இந்தியாவில் தலித் மக்களின் உரிமைப் போராட்டங்களை உயர்த்திப் பிடித்து, நாடு தழுவிய முறையில் தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து சமர்புரிந்து வருகிறது, தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி (தலித் சோசன் முக்தி மஞ்ச்- டிஎஸ்எம்எம்). இந்த அமைப்பின் மூன்றாவது அகிலஇந்திய மாநாடு பீகார் மாநிலம் பெகுசராயில் டிசம்பர் 3,4,5 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் அறிக்கை, இந்தியாவில் தலித் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின் பிரதான அம்சங்களை தமிழில் தொகுத்து வழங்குகிறார், மாநாட்டில் அமைப்பின் அகில இந்திய துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள க.சுவாமிநாதன்.
8 ஆண்டு பா.ஜ.க ஆட்சி மூர்க்கத்தனமான கார்ப்ப ரேட் சுரண்டலை மையமாகக் கொண்ட நவீன தாராளமயக் கொள்கைகளை அமலாக்கி வரு கிறது. மனுவாத - பிராமணிய இந்துத்துவா ராஜ்ஜி யத்தை கட்டமைப்பது என்ற நோக்குடன் கார்ப்பரேட் - மதவெறி கூட்டணியை உருவாக்கியுள்ளது. மக்க ளின் வாழ்வுரிமை - வேலை மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தலித், ஆதிவாசி, சிறு பான்மை மக்களின் அரசியல் சாசன உரிமைகளும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.
தலித் - ஆதிவாசி மக்கள் மீதான ஒடுக்குமுறைகள்
தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், பல வடி வங்களிலான தீண்டாமைகள் சமூகத்தின் களங்க மாக நீடிக்கின்றன. 2014 இல் பா. ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இவை அதிகரித்திருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு - மதவெறிப் பாதையே. தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த அர சாங்க புள்ளி விவரங்கள் முழு சித்திரத்தை வெளிப் படுத்துவதில்லை. காரணம், ஒடுக்கப்பட்ட சமூகங்க ளின் வாழ்நிலை, காவல் துறை - அரசு நிர்வாகத்தின் சாதிய பாரபட்சம் ஆகியன ஆகும். தலித் மக்கள் மீதான வன்முறைகள் 33719 (2011) லிருந்து 50291 (2020) ஆக அதிகரித்துள்ளன. பா.ஜ.க ஆளும் மாநிலங்க ளில்தான் வன்கொடுமைகள், குற்றங்கள் அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் 95751 குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில்... 63116 பீகாரில்... 58945 இராஜஸ்தா னில்... 44469 மத்தியப் பிரதேசத்தில் ... 26881 ஆந்திராவில்...! கவலை தருவது எதுவெனில் 90 சதவீதமான வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது 2020 ஆம் ஆண்டின் நிலைமை.
இப்படி நிலைமை இருந்தும், வன்கொடுமை தடுப்பு சட்டமானது (POA) “பிளாக் மெயிலுக்கான ஆயுதம்” (Instrument for Blackmail) ஆக மாறி விட்டது என்று 2018 இல் உச்சநீதிமன்றம் கருத்து தெரி வித்தது. இக்கருத்தின் அடிப்படையில் வன் கொடுமை சட்டத்தை நீர்த்துப் போக வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பெருங் கோபம் எழுந்தது. ஏப்ரல் 2, 2018 பாரத் பந்த் முக்கியமான எதிர்வினை யாக அமைந்தது. பிரம்மாண்டமான தன்னெழுச்சி தலித் மக்கள் மத்தியில் எழுந்ததும், அரசு - உயர் சாதி கிரிமினல்கள் வன்முறையை ஏவி விட்டது மான இரண்டு நிகழ்வுகளையும் தேசம் கண்டது. தலித் துகளை தாக்கியவர்கள், கொலை செய்தவர்கள் யாரும் அன்றைய தினம் கைது செய்யப்படவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான தலித் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்டனர். தலித் வீடுகள் தாக்கப்பட்டன. பெண்கள், சிறுவர்கள் இழிவு செய்யப்பட்டனர். பா.ஜ.க அரசின் மனுவாத முகம் அப்பட்டமாக வெளிப்பட்டது. இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சட்ட திருத்தம் வாயிலாக சரி செய்யப்பட்டது.
எத்தனை எத்தனை கொடுமைகள்
குஜராத் உன்னாவ்வில் மாட்டுத் தோலை உரித்தார் கள் என்று கூறி தலித் ஒருவர் கட்டி வைத்து சாட்டை யால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார். நாடு முழுக்க மாட்டுத் தோலை உரிக்கிறார்கள் என பல வழக்கு கள் தொடரப்பட்டுள்ளன. இது தவிர தலித்துகள் மீசை வளர்க்கிறார்கள், குதிரை மீது மணமகன் ஊர்வலம் நடத்துகிறார்கள், உயர் சாதி ஆசிரியரின் பானையில் தலித் மாணவன் தண்ணீர் குடித்து விட்டான், டாக்டர் அம்பேத்கர் படத்தை இரண்டு சக்கர வாகனங்களில் வைத்திருக்கிறார்கள், நியாயமான கூலி கேட்கிறார் கள் எனப் பல காரணங்களை முன்வைத்து தாக்கப்படு வது, உயிர் பறிக்கப்படுவது என தீண்டாமைக் கொடுமை கள் அரங்கேறியுள்ளன. மொட்டை அடிப்பது, முகத்தில் கரி பூசுவது போன்ற தண்டனைகள் போலி திருட்டுக் குற்றம் சாட்டி அரங்கேற்றப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுக்க 347 சுகாதா ரப் பணியாளர்கள் கழிவு நீர் அகற்றுவதில் உயிர் இழந்துள்ளனர். இதிலும் உத்தரப் பிரதேசத்திற்கே முதல் இடம். இது போன்ற இழிவான பணிகள் தலித்துகள் மீது சுமத்தப்படும் அதே வேளையில், அரசின் உயர் பதவிகளில் 4 % தலித்துகளே உள்ள னர் என்பது கவனிக்கத்தக்கது. வேலையின்மை தலித்துகள் மத்தியில் 2019 இல் 6.4 சதவீதம். மற்றவர்கள் மத்தியில் 5.8 சதவீதம்.
தலித் பெண்கள், குழந்தைகளின் கதி
தலித் பெண்கள், சிறுமிகள் மீது தாக்குதல்கள் 2015 - 2020 காலத்தில் 45 % அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 தலித் பெண்கள் பாலியல் பல வந்தத்திற்கு உள்ளாகிறார்கள். பாலியல் வன் குற்றங் கள் பலவற்றில் கொலைகளும் சேர்ந்தே நிகழ்கின்றன. உ.பி. மாநிலம் ஹத்ராஸ் கொடூரம் ஒரு உதாரணம். ஒடுக்கப்பட்ட ‘வால்மீகி’ சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் நான்கு தாக்குர் சாதி கும்பலால் பாலியல் பலவந் தத்திற்கு உள்ளானார். உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்ய நாத்தும் தாக்குர் சாதியைச் சேர்ந்தவர். குற்ற வாளிகளை அப்பாவிகள் என்று அவர் அறிவித்தார். நீதி கிடைக்க விடாமல் என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் அரசு நிர்வாகம் செய்தது. உயிர் பறிக்கப்பட்ட அப்பெண்ணின் உடல் வலுக் கட்டாய மாக உறவினர்களிடமிருந்து பறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி நள்ளிரவில் எரிக்கப்பட்டது. நாடு முழுவதும் தலித் பெண்களின் ஆரோக்கிய மும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையின்படி இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்ட 25 - 49 வயதுக்கு உட்பட்ட பெண்க ளில் 55.9 % தலித் பெண்களே. 70. 4 % தலித் பெண்கள் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளில் பாரபட்சத்தை எதிர்கொள்கிறார்கள். 52.5 % தலித் பெண்கள் மட்டுமே மருத்துவர்கள் முன்னிலையில் பிரசவம் நடந்த தாக கூறி உள்ளனர். இதுவே உயர் சாதி பெண்கள் மத்தியில் 66.8 %. கோவிட் காலத்தில் வேலை இழந்த 17 லட்சம் பெண்களில் மூன்றில் ஒருவர் தலித். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் தாக்கப் படுகிறது. ஊராட்சி தலித் பெண் தலைவர்கள் சாதிய சக்திகளின் தலையீட்டால் செயல்பட முடியவில்லை.
