வாஷிங்டன், ஏப். 18- உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி பற்றிய தனது கணிப்பை மறு பரிசீலனை செய்யப்போவதாக சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) அறிவித்திருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் மோதலைக் கார ணம் காட்டியே இந்த முடிவை ஐ.எம்.எப். எடுத்துள்ளது. நடப்பாண்டில் கிட்டத்தட்ட 143 நாடுகளில் கடும் பொருளாதார பாதிப்பு இருக்கப்போவதாக ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியுள்ளார். அடுத்த வாரத் தில் ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி ஆகிய வற்றின் கூட்டங்கள் ந்டைபெற உள்ளன. இந்தக் கூட்டங்கள் பற்றிச் செய்தியா ளர்களிடம் உரையாடுகையில்தான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், எளிமையாகச் சொன்னால், நெருக்கடியின் உச்சத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஏழு வாரங்க ளில் இரண்டாவது பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்துள்ளது. இப்போதுதான் கொரோனா பாதிப்பிலிருந்து மீளத் துவங்கியுள்ளோம். அதற்குள் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி பாதிப்பை உரு வாக்கிவிட்டது. கொரோனா பாதிப்பிலி ருந்து மீண்டு வந்த நிலையில், கிடைத்த பலன்களை இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. உலகம் பின்னோக்கிச் செல்கிறது என்று குறிப்பிட்டார். ஜனவரி 2022ல் ஐ.எம்.எப்.வெளி யிட்ட உலகப் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், “உலகப் பொருளாதாரம் 4.4 விழுக்காடு உயரும். ஏற்கனவே செய்திருந்த மதிப்பீட்டில் இருந்து 0.5 விழுக்காடு அளவிற்கு குறைவான வளர்ச்சி இருக்கும்” என்று தெரிவித்தி ருந்தது. கொரோனா பாதிப்பால் அதிக பணவீக்கம், எகிறிய கடன் மற்றும் நிலை யற்ற தன்மை ஆகிய காரணங்களால் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைக்க வேண்டி வந்ததாக ஐ.எம்.எப். கூறியது. அப்போதிருந்த நிலைமையை விட தற்போது நிலைமை மோசமாகி விட்டது என்று கூறும் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, “போர் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் நிலைமை மோசமாகி விட்டது” என்கிறார்.
எரிபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் லட்சக்கணக் கான மக்கள், குறிப்பாக குறைவான வரு மானம் ஈட்டுபவர்கள் பெரும் நெருக்கடி யில் சிக்கியிருக்கிறார்கள். அசமத்து வத்தை இந்த நெருக்கடி அதிகரித்து விடும் என்றும் தங்கள் அறிக்கையில் ஐ.எம்.எப். எச்சரித்துள்ளது. தனது அடுத்த பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை ஏப்ரல் 19 அன்று வெளியிடப்போவ தாகவும் தெரிவித்துள்ளனர்.