articles

img

கொள்கைப் பகைவர்கள் - தொல்.திருமாவளவன் எம்.பி.,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாநில உரிமைகள் மாநாடு இன்றைக்குத் தேவையானது மட்டுமல்ல; பொருத்தமானதும் கூட. மாநில உரிமைகள் பறிப்பிற்கு எதிராக இந்தியா முழு வதும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கிறது. எப்போதும் நாங்கள் இடதுசாரிகளுக்குத் துணை நிற்போம். மதச்சார்பின்மை, மக்களின் பன்மைத்துவம், கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பு, வேற்றுமை யில் ஒற்றுமை என்ற கூறுகளைப் பாஜக வெளிப்படை யாகத் தயக்கமின்றி ஆணவத்தோடு சிதைத்து வருகிறது. சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க இந்தியைத் திணிக்கிறார்கள். சாதி வெறியைத் தூண்டுவதன் மூலம் இந்து வெறியைத் தூண்ட முடியும் என பாஜக நினைக்கிறது. மகாத்மா காந்தி ராம பக்தர். தான் இந்துவாக இருந்தாலும் நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டு மென விரும்பினார்.

ஆனால், இந்தியா இந்து ராஷ்டிர மாகத் தான் இருக்க வேண்டும் என விரும்பிய கூட்டம் அவரைச் சுட்டுக்கொன்றது. பாஜகவிற்குக் காங்கிரஸ் தேர்தல் எதிரி தான். ஆனால், கம்யூனிஸ்ட்டுகள், அம்பேத் காரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் அவர்களுக்குக் கொள்கைப் பகைவர்கள். கொள்கைப் பகைவர்களை ஒழிப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மாநிலங்கள் வலுவாக, சுதந்திரமாகச் செயல் பட்டால் தான் தேசம் வளமாக இருக்கும். இந்தக் கொள்கைக்கு எதிரானது பாஜக. 2024- நாடாளுமன்றத் தேர்தல் சாதாரணத் தேர்தல் அல்ல. ஒரு யுத்தம்; அறப்போர். இந்த யுத்தத்தில் பாசிச சனாதன சக்தியான பாஜகவை வீழ்த்துவோம்.