2002 வன்முறை வெறியாட்டங்களின்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி எப்படி நடந்துகொண்டாரோ அதே போன்றே மணிப்பூரில் பல வழிகளில் பைரன் சிங் நடந்துகொண்டிருந்திருக்கிறார். இவர்களின் பிளவுவாத இந்துத்துவா அரசியலே இனரீதியாக வேறுபட்டுள்ள மற்றும் உணர்ச்சிமிக்க மணிப்பூர் மக்களின் தற்போதைய துன்பங்களுக்கு மூல காரணம் என்பது நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த சுமார் மூன்று மாதங்களாக நாட்டின் அரசியல் நிலைமையில் பெரிதும் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ள மணிப்பூர் நிகழ்வு கள் குறித்து நரேந்திர மோடி அரசாங்கத்தின் முக்கிய மான ஓர் அம்சத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறது. அதாவது எதேச்சதிகார ஆட்சி என்றால் எதற்கும், எவருக்குப் பதில் சொல்லாது என்பதேயாகும். மணிப்பூரில் இனரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை வெறியாட்டங்கள் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள், பல்லாயிரக்கணக் கானவர்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள், பெண்க ளுக்கு எதிராக மிகவும் கொடூரமான முறையில் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் இந்தக் கொடூரமான நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றது, இவற்றுக்கெதிராக ஒன்றிய அரசாங்கம் உறுதி யான நடவடிக்கைகள் எடுத்து, வன்முறை வெறி யாட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திடும் என்றும் அங்கே அமைதியை நிலைநாட்டும் என்றும் எதிர் பார்த்திருந்தனர். ஆனால், உண்மையில் நடை பெற்றுள்ளது என்னவென்றால் அதற்கு நேரெதிராக முற்றிலும் எதிர்பாராதவையேயாகும். நாட்டின் பிரத மர், மிகவும் உணர்ச்சிமிக்க வட கிழக்கு மாநிலம் ஒன்றில் நடைபெற்றுள்ள மிகவும் கொடூரமான துயரச் சம்பவங்கள் குறித்து எதுவுமே கூறுவதற்கு மறுத்துள் ளார். ஒன்றிய அரசாங்கம் மற்றும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் ஆகிய இரட்டை என்ஜின்களை ஓட்டிடும் பிரதமர், மணிப்பூரில் நடைபெற்றுள்ள கொடுமைகள் குறித்து எவ்விதமான பொறுப்பையும் ஏற்க மறுக்கிறார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் சமயத் தில், ஆயுதமேந்திய மெய்டேய் ஆட்களால் வீதியில் இரு பெண்கள் நிர்வாண கோலத்துடன் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊட கங்களில் வைரலாகி, பார்ப்போர் மனதைப் பதை பதைக்க வைத்த பின்னர்தான் நரேந்திர மோடி இது குறித்துப் பேச நிர்ப்பந்திக்கப்பட்டார்.
திசை திருப்பும் இழிவான சூழ்ச்சி
நாடாளுமன்ற அமர்வு தொடங்கும் நாளன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு முன்பு அவர் பேசும்போது, இரண்டு பெண்களுக்கு நடந்துள்ளவை குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரி வித்தார். ஆனாலும், இதனை திசைதிருப்பும் விதத்தி லும், சிறுமைப்படுத்தும் விதத்திலும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய குற்றங்களைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ராஜஸ்தான், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் பெண்கள் இவ்வாறு தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக-வினரும், பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவும் பேச வேண்டும் என்று இவ்வாறு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்த நிலைப்பாடு என்பது, மணிப்பூரில் நடை பெற்றுள்ள இனவெறி நடவடிக்கைகளின் கொடூரங்க ளை மறுத்து, அதுபோன்று எல்லா மாநிலங்களிலும் நடப்பதுதான் என்று காட்டுவதற்காக, பிரதமரும், பாஜகவினரும் மேற்கொண்டுள்ள இழிவான சூழ்ச்சி யேயாகும். இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் பகுதி எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரா கத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மணிப்பூரில் நடைபெற்றவை அவை போன்றதல்ல. இங்கே, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள், குறி வைக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கிறார்கள். குக்கி பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிடப்பட்ட, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த எதார்த்த நிலையை மறுத்துத்தான் பிரதமரும், பாஜக-வினரும் மணிப்பூரில் நடைபெற்றவையும், மற்ற மாநிலங்க ளில் நடைபெறுவதும் ஒன்றுதான் எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில், மணிப்பூர் நிலைமை குறித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். எதிர்க் கட்சிகள் வழக்கமாகக் கோரும் இயல்பான கோரிக் கையே இது. ஏனெனில், பிரதமர் என்ற முறையில் நாடாளுமன்றத்தின் முன் மிகவும் முக்கியமான பிரச்ச னையாக மாறியுள்ள மணிப்பூர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். நாடாளு மன்றத்திற்குப் பதில் சொல்ல பிரதமர் கடமைப்பட்ட வர் என்கிற அடிப்படைக் கொள்கையிலிருந்து இது வருகிறது. அவ்வாறு அவர் அறிக்கை தாக்கல் செய்தால் தான் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்ள இயலும். ஆனால், பிரதமரும் பாஜக-வினரும் இவ்வாறு ஓர் அறிக்கை தாக்கல் செய்திடப் பிடிவா தமாக மறுத்து வருகின்றனர். இவர்களின் இத்தகைய பிடிவாதமான மறுப்பினால்தான் மழைக்காலக் கூட்டத் தொடர், தொடங்கிய நாளிலிருந்தே முடங்கியுள்ளது.
