2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சாங்கத்தை வெளியில் இருந்து ஆதரிப்பது என முடிவெடுத்த இடதுசாரிகள், இந்திய தேசத்தில் 50 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருக்கிற பல கேள்விகளுக்கு விடை காண்பதற் கான குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை நிபந்த னையாக முன் வைத்து அவ்வரசு தொடர ஆதரவளித் தது. அதில் ஒன்று, சிறுபான்மை மக்களின் வாழ் நிலை யில் மேம்பாடு அடையச் செய்வது. அதனடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சிறுபான்மை மக்களின் வாழ்நிலையை பற்றிய நிலைகளை அறிந்து சொல்வதற்காக நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு அமைத்தது. இந்தக் குழு அரசிடம் இருக்கிற தரவுகள் அடிப்படை யில் ஒரு அறிக்கையை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அரசுக்கு வழங்கியது. அரசு இவ்வறிக்கையில் இருக் கிற நிலைமைகளை பரிசீலித்தது. கல்வி, வாழ்க்கை நிலையில், பாதுகாப்பில் மிகவும் பின்தங்கிய நிலை யில் இருக்கிற சிறுபான்மை மக்களை பற்றிய உண்மை வெளியுலகுக்கு அப்போதுதான் தெரியவந்தது. சச்சார் குழு தரவுகள் அடிப்படையில் சிறுபான்மை மக்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஐக்கிய முற்போக்கு இடதுசாரி கூட்டணி அரசு, பிரதம மந்திரியின் - 15 அம்சத் திட்டம் என்ற பெயரில் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவது, பாதுகாப்பு, குடியிருப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை வெளியிட்டது.
4 சதவீதமானவர்களே மதரசா பள்ளிகளில்...
சிறுபான்மையினரில் 51 சதவீதமான மாணவர்கள் மட்டுமே கல்வி பெறுகிற நிலை உள்ளது. எனவே ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை சிறு பான்மையினர் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி அனைத்து மட்டங்களிலும் உறுதி செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் முன்னுக்கு வந்தது. அந்த அடிப்படையில் சிறுபான்மை மாண வர்கள் கல்வி பயில்வதற்கான வாய்ப்பில்லாத பகுதி கள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் சிறுபான்மை மக்கள் குவியலாக வாழ்கிற பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 30 சதவீதமான இடத்தில் ஒரு பள்ளிக் கூடம் கூட இல்லை என்ற நிலைமை இருந்தது. மேலும் பொதுவாக மக்கள் மத்தியில் இஸ்லாமி யர்களுக்கு மசூதிகளை ஒட்டி இருக்கிற இடங்களில் மதரஸா பள்ளிகள் இருப்பதாகவும், அப்பள்ளிகளில் தான் அம்மாணவர்கள் படிப்பதையே விரும்புகிறார் கள் என்றும் ஒரு வலுவான காரணம் பிரச்சாரம் செய்யப் பட்டு வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் ஜனத்தொகை யில் வெறும் நான்கு சதவீதமான பேர் மட்டும்தான் மதரஸா பள்ளிக்கு செல்லுகிற நிலைமைஇருக்கிறது. அதேபோல சிறுபான்மை மாணவர்கள் பள்ளிக் கூடத்திற்கு வராமல் இருப்பதற்கு அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலைமை ஒரு காரண மாக இருக்கிறது. குறிப்பாக சிறுபான்மை மாணவர்கள், இஸ்லாமியக் குடும்பத்தினர் பூர்வ தொழில்களை, குடிசைத் தொழில்களை, குடும்பம் சார்ந்த கூட்டு உழைப்பால் உருவாக்கப்படுகிற வருமானம் அளிக் கிற தொழில்களையே செய்து வருவதால் அவர்கள் சிறு வயது மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் தடை இருப்பது கண்டறியப்பட்டது. எனவே சிறுபான்மை மாணவர்கள் கல்வி நிலையத்தில் வந்து படிக்க வேண்டு மெனில் அக்குடும்பத்திற்கு ஏற்படுகிற பொருளாதார இழப்பை சரி செய்வது அவசியம். எனவே சிறுபான்மை யினர் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி க்கு வருகிற 10 மாதங்களும் ஒரு சிறு தொகை உதவி யாக 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சிறுபான்மையினர் மாணவர்கள் பள்ளிக்கு வருகிற நிலைமையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது.