24 தலித் மாணவர்கள் தற்கொலை
தலித் இளைய தலைமுறையினர் கல்வி நிலை யங்களில் கொடூரமான பாகுபாடுகளுக்கு ஆளாகி றார்கள். அரசு ஆதாரப் பள்ளிகளில் தலித் குழந்தை கள் உணவுக்கு தனியாக உட்கார வைக்கப்படுகி றார்கள். ஒரே பாத்திரங்களை புழங்க முடிவதில்லை. தரையை சுத்தம் செய்வது, டாய்லட் கழுவுவது போன்ற வேலைகளை தலித் குழந்தைகள் மீது சுமத்துகிறார் கள். ஐ. ஐ.டி, மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழ கங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும் இது தான் நிலைமை. 2016 ஹைதராபாத் மத்தியப் பல்க லைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை சாதிய பாரபட்சத்தை வெளிக் கொணர்ந் தது. 2014 - 21 காலத்தில் மட்டும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் 24 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, தலித் விரோத உள்ள டக்கம் கொண்டது.
எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்கள்
1980 இல் துவங்கப்பட்ட திட்டங்கள் இவை.தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப இத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 2016 - 2019 காலத்தில் 51 சதவீதம்தான். ஒதுக்கீடு செய்யப் பட்ட தொகையில் 21 சதவீதம் மட்டுமே ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு செலவிடப் பட்டுள்ளன. 2017 - 18 இல் திட்டம் மற்றும் திட்ட மில்லா செலவின பட்ஜெட்டுகளை இணைத்த பின்னர் இன்னும் ஒதுக்கீட்டில் வெட்டு ஏற்பட்டுள்ளது.
வறுமை அதிகரிப்பு
கடந்த 10 ஆண்டுகளில் வறுமை விகிதம் தலித் - பழங்குடி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆக்ஸ் போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு அறிக்கை யின்படி 2021 இல் வறுமை விகிதம் பழங்குடியினர் மத்தியில் 50.6%, பட்டியல் சாதியினர் மத்தியில் 33.3 %, மற்றவர்கள் மத்தியில் 15.6 %. 2013 கணக்கின்படி 21 சத வீதமாக உள்ள உயர் சாதியினர் மொத்த தேச செல்வத் தில் 45 % ஐ வைத்துள்ளனர். 16 % உள்ள பட்டியல் சாதியி னர் வெறும் 7 % தேச செல்வத்தையே வைத்துள்ளனர்.
நில உரிமை
மோடி அரசு நிலச் சீர்திருத்தச் சட்டங்களைத் திருத்த மாநில அரசுகளை வற்புறுத்துவதன் மூலம் தலித் - பழங்குடி மக்களின் நில உரிமைகளை நீர்த்துப் போகச் செய்ய முனைகிறது. “நில வங்கிகளை” உரு வாக்குவதன் மூலம் கட்டாய நிலம் கையகப் படுத்துதலை உறுதி செய்ய நினைக்கிறது. 2018 -19 தேசிய சர்வே அமைப்பின் தகவல்கள்படி 80 சதவீத தலித்துகளிடம் நிலமே இல்லை. மொத்த நிலத்தில் வெறும் 9.5 % மட்டுமே தலித்துகள் கைகளில் உள்ளன.
சமூக நீதி
பல வழிகளில் சமூக நீதி விழுமியங்கள் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றன. வால்மீகி கூடுகை, பஸ்மான்டா இஸ்லாமியர் கூடுகை என்று ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்கிறது. இந்த சமூகங்களின் தலைவர்களுக்கு பதவி, சலுகைகள் என வலை வீசப்படுகின்றது. தலித் கிறித்தவர்களை, இஸ்லாமியர்களை பட்டியல் சாதிப் பிரிவுகளில் இணைப்பது குறித்து ஒரு ஆய்வுக் குழு அமைத்திருப்பது, பாஜகவின் தேர்தல் கணக்கே ஆகும். இப்படி இவர்கள் செய்யும் சமூக ஊடாட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை வளைக்கும் நோக்கம் கொண்டதே.
ஒன்றுபட்டு களமிறங்குவோம்!
தலித் உரிமைகளுக்காக போராட முன்வரும் இயக்கங்கள், சக்திகள், தனி நபர்கள் அனைவரை யும் ஒன்றிணைக்க தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி உறுதியேற்கிறது. எல்லோரும் வாருங்கள். மனுவாத - மதவெறி - கார்ப்பரேட் சக்திகளை எதிர்த்துப் போராடுவோம். அரசியல் சாசனத்தின் விழுமியங்களான மதச் சார் பின்மை, ஜனநாயகம், சமூக நீதி, கூட்டாட்சி காக்கவும், அவற்றை தடம் புரள செய்ய முனையும் சக்திகளை முறியடிக்கவும் உறுதி ஏற்போம்.