சட்ட விரோத குடியேற்றம் எனும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தின் எதிரொலி
இந்துத்துவா-எதேச்சதிகார ஆட்சியினரின் குணத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவரால், மணிப்பூரில் நடைபெற்ற அக்கிரமங்கள் குறித்துப் பிரதமர் பேசு மறுப்பதற்கும், அவற்றிற்குப் பொறுப் பேற்க மறுப்பதற்குமான காரணங்களைப் புரிந்து கொள்ள முடியாது. மணிப்பூரில், முதலமைச்சர் பைரன் சிங், மாநிலத்தில் உள்ள குக்கி பழங்குடி சிறுபான்மை யினருக்கு எதிராக, மெய்டேய் இன வெறியை விசிறி விட்டுக் கொண்டிருந்திருக்கிறார். குக்கி பழங்குடியின ருக்கு எதிராக, அவர்களை ‘அந்நியர்கள்’ என்றும், ‘கஞ்சா’ பயிரிடுபவர்கள்’ (‘poppy cultivators’) என்றும் வெளிப்படையாகவே அவர் பேசிக் கொண்டிருந்தி ருக்கிறார். மே மாதம் நடைபெற்ற நிகழ்வுக்குச் சற்று முன்புதான் அவர் அவர்களுடைய ஆர்எஸ்எஸ் இதழான ‘ஆர்கனைசர்’ இதழில், “அந்நிய குக்கி இனத்தினர் மாநிலத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதால், மாநிலத்தின் பூர்வகுடியினர், இரண் டாம் தர குடிமக்கள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்,” என்று கூறியிருந்தார். இவ்வாறு அவர், அஸ்ஸாமிலிருந் தும், வட கிழக்கிலிருந்தும் சட்டவிரோதமாகக் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீண்டகாலமாக ஆர் எஸ்எஸ் கூறிவரும் பிரச்சாரத்தை எதிரொலிக்கிறார்.
மேலும் பைரன் சிங், அர் அம்பாய் தெங்கால் என்னும் மெய்டேய் தீவிரவாதக் குழுவையும் பேணி வளர்த்து வந்தார். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான் குக்கி பெண்கள் மீதும், அவர்களின் வீடுகள் மீதும் நேரடியாகவே தாக்குதலைத் தொடுத்தனர் என்று கூறப்படுகிறது. தாக்குதல் மற்றும் எதிர்த்தாக்குதல் கள் என இரு தரப்பிலும் உள்ள மக்கள் பலியாகி இருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரம் வெடித்த தற்கு, பைரன் சிங் நடவடிக்கைகளே காரணமாகும். இதனை நரேந்திர மோடியும், பாஜக-வினரும் மூடி மறைத்திட விரும்புகிறார்கள். மாநில முதலமைச்ச ரும், மாநில அரசு நிர்வாகமும் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்று நன்கு தெரிந்தும், மாநில அரசாங்கம் சரியாக நிலைமையைக் கையாள வில்லை என்று கூறிக்கொண்டே ஒன்றிய அரசாங்கம் அதன் பங்கிற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளது.
2002 குஜராத் போல...
2002 வன்முறை வெறியாட்டங்களின்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி எப்படி நடந்துகொண்டாரோ அதே போன்றே மணிப்பூரில் பல வழிகளில் பைரன் சிங் நடந்து கொண்டிருந்திருக்கிறார். இவர்களின் பிளவுவாத இந்துத்துவா அரசியலே இனரீதியாக வேறுபட்டுள்ள மற்றும் உணர்ச்சிமிக்க மணிப்பூர் மக்களின் தற்போ தைய துன்பங்களுக்கு மூல காரணம் என்பது நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரியும். மேலும் மோடி எதேச்சதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான், தான் எவருக்குமோ, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திற்குமோ கூட, பதில் கூறப் பொறுப்புள்ளவர் என்று நினைத்திடவில்லை. மோடி அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றன. மணிப்பூர் நிலைமை குறித்து, நாடாளு மன்றத்தில் விவாதங்களை மேற்கொண்டு, அவற்றிற்கு மோடியைப் பதில் சொல்ல வைப்பதன்மூலம்தான், மணிப்பூர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஜூலை 26, 2023.
தமிழில்: ச.வீரமணி