கள் போராட்டக்காரர்களுடன் கலந்துள்ளார்கள் என்பதும், அவர்கள் சுதந்திரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த வாகனங்களுக்கும், பக்கத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கும் தீ வைத்து அழிக்கும் செயலில் ஈடுபட்டார்கள் என்பது வும் தெரிய வருகிறது.”
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீங்கு விளைவித்த வர்களின் அடையாளத்தை கண்டறியவில்லை. இதை காவல்துறையினரோ, பின்னர் புலன் விசாரணையை மேற்கொள்ள ஒப்படைக்கப்பட்ட சி.பி.ஐ.யோ கண்டு பிடிக்கவில்லை. ஆணையம் நேர்மையான முயற்சிகள் எடுத்து அந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களை அடை யாளம் காண, சி.சி.டி.வி பதிவுகளிலிருந்து எடுக்கப் பட்ட படங்களை தூத்துக்குடி காவல் கண்காணிப்பா ளருக்கும் சி.பி.ஐ.க்கும் அனுப்பி வைத்தது. இரண்டு அமைப்புகளுமே அந்த நபர்களை நிச்சயமாக அடை யாளம் காட்ட இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார் கள். ஆணையம், பொதுமக்களில் பல்வேறு பட்ட சாட்சி களை விசாரித்ததிலிருந்து, சில ஆண்கள் ரகசியமா கப் போராட்ட கூட்டத்தில் நுழைந்து நாச வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றும், அவர்கள் ஸ்டெர்லைட் நிர்வா கம் மற்றும் காவல்துறையின் கூட்டு பங்களிப்புடன்- அவர்களின் வேண்டுகோளின் பேரில்- அவர்களின் நோக்கத்திற்காக செயல்பட்டுள்ளதாக தெரிவித்த னர். இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. இது நிச்சயமாக சம்மந்தப்பட்ட அலுவலர்க ளால் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டியதாகும். (பகுதி - 2 - பக்கம் - 83)
முழு வளாகமும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது போராட்டக்காரர்கள் என்ற போர்வை யில் ஒரு குழு வளாகத்திற்குள் நுழைந்து வலுமிக்க காவல்துறையினரின் முன்னிலையில், அத்தகைய இறுக்கமான சூழ்நிலையில், பொருட்களை அழிப்ப தில் எப்படி ஈடுபட்டிருக்க முடியும்? இந்த ஆணையம், அந்த நாசவேலைகளில் ஈடுபட்ட குழுவினரின் அடை யாளத்தை கண்டுபிடிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு வருத்தத்துடன் கடிதம் எழுதியது. அதை போல் அக்கறையும் பொறுப்பும் கொண்டு புலன் விசாரணை செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கும் கடிதம் அனுப்பி யது. மாவட்ட காவல்துறையும் யாதொரு சி.பி.ஐ. அலு வலரும் மேற்சொன்ன குண்டர்களை அடையாளம் காண இயலவில்லை. இந்த இரு அதிகார மையங்க ளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மட்டு மல்லாது, ஸ்டெர்லைட் அலுவலர் குடியிருப்புகளிலும் வாகனங்களை எரித்தவர்களை கண்டுபிடிக்க இயல வில்லை என்று தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமா னது. இரண்டு அலுவலர்களும் மேற்சொன்ன நபர்க ளை அடையாளம் காண இயலவில்லை என்று கூறுவது அவர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. எவ்வித மர்ம சூழலிலும் சிக்கலை அவிழ்க்கக் கூடிய முகமை சி.பி.ஐ. எனப் பொது மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு முகமை, அதன் பொறுப்பை தட்டிக் கழிப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கி றது. (பகுதி - 2 - பக்கம் - 100 - 103)
எனவே ஒரு சில குண்டர்கள் மீது பழியை போட்டு மற்றவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆணை யம் சுட்டிக்காண்பித்துள்ளவர்களோடு குற்றமி ழைத்துள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மேலும் குற்ற எண்.190-2018-லும் அதற்கு பின் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளிலும் எந்தெந்த காவல்துறை மற்றும் வரு வாய்துறை அதிகாரிகள் குற்றம் நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் இருந்துள்ளனர் என்பது காணப்படுகின்றது. ஆகவே ஆணையத்தினால் சேகரிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் தொடர்ச்சியாக குற்றவாளிகள் அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப் பட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அறிக்கையின் பிற பகுதிகள்
துப்பாக்கிச் சூட்டிற்கு முன்பு 20-05-2018 அன்று மாவட்ட நிர்வாகத்தினரால் நடத்தப்பட்ட கண் துடைப்பு சமாதான கூட்ட நடவடிக்கைகளை போராட்டக் குழு வினருக்கு இடையேயான பிளவு என்றும், போராட்டக் காரர்களில் முன் எச்சரிக்கைக்காக 67 பேர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது குறித்தும் 28 காவல் துறை வீடியோகிராபர்கள் பணியாற்றியது குறித்தும் இறந்து போனவர்களும் காயம்பட்டவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சமயம் விபத்து பதிவேடுகளில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவரால் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்படாதது, பிரேத பரிசோதனை ஆவ ணங்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்கள் இறந்தநேரம் மற்றும் வன்முறை யில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினரின் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல அம்சங்கள்; ஆணையத்தின் விசார ணையிலிருந்து விலகிச் சென்றிருக்கவில்லை. இருந்தாலும் 23.05.2018 முதல் 27.05.2018 வரை தூத்துக்குடிஉள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது தொடர்பாகவும் இது குறித்து உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக் கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மதுரை உயர்நீதி மன்றகிளை வழிகாட்டுதலும் ஆணையத்தினால் கண்டுகொள்ளப்படவில்லை.
உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு
எனவே தமிழக அரசு இந்த விசாரணை ஆணை யத்தினால் சேகரிக்கப்பட்டுள்ள வலுவான சாட்சிய ஆதாரங்கள் மூலம் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் அலுவல் ரீதியான பணிகளின் பொருட்டு குற்றமிழைக்கவில்லை என்பது உறுதி யாவதினால் இவர்கள் கொலை குற்றத்தில் ஈடுபட்ட தற்கான முதல்நிலை தோற்ற வழக்கு உள்ளது என்பது தெரியவருவதால், தூத்துக்குடி ஜாலியன் வாலா பாக்கில் ஈடுபட்டோர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் 23.05.2018 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தூத்துக்குடி யில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறந்து போனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. தற்போது ஆணையம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கிட பரிந்துரை செய்துள்ள நிவாரணம் போதுமானதல்ல; உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர்: வழக்கறிஞர், தூத்துக்குடி