என் இணையர்: விருது நகர் கணேஷ் சார் எழு துன ஓம்.. க்ரீம்.. ஐஸ்கிரீம்..புத்த கத்தை முழுமையாகபடிச்சுட்டேன்.. நான்: அதுக்குள்ளயா...? விருதுநகர் கணேஷ் இப்போ கோவை கணேஷ் ஆயிட்டாரு... புத்தகத்தை கீழ வைக்கவே விடலை கணேஷ் ... கைகளும் புத்தகமும் கண்களும் அந்த அருமையான உரையாடல்ல விரிந்து போயின.. அப்படியா... ஆமா... நீங்க அந்த புத்தக ரிலீஸ் பங்க்சன்க்கு கோயமுத்தூர் போறப்ப கூட வெயிலாயிருக்கே அப்படின்னு சொன்னேன்... ஆனா இப்போ இந்த புத்தகத்தை படிச்ச பின்னாடி நான் அந்த பங்க்சனை மிஸ் பண்ணிட்டதா பீல் பண்றேன்... அப்படியா... ? புத்தகத்தோட தலைப்பு, அட்டை வடிவமைப்பு, அட்டை கலர்... புத்தகத்தை நீங்க குடுத்தவுடனேயே கைகள் புரட்ட கண்கள் படிக்க ஆரம்புடிச்சுடுச்சு... நான் குடுத்த புத்தகத்தை வாங்குன அத்தனை பேரும் இதையே சொன்னாங்க... நாம ஏற்கனேவே குழந்தைகள் மாதிரி தான்...ஆனா அட்டையிலேயே “குழந்தை களுக்கு மட்டுமல்ல...” அப்படின்னு வேற போட்டிருக்காரா... என்னதான் எழுதியிருக்காருன்னு படிக்கத் தூண்டுது...
அப்படி என்னதான் இருக்கு...? படிச்சு முடிச்சதும் என்ன இல்லைன்னு தோணுது...! சயின்ஸ் இருக்கு... சமூக சிந்தனை இருக்கு... நக்கல் இருக்கு... நையாண்டி இருக்கு.. பெண்ணியம் இருக்கு... உண்மை மட்டுமே இருக்கு... எல்லாத்துக்கும் மேலே குழந்தைத் தனம் இந்த எழுத்துல இருக்கு... கூடவே ஈஸியா சொல்லுற மெச்சுரிட்டி இருக்கு... அடேங்கப்பா...! நிஜமாவா... ? சிலிண்டர்ல இருந்து அல்லது அடுப்புல இருந்து சமையல் கேஸ் லீக் ஆனதுன்னா வருகிற வாசனை என்ன என்கிற விஞ்ஞானம்...கூடவே சத்துணவு ஆயா வைக்கும் சாம்பார் வாசனையை மூளைக்குள் செலுத்திய நுட்பம்... தொழிலாளர்களை இப்படியெல்லாம் நினைவு கூற முடியும்னு எப்படி தோணுது...! அந்த பகல் நட்சத்திரம்... அதான் சூரியன்... நல்ல உரையாடல்... பகல்ல தோன்றும் நட்சத்திரம் “நயன்தாரா” என்று குழந்தைகள் வாயிலாக ஆசிரியர் சொல்வது நையாண்டியின் உச்சம். ஆமால்ல... நெப்போலியன் பற்றி.. பகத்சிங்கை காப்பாற்றிய துர்கா தேவி பற்றி... கொஹினூர் வைரம் பற்றி...கணேஷ் குழந்தைகளோட வரலாறு எப்படி பேசணும்னு போகிற போக்கில சொல்றாரு... அதே போல “பந்து உதைக்க லாம் வா” கதையாடல்ல கால் பந்து, கிரிக்கெட் மட்டை போன்ற விளையாட்டு பொருட்களின் உற்பத்தி பற்றி பேசிக்கிட்டே போறாரு கணேஷ்... அந்த சிறுவனின் தந்தையின் அறிவாற்றல் பற்றி விளக்கப்படுது... ஆனால் கடைசியில் “காலிங் பெல்” தேர்வு என் அம்மாவுடையது என்று சொல்லிச் செல்வது மிக நுட்பமான இடம்... பெண்ணியம் பற்றிய தெறிப்பு ஆங்கே தெரிகிறது.
நானும் இதை யோசித்தேன்... நீங்களும் சரியா சொன்னீங்க... சாவித்திரிபா பூலே, சரோஜினி நாயுடு போன்ற பெண் போராளிகள் பற்றி குழந்தைகள் மனதில் நிற்கும்படி இப்படியும் உரையாட முடியுமா...? கணேஷ் குழந்தைகள் செயல்பாட்டாளர்... அவர் குழந்தைகளோடு நடத்திய உரை யாடலின் தொகுப்பு தான் இந்த புத்தகம்... சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி பற்றி இவ்வளவு எளிமையாக சொல்லமுடியுமா...? ஆச்சர்யமாத்தான் இருக்கு... அது என்ன மாயமோ.. என்ன மந்திரமோ தெரியல... புத்தகம் வெளியீட்டு மேடையிலேயே 2065 பிரதிகள் வித்திடுச்சி... ஓம்.. க்ரீம்.. அப்படின்னு மந்திரம் போட்டிருப்பாரோ கணேஷ்...! புத்தகத்துல முன்னுரை பொருத்தமாக திருமதி லதா அவர்கள் எழுதியிருக்காங்க... கணேஷோட மூத்த அண்ணன் திரு குருசாமி அவர்கள் அன்பை பதிவு செய்திருக்கிறார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. சீதாலட்சுமி கணேஷோட தன்னலமற்ற சேவையை பாராட்டியிருக்காங்க... 50 ரூபாயில் இப்படி ஒரு புத்தகமா...? ஜி ஆல்டர் நிறுவனத்திற்கு ஒரு “ஓ...” போடலாம். நான்: கணேஷ் இந்த புத்தகத்துக்கு ஒரு மதிப்புரை எழுதித்தர சொல்லியிருக்கார். என் இணையர்: நாம பேசினதே ஒரு ரெவ்வியூ தானே... அப்படியே அனுப்புங்க.. உரை யாடல் புத்தகத்துக்கு உரையாடல் ரெவ்வியூ...