உதவித் தொகை திடீர் நிறுத்தம்
ஆனால் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் திடீரென்று சிறு பான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்தி யாவில் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் இருக்கி றது. இது அனைவருக்கும் கல்வி அளிப்பதை உறுதி செய்கிறது என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக இலவசமாக ஆரம்பக் கல்வி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டு இருக்கிறது. இன்றைக்கு பள்ளிகளுக்கு வருகிற 65 சதவீதமான சிறுபான்மை மாணவர்களில் வெறும் 60 சதமான மாணவர்கள் மட்டும்தான் அரசுப் பள்ளிக ளில் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீதம் இருக்கிற 40 சதவீதமான மாணவர்கள் தனியார் பள்ளிக ளில் தான் படிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் படிப்பதற்கு பணம் கட்டித் தான் படிக்க வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் ஆரம்பக் கல்வி இந்தியா வில் இலவசமாக வழங்கப்படுவது போன்று ஒரு தோற்றத்தை மதவெறி பாஜக அரசு உருவாக்க முயற் சிக்கிறது. சட்டம் இருக்கிறது. ஆனால் இலவசக்கல்வி இல்லை இது நாடறிந்த உண்மை. எனவே சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை என்பது கட்டாயம். அது அம் மாணவர்களை பெரும் எண்ணிக்கையில் கல்வி வளா கத்தை நோக்கி வர வைப்பதற்கு பேருதவியாக அமைந் தது. தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின்அனுப வங்கள் அதைத்தான் காட்டுகின்றன. இது போன்ற பள்ளிக்கு வருகிற மாணவர்களுக்கு செலவு செய்யப் படுகிற பணம் முதலீடாகப் பார்க்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது
தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் சிறு பான்மையினர் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். 5 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிற ஒட்டு மொத்த உதவித்தொகை 88 கோடி ரூபாய் மட்டும் தான். இதை தமிழக அரசு தொடர்ந்து விரும்பி வழங்கி வரு வது பாராட்டுக்குரியது. இந்தியா முழுவதும் கூட கடந்த ஆண்டுகளில் இது போன்ற ஆரம்பக் கல்வி மாணவர்க ளுக்கான சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட செலவு வெறும் 2000 கோடி மட்டும் தான். ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்கிற நாட்டில் இது ஒரு சிறு தொகையேயாகும். அது மட்டுமல்ல, இந்தி யாவில் பல்வேறு துறைகள் மூலம் கல்வி வரியாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலிக்கப்படு கிறது. அவ்வாறு வசூலிக்கப்படுகிற பணம் உரியவர்க ளுக்கு கிடைப்பதுதான் நியாயமாக இருக்கும். ஒரு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்பது அவசியமாகும். கல்வி உரிமைச் சட்டத்தை சொல்லி உதவித் தொகையை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்து வது என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் இது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், பட்டிய லின - பழங்குடியின மாணவர்களுக்கும் பெரும் பாதிப் பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த உதவித்தொகை நிறுத்தமும், மதவழிச் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத் தர்கள், பார்சிகள் என்பதோடு முடிந்து விடவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இதே போன்ற கல்வி உதவித்தொகை பெற்று வந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், கழிவகற்றும் சுகாதா ரப் பணியாளர் குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக் கும் நிறுத்தியுள்ளது. வறிய நிலையில் கேள்வி கேட்க வாய்ப்பற்றவர்களை குறிவைத்து தாக்கும் கொடுங் கோல் ஆட்சியின் வெளிப்பாடாகும் இது.
மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை
சிறுபான்மை மாணவர்களை ஆரம்பக் கல்வியி லேயே பள்ளி வளாகத்தை விட்டு தூக்கி எறிய முனைந்திருக்கும் மதவெறி பாஜக இப்போது உயர் கல்வி பயில்வதற்கும், ஆராய்ச்சியில் ஈடுபடுவதற் கும் வாய்ப்பளிக்கும் எம்பில், பிஎச்டி படிப்பதற்கான உதவித்தொகையை நிறுத்துவதாக நாடாளுமன்றத் தில் இத்துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி அறி வித்திருக்கிறார். நீதியரசர் சச்சார் குழுவின் ஆலோசனை அடிப்ப டையில் உருவாக்கப்பட்ட மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கி றது. படித்து முன்னேறி, இந்திய சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடத் தயாராக இருக்கிற இஸ்லாமி யர்களை, கிறிஸ்தவர்களை, சீக்கியர்களை, பார்சிக ளை, ஜைனர்களை, புத்த மதத்தைச் சார்ந்தவர்களை இந்த தேச சேவையிலிருந்து விலக்கி வைக்கிற வேலை யை பாஜக அரசு செய்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆராய்ச்சி மாண வர்களுக்கான இந்த உதவித்தொகை அரசாங்கத்தால் நடத்தப்படுகிற, இது போன்ற உயர் கல்வியில் சேர்வ தற்கான தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற வர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. சிறு பான்மையினர் என்பதற்காக இது வழங்கப்பட வில்லை. உயர்கல்வித் தகுதி இருக்கிற மாணவர்க ளில் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒரு உதவியாக இது வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.200 கோடியில் 2000 சிறுபான்மையின மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சி மையங்களில் தங்களது ஆய்வுப் பணியை நடத்தி வரு கிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்கிற ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பொது சமூகத்திற்கானது. கடந்த சில ஆண்டுகளாகவே மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை 2000 மாணவர்கள் என்பதிலிருந்து குறைக்கப்பட்டு 2019-2020 ஆம் ஆண்டு 100 கோடி ரூபாயில் 1251 மாணவர்களுக்கும் 2020-2021 ஆம் ஆண்டு வெறும் 74 கோடி ரூபாயில் 1075 மாணவர்களுக்கும் எனவும் குறைக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய நிலையில் பாதிக்கும் குறைவாக 738.85 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுகளும் 2022-23 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவர்களை ஆராய்ச்சிக் கல்வியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற மத வெறிக் கொள்கையின் விளைவாக இந்த ஆண்டு முதல் இந்த வாய்ப்பு சிறு பான்மை மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஒட்டு மொத்த தேச வளர்ச்சிக்கு எதிரானது.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு